search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோர்வு"

    பல நேரங்களில் காரணமின்றி தூங்கி எழுந்தவுடன் நாம் சற்று சோர்வாக உணர்வோம். நம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பல எளிய முறைகள் உள்ளன.

    பல நேரங்களில் காரணமின்றி தூங்கி எழுந்தவுடன் நாம் சற்று சோர்வாக உணர்வோம். ஒரு கப் காபி கிடைத்தால் சுறுசுறுப்பாக இருப்போமே என்று தோன்றும். ஆனால் நம்மை சுறுசுறுப்பாக்க காபி தான் அவசியம் என்பதல்ல. நம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பல எளிய முறைகள் உள்ளன.

    * சிறிது நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி நில்லுங்கள். இது உங்ள் வைட்டமின் டி சத்தினை கூட்டும். மனநிலையினை உற்சாக மாக்கும். உடலையும், மனதினையும் சுறுசுறுப்பாக ஆக்கி விடும். அது மட்டுமல்ல இவ்வாறு செய்வது இரவு தரமான தூக்கத்தினை அளிக்குமாம். காலை இளம் சூரிய ஒளிக்கதிர் சில நிமிடங்கள் நம் மீது படுவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைக்கும்.

    * அறையின் சீதோஷ்ண நிலையில் இருக்கும் நீரில் குளியுங்கள். இது ஒரு மின் அதிர்வுகளை மூளைக்குக் கொடுக்கும். முகத்தினை குளிர்ந்த நீரினால் கழுவுவதும் சிறந்த ரத்த ஓட்டத்தினை ஊக்குவிக்கும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

    * சிரிப்பு போன்ற சிறந்த மருந்து கிடையாது. சிரிப்பு உங்கள் உடலில் ஆக்ஸிசன் அளவினைக் கூட்டும். இருதயம், நுரையீரல் நன்கு இயங்கும். ஸ்ட்ரெஸ் நீங்கும். காப்பியினை விட மிகச்சிறந்தது. நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்களோடு இருங்கள்.

    * சோர்வுக்கு ஒரு காரணம் உடலில் நீர் சத்து குறைதல் ஆகும். அதுவும் இரவு தூக்கத்தில் தொண்டை வறண்டு இருக்கும்.  எனவே பல் துலக்கிய பின் ஒரு கிளாஸ் நீர் பருகுங்கள்.

    * சிறிது நேரம் நடங்கள். துரித நடை இல்லாவிடினும் இயற்கையான முறையில் திறந்த வெளியில் சிறிது நேரம் நடங்கள். இது ரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

    * தியானம் தினம் 20 நிமிடங்கள் செய்யுங்கள். இது உங்கள் சக்தி அளவினைக் கூட்டும்.

    ஆக இயற்கை வழியில் சக்தியினைக் கூட்டுவது மிக எளிதானதே. செயல்படுத்துவோம்.
    இரவில் சரியாக தூக்கம் இல்லை என்றால் சோர்வு ஏற்படும். எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    தூங்குவதற்கு உபயோகப்படுத்தும் தலையணையை குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றிவிட வேண்டும்.

    மெத்தையை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றியமைக்க வேண்டும்.

    படுக்கை அறையில் நிலவும் வெப்பநிலையும் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அங்கு மிதமான வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இரவு நேரங்களில் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு பொழுதில் கண்களில் அதிக வெளிச்சம்படக்கூடாது. செல்போனில் இருந்து உமிழப்படும் வெளிச்சம் தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனின் உருவாக்கத்தை தடுத்துவிடும்.

    அதனால் படுக்கை அறைக்குள் செல்போனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

    மதுப்பழக்கமும் தூக்கத்தை தடுத்து சோர்வை ஏற்படுத்திவிடும். மதுக்குடிக்கும்போது அதிலிருக்கும் ஆல்கஹால் தூக்கத்தை தூண்டும் வகையில் செயல்படும். சில மணி நேரங்களிலேயே எதிர்மறையாக செயல்பட்டு தூக்கத்தை தடுத்து சோர்வை உண்டாக்கிவிடும்.

    அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியமானது. அது சோர்வை விரட்டி உடலை புத்துணர்ச்சிக்குள்ளாக்கும்.

    தூங்கும் நேரத்தையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்க சென்றுவிட வேண்டும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்யக்கூடாது. 
    சோர்வு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடியது; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சோர்வு எனும் உணர்வானது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய சாதாரணமான உணர்வாகும்; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் அவர்களால் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது; குழந்தைகள் சோர்வாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொண்டு வருவது தான். ஆகையால் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டியது அவசியம்..!

    சரியான உறக்கம் கொள்ளாமல் இருப்பதும், சரியான நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழாமல் இருப்பதும் உடலில் சோர்வை ஏற்படுத்தும் காரணங்களாக உள்ளன. எனவே குழந்தைகள் நேரத்திற்கு உறங்கி எழுவதை கவனித்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு அளித்து, அவர்களை உறங்க செய்து, சுறுசுறுப்புடனும் இருக்கும் வண்ணம் அன்றாட பழக்க வழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள் பிறந்த பின் தங்களது வளர்ச்சி காலகட்டத்தில் சரியாக வளர புரதச்சத்து அவசியம்; ஒரு நாளைக்கு குறைந்தது 800 - 1000 கலோரிகளையாவது குழந்தைகள் உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் உடலில் சோர்வு ஏற்படாமல் காத்து, அவர்களை உற்சாகமாக இருக்க உதவும்.

    குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்டிப்பாக அவர்களால் சரியாக செயலாற்ற முடியாது; எப்பொழுதும் சோர்ந்து போய் தான் காட்சி அளிப்பர். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதே! நம் உடல் சீராக, சரிவர இயங்க அதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம்; ஆகவே இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்ச்சத்தினை உங்கள் குழந்தைகள் சரியாக பெறுகிறார்களா என்று பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்
    ×