search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிமேடு"

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது.
    ராயபுரம்:

    கடலோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது. இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுனாமி தாக்கப்போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    இது சுனாமி ஒத்திகை என்பதை அறியாத அந்த பகுதி மக்களில் பலர் பதட்டம் அடைந்தனர். பின்னர் ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டதும் ஆர்வமுடன் அதை கவனித்தனர்.

    இந்த ஒத்திகையின்போது சுனாமி தாக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? உயிரை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீயணைப்பு படையினர், மருத்துவ குழு, போலீஸ், மின்வாரிய ஊழியர்கள், வருவாய் துறை உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் செய்து காட்டினார்கள்.

    பிளாஸ்டிக் படகு மூலம் மக்களை மீட்பது, காயம்பட்டவர்களை ஸ்ட்ரெக்சர் மூலம் தூக்கிச் செல்வது போன்றவற்றை நடித்து காட்டினார்கள். பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. காலை 9.30 மணிமுதல் மதியம் ஒரு மணி வரை இந்த ஒத்திகை நடந்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    பெய்ட்டி புயல் காரணமாக காசிமேடு மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். #KasimeduFishermen

    சென்னை:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகிறார்கள்.

    பெய்ட்டி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் குறைந்த தூரத்தில் இருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    ஆனால் ஆழ்கடலில் மீன்பிடித்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த 300 மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை அருகில் உள்ள ஆந்திரா பகுதிக்கு செல்லுமாறு வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    300 மீனவர்கள் அங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். காசிமேடு மீனவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுதா தெரிவித்தார். #KasimeduFishermen

    காசிமேட்டில் கப்பல் ஊழியரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெலஸ்டின் ஜோஷ்யன்.

    இவர் பாரிமுனையில் உள்ள கப்பல் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கம்பெனி வேலையாக எண்ணூர் சென்றார்.

    நள்ளிரவு 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் காசிமேடு எக்ஸ்யூஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் அவரை வழி மறித்தது.

    ஜெலஸ்டின் நின்றதும் அவரிடம் கத்தியை காட்டி, பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெலஸ்டினை கத்தியால் தாக்கி, அடித்து உதைத்தனர்.

    அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்குள் வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்கள் ஜெலஸ்டின் மோட்டார் சைக்கிள் மீது கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த ஜெலஸ்டின் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி கும்பலை தேடி வருகிறார்கள். இந்த பகுதியில் போலீசார் இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீட்டில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    காசிமேடு காசிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தேசப்பன். இவர் குண்டர் சட்டத்தில் 13 முறை ஜெயிலுக்கு சென்றவர்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த தேசப்பன், பின்னர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. போலீஸ் நிலையத்திற்கும் செல்ல வில்லை. கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ரவுடி தேசப்பன் காசிமேட்டில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் கண்ணப்பன் உத்தரவுப்படி ரவுடி தேசப்பனை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

    காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் தலைமையில் துப்பாக்கியுடன் சென்ற போலீசார், தேசப்பன் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு தேசப்பனுடன் அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் இருந்தனர்.

    இதில் தேசப்பன், அவரது கூட்டாளிகள் கவுதம், வேலு மணி, சக்திவேல் ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விக்னேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

    கைதான பிரபல ரவுடி தேசப்பன் 13 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு சென்றவர். இவர் மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன.

    கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே, நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடிய விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆடி மாதம் அம்மனுக்கு படையல் செய்வதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்கள் விலை உயர்ந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். #FishPrice
    திருவொற்றியூர்:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன்கள் வரத்து அதிகளவில் இருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூழ் ஊற்றி, இரவில் அம்மனுக்கு மட்டன், மீன் படையல் வைத்து வழிபடுவார்கள்.

    ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அம்மனுக்கு படையல் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீன்பிரியர்கள் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடிதுறைமுகத்தில் குவிந்தனர். இதனால் மீன்வரத்து அதிகம் இருந்தபோதிலும் மீன்களின் விலையும் உயர்ந்தே இருந்தது.



    குறிப்பாக 1 கிலோ வஞ்சிரம்-ரூ.1,000, ஷீலா-ரூ.650, வவ்வால்-ரூ.500, சங்கரா-ரூ.300-க்கும், இதுதவிர சின்னவகை மீன்கள் 1 கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் மீன்பிரியர்கள் விலையை கேட்டு ஏமாற்றத்துடன் மீன்களை வேடிக்கை பார்த்தபடி திரும்பிச் சென்றனர். பலர் விலை அதிகம் என்பதால் பெரிய வகை மீன்களை வாங்காமல் சிறய வகை மீன்களையே வாங்கிச் சென்றனர்.

    கடம்பா, எறா, கவளை மீன்கள் மற்றும் நண்டு உள்ளிட்டவைகள் விலை சற்று குறைவாக இருந்ததால் அதையே பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விலை அதிகம் உள்ள பெரிய வகை மீன்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

    தற்போது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்பனைக்காக தனி இடம் கட்டப்பட்டு பரந்து விரிந்து இருப்பதால், மீன்பிரியர்கள் எந்தவித தள்ளுமுள்ளும் இன்றி மீன்களை வாங்கிச்சென்றனர். 
    காசிமேட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு பகுதியில் காசிபுரம் ஏ பிளாக்கை சேர்ந்தவர் நண்டுகுமார். இவரது மனைவி தனலட்சுமி (48). வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று இரவு காசிமேடு போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர் . அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலமாக்கி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தனலட்சுமி கைது செய்யப்பட்டார். மது பாட்டில்கள் விற்றதாக ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews

    ×