search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள்"

    ஐகோர்ட்டு தடை உத்தரவு எதிரொலியாக ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. #BanOnBanners
    சென்னை:

    சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பை நீதிபதிகள் அளித்து உத்தரவிட்டனர்.

    சாலையோரம், இரு சக்கர வாகனம் செல்லும் வழிகள், பொதுமக்கள் நடக்கும் நடைபாதைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் பேனர்களை வைக்கக்கூடாது என்று கூறினர். மேலும் பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி தரக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவையொட்டி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. 15 மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் எங்கெல்லாம் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததோ அவற்றை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

    ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், அடையார், கோயம்பேடு, வடபழனி, வியாசர்பாடி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பேனர்கள் அகற்றப்பட்டன.

    பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பேனர்களை அகற்றி கொண்டு சென்றனர். இந்த பணிகள் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கட்சி பாகுபாடின்றி அனைத்து பேனர்களையும் அகற்றினால் மட்டுமே பிரச்சினை ஏற்படாது என்பதால் அதில் கவனமாக அதிகாரிகள் செயல்பட்டனர். #BanOnBanners

    சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #BanOnBanners #TN
    சென்னை:

    தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி கூடுதல் மனுக்களையும்  தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேனர் விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்தனர். மேலும், பேனர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் இணைய வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினர்.

    இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

    இந்நிலையில் பேனர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.



    சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது. விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். #BanOnBanners #TN
    ×