search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேத்யூஸ்"

    வெலிங்டனில் நடைபெற்று வந்த நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. #NZvSL
    வெலிங்டன்:

    நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது.

    இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் குவித்தார்.

    296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னும், மேத்யூஸ் 117 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

    இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் 141 ரன்னும், மேத்யூஸ் 120 ரன்னும் எடுத்தனர். #NZvSL
    வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணியின் மெண்டிஸ், மேத்யூஸ் ஒருநாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். #NZvSL
    வெலிங்டன்:

    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. குஷால் மெண்டிஸ் 5 ரன்னும், மேத்யூஸ் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். குசால் மெண்டிஸும், முன்னாள் கேப்டன் மேத்யூஸும் நியூசிலாந்து பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். குசால் மெண்டீஸ் 6-வது சதத்தையும், மேத்யூஸ் 9-வது சதத்தையும் பதிவு செய்தனர்.



    சதம் அடித்ததும் மட்டுமல்லாமல் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இன்று 90 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி இந்த ஜோடி 239 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னுடனும், மேத்யூஸ் 117 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள்தான் ஒருநாள் முழுவதும் நிலைத்து நின்று விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வரை இலங்கை 37 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை இலங்கை அணி சிறப்பாக விளையாடினால் போட்டியை டிரா செய்ய வாய்ப்புள்ளது.
    இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #England #SriLanka #Whitewash
    கொழும்பு:

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 336 ரன்களும், இலங்கை அணி 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    பின்னர் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்தது. குசல் மென்டிஸ் 15 ரன்னுடனும், சன்டகன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து வீரர்களின் அபாரமான சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. சன்டகன் 7 ரன்னில் ஜாக் லீச் பந்து வீச்சில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ்சுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் தோல்வியை தவிர்க்க போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    அணியின் ஸ்கோர் 184 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய குசல் மென்டிஸ் (86 ரன்கள், 129 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஜாக் லீச்சால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். அடுத்து களம் கண்ட டிக்வெல்லா 19 ரன்னிலும், தில்ருவான் பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரோஷன் சில்வா 65 ரன்னில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக லக்மல் (11 ரன்) வீழ்ந்தார்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 86.4 ஓவர்களில் 284 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஷ்பகுமாரா 42 ரன்னுடன் (40 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சு வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி வீரர்கள் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 1963-ம் ஆண்டுக்கு பிறகு அன்னிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். உள்ளூரில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் இலங்கை அணி தோல்வியை சந்திப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு டெஸ்டில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி இதேபோல் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே நடந்த ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது. #engvssl #testcricket
    கொழும்பு:

    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.



    இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 327 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 274 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட் மட்டுமே உள்ளது. அதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது.  #engvssl #testcricket 
    பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கையை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. அந்த அணி 346 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இலங்கைக்கு 301 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    301 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 75 ரன் தேவை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

    மேலும் 17 ரன் எடுப்பதற்குள் அந்த அணி எஞ்சிய 3 விக்கெட்டையும் எளிதில் இழந்தது. இலங்கை அணி 243 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் அதிகபட்சமாக 88 ரன் எடுத்தார். ஜேக் லீக் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது சோகமே. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்து இருந்தது. மேலும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதும் 3-ம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.
    ஆசிய கோப்பை படுதோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மேத்யூஸ், அணியில் இருந்தும் நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. #SLvENG #Mathews
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    படுதோல்வியால் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



    அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுமதி அளிக்க வேண்டும்.

    இந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின்போது மேத்யூஸ் காயம் அடைந்தார். அதன்பின் சர்வதேச அணிக்கு திரும்பிய பின்னர் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

    பெரும்பாலான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் அவதிப்பட்டுள்ளார். இதனால் அணி நிர்வாகம் மேத்யூஸை யோ-யோ டெஸ்ட் பரிசோதனையில் பாஸ் ஆக வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேத்யூஸ் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து உள்ளது. #AsiaCup2018 #Matthews
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியது. இதை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    அவருக்கு பதிலாக சன்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #Matthews
    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #AFGvSL
    அபுதாபி:

    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.

    இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 150 ரன்னுக்கு குறைவாக எடுத்தோம். இந்த ஆட்டத்தில் 158 ரன் வரை தான் எடுத்தோம். ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


    எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் வரிசை மீண்டும் சொதப்பி விட்டது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பீல்டிங்கிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் மிகவும் மோசமாக இருந்தது.

    எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. இரண்டு ஆட்டத்திலும் 160 ரன் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் கூறும்போது, ‘ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் திட்டமிட்டு விளையாடினார்கள். அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

    ‘பி’ பிரிவில் இருந்து வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இரு அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். #AsiaCup2018 #AFGvSL #Mathews
    மேத்யூஸ், டிக்வெல்லா, குசால் மெண்டிஸ் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குசால் பெரேரா 8 ரன்னில் வெளியேறினார்.



    ஆனால் தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். குசால் மெண்டிஸ் 38 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் மேத்யூஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி வரை நின்று மேத்யூஸ் 97 பந்தில் 97 ரன்கள் அடிக்க இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. பின்னர் 300 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்க இருக்கிறது.
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #ENGvIND
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    ×