search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டிக்கொலை"

    தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #TambaramMurder #MotherMurder
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.

    பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Hyderabad #MurderAccused #Murder
    ஐதராபாத்:

    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் நேற்று பகல் 11.30 மணி அளவில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். அப்போது அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரரும் மற்றும் பொதுமக்களும் அந்த நபரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலன் இல்லாமல் போய் விட்டது. கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் கொல்லப்பட்ட வாலிபரின் பெயர் ரமேஷ் (வயது 28) என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகேஷ் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த படுகொலை சம்பவம் நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மகேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரமேஷ் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

    கொலை நடந்த போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோ படம் எடுத்தனர். அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   #Hyderabad #MurderAccused #Murder
    ×