search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மென்பொருள்"

    இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறான். #MondayMotivaton #softwaredevelopment
    துபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் தான். ஆனால் இவரது வயதிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இப்போதே தனக்கென மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறான். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்றுபேர் பணியாற்றி வருகின்றனர்.

    மூன்று பணியாளர்களும் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். தற்சமயம் நிறுவனங்களுக்கு வலைத்தளம் உருவாக்கி தரும் டிரைநெட் சொல்யூஷன்ஸ் அவர்கள் செய்யும் எந்த பணிக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை.

    ஆதித்யன் ராஜேஷ் தனது ஐந்து வயதில் கம்ப்யூட்டர் பயன்படுத்த துவங்கியதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு பயிலும் வயதிலேயே கணினி மீது ஆர்வம் அதிகரிக்க தனது ஒன்பதாவது வயதில் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டான்.

    வீட்டில் போரடிக்கும் நேரத்தில் தனது முதல் செயலியை உருவாக்கிய ஆதித்யன், அதன் பின் நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வலைத்தளங்களை உருவாக்கி கொடுக்க ஆரம்பித்தார். கேரளாவின் திருவில்லாவில் பிறந்த ஆதித்யன் தனது ஐந்து வயதில் துபாய் நாட்டிற்கு இடம்பெயர்ந்தான்.

    புகைப்படம் நன்றி: Aadi Media

    நிறுவனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய ஆதித்யன் 18 வயது வரை காத்திருக்க வேண்டும். எனினும், ஏற்கனவே டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று இயங்கி வருகிறது. இதுவரை 12 நிறுவனங்களுக்கு டிரைநெட் சொல்யூஷன்ஸ் சார்பில் வடிவமைப்பு மற்றும் குறியீடு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    டிசம்பர் 7, 2017ம் ஆண்டில் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்சமயம் ஏழாம் வகுப்பு பயிலும் ஆதித்யனுடன் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்சமயம் ஆதித்யன் தனது பள்ளி ஆசிரியர்களுக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். இந்த செயலி ஆசிரியர்களின் பணியை பாதியாக குறைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஆதித்யன் தெரிவித்திருக்கிறான். மென்பொருள் நிறுவனம் தவிர யூடியூப் சேனல் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை ஆதித்யன் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.  #MondayMotivaton #softwaredevelopment
    செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கிய போர்டிரெயிட் ஓவியம் ரூ.3.17 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. #ArtificialIntelligence



    கம்ப்யூட்டர் குறியீடுகளால் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவான போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடி) விலைக்கு ஏலம் போனதாக பிரபல ஏல நிறுவனமான கிரிஸ்டி அறிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.3.17 கோடி விலையில் ஏலம் போகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த முதல் போர்டிரெயிட் ஓவியம் எட்மான்ட் டி பெலாமி (Edmond De Belamy) என அழைக்கப்படுகிறது. இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்தவரின் போர்டிரெயிட் ஆகும். இந்த போர்டிரெயிட்டில் இருக்கும் நபர் கருப்பு வெள்ளை நிற சூட் அணிந்திருக்கும் படி, தங்க நிற ஃபிரேம் கொண்டுள்ளது.

    போர்டிரெயிட்டில் உள்ள முகம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இந்த படம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. வழக்கமான ஓவியங்களில் ஓவியரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த ஓவியத்தில் கணித கோட்பாடு அச்சிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Obvious

    ஆப்வியஸ் எனும் ஃபிரென்ச் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஓவியத்திற்கென பியரி ஃபாட்ரெல் மொத்தம் 15,000 போர்டிரெயிட்களை கம்ப்யூட்டர் மென்பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். 

    போர்டிரெயிட் வரைவதற்கான வழிமுறைகளை மென்பொருள் புரிந்து கொண்டால், அதுவாகவே போர்டிரெயிட் வரைய துவங்கிடும். இதற்கென கூகுள் ஆய்வாளரான குட்ஃபெல்லோ உருவாக்கிய புதிய அல்காரிதம் பயன்படுத்தப்பட்டது. இதனை பிரென்ச் குழுமம் பெலாமி ஃபேமிலி என அழைக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கிய ஓவியம் ஏலத்தில் 7000 முதல் 10,000 டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெலாமி ஃபேமிலி உருவாக்கிய முதல் போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.
    சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay



    சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.



    அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய எமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட எமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு எமோஜிக்கள், புதிய வகை உணவு எமோஜிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது. #WorldEmojiDay #Apple
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் அறிவித்தது. #WWDC18 #Memoji
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிவித்தது. ஐஓஎஸ் 12 துவங்கி, வாட்ச் ஓஎஸ், டிவி ஓஎஸ், மேக் ஓஎஸ் என ஆப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேரு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் ஆப்பிள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏஆர்கிட் போன்றவற்றை ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சேர்த்திருக்கிறது. இத்துடன் மேக் மற்றும் ஆப்பிள் வாடச் சாதனங்களை முன்பை விட மிக எளிமையாக இயக்க வழி செய்யும் அம்சங்களை புதிய இயங்குதளங்கள் கொண்டிருக்கின்றன.



    ஐஓஎஸ் 12-இல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்கும் ஆப்பிள்: 

    ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 12 தளத்தின் புதிய அம்சம் மூலம் தெரிவித்திருக்கிறது. டு நாட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம் ஆப் உள்ளிட்டவை உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது. 

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின் பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.



    அனைவரையும் கவர்ந்த மீமோஜி:

    ஆப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதேபோன்று ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.



    சிரி வழங்கும் சிறப்பு சேவைகள் என்னென்ன?

    ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை போட்டியாளர்களை பந்தாடியிருந்தாலும், அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. 

    2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி ஷார்ட்கட்களை அறிமுகம் செய்தது. இதை கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட கமான்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும் பரிந்துரைகளை வழங்கும்.



    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அற்புதங்கள்:

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி செய்கின்றன. போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக இருந்தன.

    ஒரு ஆண்டுக்கு முன் ஆப்பிள் டெவலப்பர் நிகள்வில் அந்நிறுவனம் டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட் பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும். மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தை டெஸ்க்டாப் மேக் சாதனங்களுக்கு கொண்டு வரயிருப்பதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. 

    இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்துக்கென USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து, அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி பெற இருக்கிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர் ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #macOSMojave
    கலிஃபோர்னியா:

    ஐஓஎஸ் 12, வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் இயங்குதளங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய மேக் ஓஎஸ் இயங்குதளம் மோஜேவ் என அழைக்கப்படும் நிலையில், பல்வேறு புதிய வசதிகளை இந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது. அதிகளவு ஹூட் மாற்றங்களை டெஸ்க்டாப் சாதனங்களுக்கு கொண்டு வந்திருக்கும் புதிய மேக் ஓஎஸ் இயங்குதளத்தை ஆப்பிள் தலைமை செயல் அகிகாரி குவியல் முழுவதும் புதிய அம்சங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    புதிய மேக் ஓஎஸ் சிஸ்டம்-வைடு டார்க் மோட் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் யூசர் இன்டர்ஃபேஸ் மட்டுமின்றி வால்பேப்பர் மற்றும் வின்டோஸ்-இல் இருக்கும் அனைத்து தரவுகளையும் இருள் சூழ்ந்ததாக மாற்றியமைக்கும். மேக் ஓஎஸ் மோஜேவ் டார்க் மோட் ஆப்ஷனை எக்ஸ்கோடிற்கும் கொண்டு வருகிறது. எக்ஸ்கோடு டெவலப்பர்களால் அதிகம் விரும்பக்கூடிய ஒன்றாகும்.



    ஆப்பிள் நிறுவனம் ஸ்டேக்ஸ் வசதியை டெஸ்க்டாப் தளங்களுக்கு கொண்டு வருகிறது. இந்த அம்சம் அனைத்து ஃபைல்களையும் ஒழுங்கான ஃபோல்டரில் ஒருங்கிணைத்து வைக்கும். மேக் கணினிகளில் ஃபோல்டர்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஃபைல் ஒன்றை ஸ்டேக் ஃபோல்டரில் சேர்க்க அதனை டிராக் செய்து டெஸ்க்டாப்-இல் வைத்தால் வேலை முடிந்தது.

    இத்துடன் ஸ்கிரீன்ஷாட்களை எடுப்பதை புதிய இயங்குதளத்தில் மிகவும் எளிமையாக ஆப்பிள் மாற்றியிருக்கிறது. மேக் ஓஎஸ் மோஜேவ் தளத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க டெஸ்க்டாப் கீழ் வலது புற ஓரமாக காணப்படும் ஐகானை க்ளிக் செய்தால் மார்க அப் ஆப்ஷன் தெரியும்.

    ஸ்கிரீன்ஷாட் மட்டுமின்றி க்விக்டைம் செயலியில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்வதை ஆப்பிள் நிறுவனம் மேலும் எளிமையாக மாற்றியிருக்கிறது.  இதே அப்டேட் கன்டினியூட்டி கேமரா வடிவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கன்டினியூட்டி கேமரா மூலம் பகைப்படங்களை எடுத்ததும், அவற்றை உடனடியாக மேக் கம்ப்யூட்டரில் தெரியும். இந்த அம்சம் புகைபப்டங்களை போன் கேமராவில் எடுக்கப்பட்டதும் நேரடியாக மேக் கணினிகளில் பார்க்கும் வசதியை வழங்குகிறது.

    இத்துடன் நியூஸ் மற்றும் ஸ்டாக் செயலிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வாய்ஸ் மெமோஸ் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய இயங்குதளத்தில் முற்றியும் புதிய ஃபைல் சிஸ்டம் மற்றும் விண்டோயிங் சர்வீஸ் வழங்கும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. உங்களது அனுமதியின்றி உங்களின் தகவல்களை செயலிகள் இயக்குவதை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் மாற்றியமைக்கப்பட்ட மேக் ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மேக் ஆப் ஸ்டோரின் இடதுபுறத்தில் சைடுபார் மற்றும் எடிட்டோரியலுக்கு பெரிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் டிஸ்கவர், கிரியேட், வொர்க், பிளே, டெவலப், கேட்டகரீஸ், அப்டேட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன.

    ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும்.

    இதே நிகழ்வில் மெட்டல் API மூலம் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயில கிரியேட் ML எனும் டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஃபிரேம்வொர்க் தளத்தில் ஆப்பிள் மேற்கொண்டு இருக்கும் புதிய மாற்றம் காரணமாக டெவலப்பர்கள் தங்களது செயலிகளை ஐஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் தளங்களில் வழங்க முடியும். #WWDC2018 #macOSMojave #mojave
    ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 12 இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #watchos5
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் டிவி 4K சாதனத்துக்கான டிவி ஓஎஸ் இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது. 



    ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 முக்கிய அம்சங்கள்:

    - ஆக்டிவிட்டி ஷேரிங்: வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளம் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆப்பிள் வாட்ச் பயனரை ஏழு நாட்கள் போட்டிக்கு அழைப்பு விடுக்க முடியும். இதன் மூலம் இருவரும் உடற்பயிற்சிகளில் போட்டியிட முடியும்.

    - ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன்: இந்த அம்சம் பயனருக்கு சரியான உடற்பயிற்சியை துவங்க அலெர்ட் வழங்குவதோடு, அவர்களுக்கு ரெட்ரோஆக்டிவ் கிரெடிட் வழங்குகிறது. இந்த அம்சம் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கும் நினைவூட்டுகிறது.

    - யோகா மற்றும் ஹைக்கிங்: ஆப்பிள் வாட்ச் புதிய இயங்குதளம் பயனர் யோகா மற்றும் இதர பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மிக துல்லியமாக டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

    - வாக்கி டாக்கி: புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாக்கி டாக்கி அம்சம், மூலம் சிறிய வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியும். ஒரு வாட்ச் சாதனத்தில் இருந்து மற்றொரு வாட்ச் சாதனத்துக்கு ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் பதிப்பு வாட்ச் 3 மூலம் இயங்குகிறது. 

    - பாட்கேஸ்ட்: சிரியை பயன்படுத்தி பயனர்கள் இனி ஆப்பிள் பாட்கேஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். 

    - வாட்ச் ஓஎஸ் 5-இல் சிரி: சிரி வாட்ச் ஃபேஸ் இனி மூன்றாம் தரப்பு செயலிகளா நைக்ஃ ரன் கிளப், க்ளோ பேபி மற்றும் மோபைக் உல்ளிட்டவற்றில் இருந்து ஆக்ஷனபிள் தரவுகளை காண்பிக்கும்.

    - ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன்கள்: மூன்றாம் தரப்பு செயலிகளில் இனி இன்டராக்டிவ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் செயலிகளை திறக்காமலே அவற்றை பயன்படுத்த முடியும். இத்துடன் புதிய பிரைட் பேன்ட் மற்றும் வாட்ச் ஃபேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    டிவி ஓஎஸ் 12 முக்கிய அம்சங்கள்:

    புதிய டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.

    ஹோம் கன்ட்ரோல் சிஸ்டம்களான கன்ட்ரோல்14, க்ரெஸ்ட்ரான் மற்றும் சாவன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு ஆப்பிள் டிவியை இயக்க முடியும். இத்துடன் சிரியை பயன்படுத்தி வாய்ஸ் சர்ச் மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும்.

    டிவி ஓஎஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டால்பி அட்மோஸ் வசதி டிவி ஓஎஸ் 12 தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்பிள் டிவி 4K சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஐடியூன்ஸ் ஆப் அதிகளவு 4K ஹெச்டிஆர் திரைப்படங்களை வழங்குகிறது. அந்த வகையில் அட்மோஸ் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது ஆப்பிள் டிவி தரவுகளுக்கு சிறப்பான ஆடியோ அனுபவத்தை இதுவரை இல்லாத அளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஐடியூன்ஸ் கொண்டிருக்கும் அனைத்து தரவுகளிலும் டால்பி அட்மோஸ் வசதி தானாக அப்டேட் செய்யப்படும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. டிவி ஆப் மட்டுமே தற்சமயம் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதியை வழங்குகிறது. டிவி ஆப் தற்சமயம் வரை 100 சேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் நேரலை விளையாட்டு மற்றும் செய்திகளும் அடங்கும். #WWDC2018 #watchos5 #tvOS12
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #iOS12
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. மென்பொருள் சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இயங்கும் புதிய ஐஓஎஸ் தளத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார். தற்சமயம் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் ஐஓஎஸ் 12 அப்டேட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



    ஐஓஎஸ் 12:

    புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.

    புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.



    இத்துடன் ஃபார் யு எனும் புதிய டேப் நீங்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் காண்பிப்பதோடு அவற்றில் எஃபெக்ட்களை சேர்ப்பது மற்றும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பரிந்துரை செய்யும். ஐஓஎஸ் 12 தானாகவே நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும்.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சிரி அதிகம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் செயலி குறித்த நோட்டிஃபிகேஷன்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். அதாவது ஜிம் சார்ந்த செயலிகளை டிராக் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் அங்கு சென்றும் செயலியை இயக்க வேண்டும் என சிரி உங்களுக்கு நினைவூட்டும்.   

    ஐபேட்களுக்கான நியூஸ் செயலி ஐஓஎஸ் 12 தளத்தில் புதிய சைடுபார் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மிக எளிமையாக மாற முடியும். இதே போன்று கிடைக்கும் புதிய பிரவுஸ் அம்சம் கொண்டு பல்வேறு புதிய சேனல்கள் மற்றும் தலைப்புகளை கண்டறிய முடியும். கூடுதலாக நியூஸ் ஆப் ஸ்டாக்ஸ் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வணிகம் சார்ந்த செய்திகளை ஸ்டாக்ஸ் செயலியில் வாசிக்கும் போதே வணிகம் சார்ந்த இதர செய்திகளையும் படிக்க முடியும். 



    இத்துடன் ஐஓஎஸ் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் DND அம்சம் உங்களது நோட்டிஃபிகேஷன்களை மறைத்து, லாக் ஸ்கிரீனை சுத்தமாக காண்பிக்கும். இத்துடன் ஒவ்வொரு செயலியிலும் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை மிக நுனுக்கமாக காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு செயலியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியும். 

    மேலும் நீங்கள் ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே செயலியில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் பட்டியலிடப்படும், அவற்றை க்ளிக் செய்ததும் பட்டியலை முழுமையாக பார்க்க முடியும். இந்த பட்டியலை வலது புறம் ஸ்வைப் செய்தால் அனைத்தையும் க்ளியர் செய்ய முடியும்.



    டங் டிடெக்ஷன் அம்சம் ஐஓஎஸ் 12 தளத்தின் சுவாரஸ்ய அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் அனிமோஜிக்களின் நாக்கை வெளியேற்றும். இத்துடன் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
    ×