search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெல்ஜியம்"

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 3-வது முறையாக உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி 2006-ம் ஆண்டில் 2-வது இடம் பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் தாகத்துடன் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடம் பெற்றதே அந்த அணியின் சிறந்த நிலையாக உள்ளது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் அரைஇறுதிக்குள் தடம் பதித்து இருக்கின்றன. பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (2-1), பெரு (1-0) அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை (4-3) வெளி யேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே (2-0) அணியை வீழ்த்தியது.

    பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீட்டுக்கு அனுப்பியது. கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான பிரேசிலை சாய்த்தது. பெல்ஜியம் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் 14 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.

    பெல்ஜியம் அணியில் ரோம்லு லுகாகு (4 கோல்), கேப்டன் எடன் ஹசார்ட் (2 கோல்), கெவின் டி புருனே, நாசெர் சாட்லி, மரோன் பெல்லாய்னி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணியின் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தடுப்பு அரணாக செயல்படுவதில் வல்லவர். அவரது சிறப்பான செயல்பாடு தான் கால்இறுதியில் வலுவான பிரேசில் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது.

    பிரான்ஸ் அணியில் கைலியன் பாப்பே (3 கோல்), அன்டோன் கிரிஸ்மான் (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள். இரு அணிகளின் தாக்குதல் ஆட்டமும், தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போவது யார்? என்பதை கணிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த அணி முதலில் கோல் அடிக்கிறதோ? அந்த அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி தான் வென்றுள்ளது. அதாவது பிரான்ஸ் அணி 1938-ம் ஆண்டில் முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது. தற்போது 3-வது முறையாக உலக கோப்பையில் சந்திக்கின்றன. இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் நிச்சயம் கால்பந்து ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக் கும் என்பதில் அய்யமில்லை.

    இன்றைய போட்டி குறித்து பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ரபெல் வரானே கருத்து தெரிவிக்கையில், ‘பெல்ஜியம் அணி இளம் வீரர்களை அதிகம் கொண்டது. இருப்பினும் அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்டம் கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். தரமான வீரரான ரோம்லு லுகாகு உடல் ரீதியாக எந்தவொரு அணியின் தடுப்பு ஆட்டத்துக்கும் பிரச்சினை அளிப்பார். அவரது இந்த முயற்சிக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எடன் ஹசார்ட் பந்தை நன்றாக கடத்தி செல்லக்கூடியவர். அவருக்கு நாங்கள் இடம் அளிக்காத வகையில் விளையாடுவோம். அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார்.

    பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் கெவின் டி புருனே அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி ஆட்டத்துக்குள் வந்த பிறகு ஒருபோதும் சாதாரண எதிரணியை எதிர்பார்க்க முடியாது. பிரான்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக மல்லுக்கட்டுவோம். அந்த அணிக்கு எதிராக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். முடிவில் களத்தில் யார் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அது தான் கால்பந்து ஆட்டம்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் நாளை மோதுகின்றனர். #FIFA2018 #WorldCup2018
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

    உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

    அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.

    போக்பா, நிக்கோலா காண்டே ஆகியோர் நடுகளத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். தோல்வி எதையும் சந்திக்காத அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் டிரா செய்தது.

    பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி முன் களத்தில் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

    கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசாட் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் திறமை பெற்றவராக இருக்கிறார்.

    இது தவிர பெலானி, விஸ்டல், கோம்பேனி, நாசெர் சாதிலி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மினுயர் கிரானி 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இயலாது. பெல்ஜியம் அணியின் பலவீனமே பின்களம்தான். அதை சரி செய்வது அவசியம். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது.

    இரு அணிகளும் நாளை மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.

    உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.

    இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #FIFA2018 #WorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். 
    இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 
    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை. 

    ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.

    ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உலகக்கோப்பை கால்பந்தில் நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #brazil #belgium
    கசான்:

    உலகக்கோப்பை கால்பந்தில் நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் திறமை வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டங்களில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கணக்கிலும், செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வென்றது. சுவிட்சர்லாந்துடன் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது சுற்றில் மெக்சிகோவை இரண்டு கோல்போட்டு வீழ்த்தியது.

    பிரேசில் அணி 12-வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    நட்சத்திர வீரர் நெய்மர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். கோல் அடித்தும், சக வீரர்கள் கோல் போடவும் அவர் திறமையான முறையில் செயல்பட்டு வருகிறார்.



    இதுதவிர கோட்டினா, தியாகோ சில்வா, ஜேசஸ், வில்லியன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் காயத்தால் விளையாடாத மார்சிலோ நாளை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து 7-வது முறையாக பிரேசில் அணி கால்இறுதியில் ஆடுகிறது. இதில் 2006-ல் பிரான்சிடமும், 2010-ல் நெதர்லாந்திடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் கடந்த 3 உலககோப்பையில் ஐரோப்பிய அணியிடம் தோற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பையில் அரை இறுதியில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்று வெளியேற்றப்பட்டது.

    இதனால் ஐரோப்பிய கண்டத்தில் தற்போது பலம் பொருந்திய அணியாக திகழும் பெல்ஜியத்துடன் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். பெல்ஜியம் அதிரடியை சமாளிப்பது சவாலானது.

    பெல்ஜியம் இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 2 கோல் வாங்கி பின்தங்கி இருந்த நிலையில் 3 கோல் போட்டு முத்திரை பதித்தது.

    பெல்ஜியம் அணியில் கேப்டன் ஹசாட், லுகாகு போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருவரும் சிறந்த முன்னாள் வீரர்கள். பிரேசில் பின்கள வீரர்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.

    2-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் பெல்ஜியம் உள்ளது. கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால்இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 3 ஆட்டத்திலும், பெல்ஜியம் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பையில் ஒருமுறை மோதியுள்ளன. 2002-ம் அண்டு நடந்த போட்டியில் பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது.

    தற்போது உள்ள பெல்ஜியம் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும். #FIFA2018 #brazil #belgium
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 - 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.

    மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  

    அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    பெல்ஜியம் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி எச் பிரிவில் முதலிடம் பிடித்தது. #FIFAWorldCup2018 #FIFA2018 #ENGBEL

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஒரு லீக் போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிரிவில் முதலிடம் பிடிக்கும்.



    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால், ஆட்டம் சமனில் இருந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அட்னான் ஜனுசாஜ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. #FIFAWorldCup2018 #FIFA2018 #ENGBEL
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, பெல்ஜியம் இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. 

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தின் 15-வது நிமிடத்திற்குள் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் பெல்ஜியம் அணி முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பெல்ஜியம் அணியினரை கோல் போட விடாமல் தடுத்தனர். ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் 59-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் லாயில் லைய்பேர்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

    அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 4-1 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரும் நிலையில் இன்றைய ஆட்டங்கள் குறித்து காண்போம். #FIFA2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன. ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    ‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும். #FIFA2018 #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #FIFA2018 #WorldCup2018 #BELTUN

    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    முதல் லீக் ஆட்டத்தில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - துனிசியா அணிகள் மோதின. பெல்ஜியம் அணிக்கு போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடமே ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் 16-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.


     பெனால்டி வாய்ப்பில் கோலடித்த ஈடன் ஹசார்ட்

    அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் புரோன் கோல் அடித்தார். இருப்பினும் பெல்ஜியம் அணி 2-1 என முன்னிலை வகித்தது.



    முதல் பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் பெல்ஜியம் விரர் ரொமெலோ லகாகு மீண்டும் கோல் அடித்தார். துனிசியா வீரர்கள் முதல் பாதிநேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்காததால், இடைவேளையின் போது பெல்ஜியம் 3-1 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் பெல்ஜியம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என முன்னிலை பெற்றது.


    ஈடன் ஹசார்ட் மற்றும் ரொமெலோ லகாகு

    அதன்பின் துனிசியா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. 90-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி கோல் அடித்தார். இது பெல்ஜியம் அணிக்கு மேலும் முன்னிலை கொடுத்தது.


    பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி அடித்த கோல்

    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக நடைபெறும் லீக் போட்டிகளில் கொரியா குடியரசு - மெக்சிகோ, ஜெர்மனி - ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BELTUN 
    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அங்குள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #SushmaSwaraj

    புருசல்ஸ்:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.

    சுஷ்மா சுவராஜ் நேற்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார்.

    இன்று பெல்ஜியம் நாட்டின் புருசல்ஸ் பகுதியில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றிய சுஷ்மா அங்குள்ள யெஹுடி மெனுஹின் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார். 



    பிரபல மதகுருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj #InternationalYogaDay2018
    ×