search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளிப்கார்ட்"

    அசுஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல் குறைந்த காலகட்டத்தில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #ZenfoneMaxProM1 #smartphone



    அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், விற்பனை துவங்கிய சில மாதங்களில் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அசுஸ் அறிவித்துள்ளது.



    அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.10,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
    ஒப்போ துணை பிரான்டு ஆன ரியல்மி இந்தியாவில் சி சீரிஸ்-இல் தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeC1



    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் புதிய சி1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ரியல்மி சி1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, 87.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில் ரியல்மி சி1 மாடலில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி சி1 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரியல்மி சி1 விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ரியல்மி சி1 அக்டோபர் 11-ம் தேதி முதல் கிடைக்கும்.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. #Nokia5Plus



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இவற்றின் விற்பனை செப்டம்பரில் துவங்கும் என ஹெச்.எம்.டி. தெரிவித்திருந்த நிலையில், இதன் விற்பனை தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதன்படி நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 24-ம் தேதி முதல் விற்பனை துவங்கும் என தெரிவித்துள்ளது. 

    நோக்கியா 5.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ள புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.86 இன்ச் 720x1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்
    - மாலி-G72 MP3 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு இதன் விலை தெரியவரும்.
    இந்தியாவில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக விவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பிதழில் X என்ற வார்த்தை பெரிதாக இடம் பெற்றிருக்கிறது. 

    அந்த வகையில் இது அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் வெளியிட்ட X21 மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல் கடந்த வாரம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    இந்தியாவில் விவோ நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட விவோ X21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    விவோ X21 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 12 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ X21 6 ஜிபி ரேம் மாடல் 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புதிய விவோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும்.
    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் ஆன்லைன் பிரான்டு ஹானர் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்கள் முறையே 5.7 இன்ச் மற்றும் 5.99 இன்ச் ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருப்பதோடு முக அங்கீகார வசதியும், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 7ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    ஹானர் 7சி சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்கள் பிளாக் கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.8,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாகவும், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஹானர் இந்தியா ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் அதிகபட்சம் 50 ஜிபி மற்றும் 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
    பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி கூறினார். #Flipkart #Walmart
    புதுடெல்லி:

    பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி கூறினார்.

    நமது நாட்டில் ஆன்லைன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிற இணையவழி வர்த்தகம், சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இங்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக தொடங்கப்பட்ட ‘பிளிப் கார்ட்’ இதில் நல்லதொரு பங்களிப்பை செய்து வந்தது.

    இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ஆன்லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்‘ நிறுவனம் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி) கொடுத்து வாங்கி, தன் வசப்படுத்துகிறது. இதற்கான பேரம் முடிந்து உள்ளது. இது, உலக அளவில் ஆன்லைன் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதே நேரத்தில் இந்தப் பேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பேரம் பற்றிய தகவல் நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரான் மஞ்ச், கடுமையாக சாடியது.

    பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சுதேசி ஜக்ரான் மஞ்ச் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    “இந்தியாவுக்குள் புறவாசல் வழியாக நுழைவதற்கு வால்மார்ட் விதிமுறைகளை சுற்றி வளைத்து இருக்கிறது, நாட்டு நலன் கருதி இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று அது கூறியது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பிரதமர் மோடிக்கு ஒரு அவசர கடிதம் எழுதினார்.

    அதில் அவர், “இந்த நடவடிக்கை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களையும், சிறிய கடைகளையும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதற்கான வாய்ப்புகளையும் ஒழித்துக்கட்டி விடும். ஏற்கனவே பெரும்பாலான சிறிய தொழில் நிறுவனங்கள் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு போராடி வருகின்றன. வால்மார்ட் நிறுவனத்தின் பிரவேசம், அவற்றுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன், டெல்லியில் நேற்று குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவரிடம் இந்த பேரம் தொடர்பாக பிரதமர் மோடியையோ, மூத்த மந்திரிகள் யாரையுமோ சந்தித்து பேச முடியாமல் போனது பற்றி கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், “கடந்த காலத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறோம். எதிர்காலத்திலும் சந்தித்து பேசுவோம். பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை நாங்கள் வாங்குவதற்கு போட்டி ஆணையத்தில் இருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதில் எந்த கஷ்டமும் இருப்பதாக கருதவில்லை. இந்த பேரம் வாடிக்கையாளர்களுக்கு நல்லது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சமூகத்துக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

    “பிரதமர் மோடியையோ, வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபுவையோ சந்திக்க முடியாமல் போனது, வால்மார்ட்டுக்கு சரியான வரவேற்பு இல்லை என்று உணர்த்துவது போல அமைந்து விடாதா?” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “நான் உண்மையிலேயே அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் அரசின் அனைத்து மட்டங்களிலும் எல்லா நேரமும் தொடர்பில் உள்ளோம். இதற்கு முன்பும் சந்தித்து பேசி இருக்கிறோம். இனியும் சந்திப்போம்” என பதில் அளித்தார்.

    “பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பியபோது அவர், “வால்மார்ட் புதிய நிறுவனம் அல்ல. அந்த சந்திப்பு மிக முக்கியமான நிகழ்வு அல்ல. புகைப்படத்துக்காக ‘போஸ்’ கொடுப்பது எங்களுக்கு தேவை இல்லை” என பதில் அளித்தார்.

    வால்மார்ட் வேலை வாய்ப்பை பெருக்கும் என்று கூறுவது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர், “இணையவழி வர்த்தக வெளியில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என துல்லியமாக கணித்து கூறுவது கடினம். ஆனாலும் பல லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என மூன்றாம் தரப்பு ஆய்வு தெரிவிக்கிறது” என்று கூறினார்.

    மேலும், “இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவ்வளவு காலத்துக்குள் இந்த வாய்ப்பு உருவாகும் என காலநிர்ணயம் செய்து கூற முடியாது. அதற்கான ஆய்வு எங்களிடம் உள்ளது. வேலை வாய்ப்பு என்பது கம்பெனியில் மட்டுமல்லாது, பிளிப்கார்ட் தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிற வினியோகஸ்தர்களிடமும் பெருகும். வால்மார்ட் 90 சதவீதத்துக்கும் மேலான பொருட்களை உள்நாட்டில், உள்ளூரில் வாங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

    பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தை தன்வசப்படுத்துவதின் மூலம் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் அமெரிக்க நிறுவனமான அமேசான் நிறுவனத்துக்கு பலத்த போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   #Flipkart #Walmart #tamilnews 
    பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் சம்மர் சேல் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிளிப்கார்ட் தளத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமேசான் தளத்திலும் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அமேசான் சம்மர் சேல் என பெயரிடப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மே 1-ம் தேதி துவங்கி மே 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே தினங்களில் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையும் நடைபெறுகிறது. அமேசான் சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சிகள் மற்றும் பல்வேறு இதர பொருட்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. 

    சிறப்பு சலுகைகளில் விலை குறைப்பு, தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவனை முறை வசதி, கேஷ்பேக் மற்றும் எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அமேசான் சிறப்பு விற்பனை நாட்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பிரான்டுகளின் 40,000 டீல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 



    அமேசான் விற்பனை சலுகை முன்னோட்டம்

    அமேசான் சம்மர் சேல் விற்பனையில் மொபைல் போன்களுக்கு அதிகபட்சம் 35% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. ஹானர் 7X, நோக்கியா 7 பிளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட இருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் முதல் முறையாக விற்பனைக்கு வரயிருக்கிறது. வரும் நாட்களில் சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் சலுகைகளின் மற்ற விவரங்கள் தெரியவரும்.

    இதுமட்டுமின்றி அமேசான் செயலியை பயன்படுத்துவோருக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இவை விற்பனை நாட்களில் இரவு 8 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் கலந்து கொள்வோரில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு அதிகபட்சம் 80% தள்ளுபடியும், அனைத்து மாடல் மொபைல் போன் கேஸ்களுக்கும் 75% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று ப்ளூடூத் ஹெட்செட் சாதனங்களுக்கு 35%, பவர் பேங்க் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    லேப்டாப் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000 வரை தள்ளுபடியும், கம்ப்யூட்டர் உதிரிபாகங்களுக்கு அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் கேமராக்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரூ.250-க்கும் அதிகமாக பொருட்களை வாங்கி அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவோருக்கு கூடுதலாக 10 சதவிகிதம் கேஷ்பேக் அதிகபட்சம் ரூ.300 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது.
    புதுடெல்லி:

    அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் 77% பங்குகளை சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. இது அந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.

    இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மொத்தம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட்  பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பிளிப்கார்ட் தளத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், ஒப்பந்தம் கையெழுத்தானதும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். பிளிப்கார்ட் தளத்தை துவங்கும் போது சச்சின் மற்றும் பின்னி இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றினர். பிளிப்கார்ட் நிறுவன இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தில் தனது 5.5% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறார். 

    ஒப்பந்தம் கையெழுத்தானதும் பின்னி பன்சால் நிறுவன பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பிளிப்கார்ட் தளத்தில் தனது 20% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
    ×