என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜார்ஜ்"
கொடைக்கானல்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கொடைக்கானல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் குட்கா ஊழலில் ரூ.150 கோடி வரை அமைச்சர், காவல் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.
மக்களால் ஓரம் கட்டப்பட்ட முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தங்களை மிகப் பெரிய தலைவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற வில்லை. இது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் இன்னும் மனதளவில் இணையவில்லை. விரைவில் தமிழகத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும். அதில் வெற்றி பெறுவோம். நாங்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறா விட்டால் அ.ம.மு.க.வை கலைத்து விட்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து விடுகிறோம். இது நடக்காது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பது உறுதி.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கூடி விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் மிகப் பெரிய அரசியல் மாற்றம் உருவாகும்.
தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினை மீண்டும் தலை தூக்கி வருகிறது. மின் வெட்டு உள்ளது என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர் எதற்கு? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் கவர்னர் தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செங்குன்றத்தில் குட்கா குடோன் நடத்தி வந்த மாதவராவ், தனது பங்கு தாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருடன் சேர்ந்து அதிகாரிகளை பணத்தால் வளைத்துப் போட்டு குட்கா வியாபாரத்தை தங்கு தடையின்றி மேற்கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகே குட்கா விவகாரம் சூடு பிடித்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் குட்கா ஊழலில் அடிபட்டதால் தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி தங்களது அதிரடியை தொடங்கினர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் குட்கா வியாபாரியான மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரியான பாண்டியனும் சிக்கினர். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் பல்வேறு தகவல்களை முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. திரட்டியுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார் அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சி.பி.ஐ. அடுத்த கட்டமாக போலீஸ் அதிகாரிகளுக்கு குறி வைத்துள்ளனர்.
புழலில் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோருக்கு குட்கா ஊழலில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மனை ஏற்று 2 பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விரைவில் ஆஜராக உள்ளனர்.
அப்போது அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின்போது மன்னர் மன்னனும், சம்பத்தும் அளிக்க உள்ள வாக்குமூலம் குட்கா விவகாரத்தில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருவரிடமும் நடத்தப்பட உள்ள விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குட்கா ஊழல் வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இதனால் போலீஸ் அதிகாரிகள் மீதான பிடி இறுகியுள்ளது.
குட்கா ஊழலில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பெயரும் பலமாக அடிபட்டது. இதுபற்றி விளக்கம் அளித்த அவர், குட்கா ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.
அதே நேரத்தில்தான் யாரிடமும் லஞ்சம் வாங்க வில்லை. எனது பெயரை சொல்லி யாராவது வாங்கி இருக்கலாம்? என்று தெரிவித்துள்ளார். இதனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர். ஜார்ஜின் குற்றச்சாட்டு குறித்தும், மன்னர்மன்னன், சம்பத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் ஜார்ஜ் அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் பலர் எனக்கு துரோகம் செய்து விட்டனர் என்றும் கூறி இருந்தார். அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குட்கா ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில் 4 போலீஸ் கமிஷனர்கள் பணியில் இருந்துள்ளனர். இதேபோல இணை ஆணையர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்கிற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது.
இதன் உண்மைதன்மை குறித்தும் சி.பி.ஐ. வசாரித்து வருகிறது. குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரி கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகிறார்கள்.
போலீஸ் அதிகாரிகளான மன்னர்மன்னன், சம்பத் ஆகியோருக்கு முதலில் குறி வைத்துள்ள சி.பி.ஐ. படிப்படியாக மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளது.
இதனால் குட்கா ஊழலில் சி.பி.ஐ. விரித்துள்ள வலையில் அடுத்து சிக்கப் போவது யார்-யார்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
குட்கா வழக்கில் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் கைது செய்து விட்டு மேல் மட்டத்தில் இருப்பவர்களை விட்டு விடக்கூடாது என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் இந்த விஷயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கவனமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கு எதிராகவும் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். எனவே எந்த நேரத்திலும் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. #gutkha #cbi #ministervijayabaskar
குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், சென்னையில் துணை கமிஷனராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை. ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும். அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார்.
ஜார்ஜின் குற்றசாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர்.
உழைப்பது என் கடைமை என்றாலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது.
முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது.
பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது ஜார்ஜ் குற்றம்சாட்டுகிறார். அவதூறு பரப்பி வருகிறார்.
என் மீது எந்த குற்றமும் இல்லை. நான் இதை எங்கே நிரூபிக்கவேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #George #Jayakumar
தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இதில் சசிகலா- உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளது.
இதேபோல் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை ஜார்ஜ் விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார். ஆனால் அவரிடம், இன்று ஆஜராக வேண்டியதில்லை என்றும் வேறு தேதியில் ஆஜராகும்படி இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த இ-மெயிலை அவர் பார்க்காததால் ஆஜராக வந்துவிட்டார்.
இதையடுத்து ஜார்ஜ் வந்த வேகத்தில் ஒரு நிமிடத்திலேயே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.
குட்கா ஊழல் தொடர்பாக ஜார்ஜ் வீட்டில் சி.பி.ஐ. நேற்று விடிய விடிய சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. #George #JayaDeathprobe
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.
பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.
இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.
தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.
அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #JayalalithaaDeath ##ArumugasamyCommission
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்