என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாதவராவ்"
கொடைக்கானல்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கொடைக்கானல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் குட்கா ஊழலில் ரூ.150 கோடி வரை அமைச்சர், காவல் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.
மக்களால் ஓரம் கட்டப்பட்ட முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தங்களை மிகப் பெரிய தலைவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற வில்லை. இது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் இன்னும் மனதளவில் இணையவில்லை. விரைவில் தமிழகத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும். அதில் வெற்றி பெறுவோம். நாங்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறா விட்டால் அ.ம.மு.க.வை கலைத்து விட்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து விடுகிறோம். இது நடக்காது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பது உறுதி.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கூடி விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் மிகப் பெரிய அரசியல் மாற்றம் உருவாகும்.
தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினை மீண்டும் தலை தூக்கி வருகிறது. மின் வெட்டு உள்ளது என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர் எதற்கு? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் கவர்னர் தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செங்குன்றத்தில் குட்கா குடோன் நடத்தி வந்த மாதவராவ், தனது பங்கு தாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருடன் சேர்ந்து அதிகாரிகளை பணத்தால் வளைத்துப் போட்டு குட்கா வியாபாரத்தை தங்கு தடையின்றி மேற்கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகே குட்கா விவகாரம் சூடு பிடித்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் குட்கா ஊழலில் அடிபட்டதால் தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி தங்களது அதிரடியை தொடங்கினர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் குட்கா வியாபாரியான மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரியான பாண்டியனும் சிக்கினர். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் பல்வேறு தகவல்களை முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. திரட்டியுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார் அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சி.பி.ஐ. அடுத்த கட்டமாக போலீஸ் அதிகாரிகளுக்கு குறி வைத்துள்ளனர்.
புழலில் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோருக்கு குட்கா ஊழலில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மனை ஏற்று 2 பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விரைவில் ஆஜராக உள்ளனர்.
அப்போது அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின்போது மன்னர் மன்னனும், சம்பத்தும் அளிக்க உள்ள வாக்குமூலம் குட்கா விவகாரத்தில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருவரிடமும் நடத்தப்பட உள்ள விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குட்கா ஊழல் வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. இதனால் போலீஸ் அதிகாரிகள் மீதான பிடி இறுகியுள்ளது.
குட்கா ஊழலில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பெயரும் பலமாக அடிபட்டது. இதுபற்றி விளக்கம் அளித்த அவர், குட்கா ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.
அதே நேரத்தில்தான் யாரிடமும் லஞ்சம் வாங்க வில்லை. எனது பெயரை சொல்லி யாராவது வாங்கி இருக்கலாம்? என்று தெரிவித்துள்ளார். இதனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர். ஜார்ஜின் குற்றச்சாட்டு குறித்தும், மன்னர்மன்னன், சம்பத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் ஜார்ஜ் அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் பலர் எனக்கு துரோகம் செய்து விட்டனர் என்றும் கூறி இருந்தார். அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குட்கா ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில் 4 போலீஸ் கமிஷனர்கள் பணியில் இருந்துள்ளனர். இதேபோல இணை ஆணையர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்கிற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது.
இதன் உண்மைதன்மை குறித்தும் சி.பி.ஐ. வசாரித்து வருகிறது. குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரி கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகிறார்கள்.
போலீஸ் அதிகாரிகளான மன்னர்மன்னன், சம்பத் ஆகியோருக்கு முதலில் குறி வைத்துள்ள சி.பி.ஐ. படிப்படியாக மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளது.
இதனால் குட்கா ஊழலில் சி.பி.ஐ. விரித்துள்ள வலையில் அடுத்து சிக்கப் போவது யார்-யார்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
குட்கா வழக்கில் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் கைது செய்து விட்டு மேல் மட்டத்தில் இருப்பவர்களை விட்டு விடக்கூடாது என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் இந்த விஷயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கவனமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கு எதிராகவும் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். எனவே எந்த நேரத்திலும் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. #gutkha #cbi #ministervijayabaskar
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில், தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாதவராவுக்கு சொந்தமான சென்னை செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அவரை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் அடிப்படையில், மாதவராவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குட்கா ஊழல் தொடர்பாக, மாதவராவுக்கு சொந்தமான வங்கி கணக்குகளையும் சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர். #GutkhaScam #CBI
முதல்கட்டமாக மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் வருகிற 14-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அதற்குள் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டி.எஸ். பி.க்கும், இன்ஸ்பெக்டருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை ஏற்று இருவரும் இன்று காலை 10 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான பத்திரிகையாளர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆனால் எதிர்பார்த்தப்படி டி.எஸ்.பி. மன்னர்மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் வரவில்லை. இதன் பிறகே மாதவராவை சி.பி.ஐ. அதிகாரிகள் குடோனுக்கு அழைத்து சென்றனர்.
மாதவராவின் சி.பி.ஐ. காவல் இன்னும் 2 நாளில் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்னர் போலீஸ் அதிகாரிகள் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
இதற்காக பல்வேறு கேள்விகளுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை டி.எஸ்.பி. மன்னர் மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குட்கா ஊழல் குறித்து அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி. மன்னர்மன்னர், இன்ஸ்பெக்டர் சம்பத் இருவரும் விசாரணைக்கு ஆஜராகும் போது கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குட்கா ஊழல் பற்றி இருவரிடமும் விசாரணை நடத்தும்போது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. #GutkhaScam
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செங்குன்றத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு துறை அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை நடைபெற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரி மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஐகோர்ட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த 3 மாதங்களாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர்.
கடந்த 5-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10-ந்தேதி காலை 11 மணி அளவில் 5 பேரும் ஐகோர்ட்டில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் போது மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனை குட்கா வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
2013-ம் ஆண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டே செங்குன்றம் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் பிறகுதான் குட்கா வியாபாரி மாதவராவிடம் போலீஸ் அதிகாரிகளும், அரசு துறை அதிகாரிகளும் பேரம் பேசி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை சி.பி.ஐ. முடுக்கி விட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரியான செந்தில்முருகன் ஒவ்வொரு மாதமும் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர். இவர் மட்டும் குட்கா ஊழலில் பல கோடிகளை சுருட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
குட்கா ஊழலில் பணம் கைமாறியது குறித்து அங்கு வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் காரணமாக குட்கா விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தில் குட்கா ஊழலில் யார்-யாருக்கு தொடர்பு இருந்தது என்பது பற்றியும், ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனை மையமாக வைத்தே சி.பி.ஐ. அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு பாதுகாப்புதுறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் மாதவராவிடம் இருந்து வாங்கிய லஞ்சப்பணத்தை தங்களது உயர் அதிகாரிகள் யாருக்கும் பங்கு போட்டு கொடுத்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதில் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.
இதன் மூலம் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் இன்னும் சில தினங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை ஐகோர்ட்டு உத்தரவால் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை சி.பி.ஐ. திரட்டியது.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமிஷனராக பணிபுரிந்த மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்ளிட்ட 5 பேரிடமும் மேலும் பல தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு 4 நாட்கள் சி.பி.ஐ. காவலுக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து மாதவராவ் அவரது பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். 5 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
செங்குன்றம் குட்கா குடோன் கடந்த 2014-ம் ஆண்டே சென்னை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டுதான் வருமான வரித்துறையினர் குட்கா முறைகேட்டை வெளியில் கொண்டு வந்தனர். 2014-ம் ஆண்டு குட்கா குடோனில் போலீசார் சோதனை நடத்திய பின்னர் அதன் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் விட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் குட்கா ஊழல் நடைபெற்றதாக புகாரும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாகவே சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். குட்கா ஊழலில் கைமாறிய பணம் எவ்வளவு. அதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே 5 நாள் விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam #CBI
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா வியாபாரிகள் தங்கு தடையின்றி அதனை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருட்கள் சிக்கின. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை ஆய்வு செய்து பார்த்தபோது ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது சிக்கிய டைரி ஒன்றே, குட்கா ஊழலை முழுவதுமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கைமாறியுள்ளது என்கிற விவரமும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபற்றி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயரும் டைரியில் இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, போலீஸ், அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னரும் குட்கா வழக்கு எந்த அசைவும் இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அதிரடி ஆபரேஷனை தொடங்கினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையுடன் விட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குட்கா அதிபர் மாதவராவிடம் திரட்டப்பட்ட தகவல்கள் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
குட்கா விற்பனைக்காக ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, கலால் துறை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றியும் மாதவராவ் புட்டு, புட்டு வைத்தார். இதனை தொடர்ந்து குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளும் சிக்கினர்.
மத்திய கலால் துறை அதிகாரியான கே.என்.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா வழக்கில் மாதவராவே முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரே, யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டு அதனை செயல்படுத்தி உள்ளார். இதனை ஒப்புக் கொண்டுள்ள அவர் அப்ரூவராக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்து மேலும் பல திருப்பங்கள் ஏற்பட உள்ளன. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த கைது நடவடிக்கை போலீஸ் அதிகாரிகள் மீதும் பாய்கிறது.
குட்கா முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட கால கட்டத்தில் புழல் உதவி கமிஷனராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னன் மன்னன் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி.யாகவும், இன்ஸ்பெக்டர் சம்பத் தூத்துக்குடியிலும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ‘‘விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயரும் சிக்கி இருப்பது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் கமிஷனர் ஜார்ஜ் ஓய்வு பெற்றுவிட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடமும் நேற்று முன்தினம் நடந்த சோதனையின் போதே சி.பி.ஐ. அதிகாரிகள் முழு அளவிலான விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனால் சி.பி.ஐ.யின் அடுத்த குறி யார் மீது? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. நெருங்கி இருப்பது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkaScam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்