search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலியானா"

    தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா, தற்போது இந்தி படங்களில் மீண்டும் கவனம் செலுத்த இருக்கிறார். #Ileana
     தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமான இலியானா இங்கு பிசியாக இருக்கும்போதே இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கே தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் வர தென் இந்திய மொழிகளை மறந்து அங்கேயே செட்டில் ஆனார்.

    கடந்த ஆண்டு சில படங்கள் சரியாக போகாததால் ஆறு வருடங்களுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவுக்குத் திரும்பினார். ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார்.



    படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் இப்போது மீண்டும் இந்தி சினிமாவுக்கே திரும்பி விட்டார். ஜான் ஆபிரகாமுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்க விரும்புவதாக கூறிய இலியானா, தனது சொந்த விஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony
    தமிழ், தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமான இலியானா இந்திக்கு சென்ற பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்தார்.

    இந்தியில் வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் தெலுங்கில் அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். தெலுங்கு படங்களின் இடைவெளி பற்றிக் கூறும் போது, “இந்தியில் அதிக படங்களுக்கு நேரம் ஒதுக்கியதால் தெலுங்கு படங்களுக்கு எனக்கு நேரம் குறைவாகவே கிடைத்தது.

    தெலுங்கு திரைப்படங்களில் நடனமாடுவதற்கும், ஒரு காட்சி பொருளாக இருப்பதற்கும் விரும்பவில்லை. சரியான கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் போது, ‘அமர் அக்பர் ஆண்டனி’ அப்படி அமைந்திருக்கிறது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. நான் 20 வயதில் இருந்தபோது என் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தேன்.



    பல வருடங்களாக திரைப்படங்களில் எல்லாவற்றையும் செய்தேன். இப்பொழுது 32 வயதாகிறது. என் சிந்தனை செயல்முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில விவேகமான தேர்வுகள் செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் பிரதிபலிக்கிறேன். நீண்ட காலமாக நினைவுபடுத்தும் படங்களின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony

    பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது என்று நடிகை இலியானா கூறியுள்ளார். #MeToo #Ileana
    தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    ‘மீ டூ’வில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தை கொண்டு வரும். சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. அவர்களுடைய கசப்பான அனுபவங்களை ‘மீ டூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம்.

    பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீ டூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீ டூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன். 

    எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூ உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் பேசமுடியாது. 



    நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு இலியானா கூறினார்.
    தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, அமர் அக்பர் ஆண்டனி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பதால், தான் விட்ட இடத்தை பிடிப்பேன் என்று கூறியுள்ளார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja
    தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். பர்பி எனும் படம் மூலம் இந்தியில் நுழைந்த இலியானா அதற்குப்பின் தெலுங்குப் பக்கம் வரவே இல்லை.

    சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமர் அக்பர் ஆண்டனி எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். ரவிதேஜா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கி உள்ளார். வரும் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் புரோமோ‌ஷன் பணிகளில் இறங்கி உள்ளனர். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



    இவ்விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகை இலியானா பேசும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் ‘தேவ்டு செசினா மனசுலு’ என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடித்துத்தரும் என்று நம்புகிறேன்.

    ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்தப் படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான இலியானா, நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு திருமணத்துக்கு தயாராகி வருகிறார். #Ileana
    தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த இலியானா தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த சில மாதங்களாக இலியானா, ஆண்ட்ரூ என்ற ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரை காதலிப்பதாக செய்திகள் வந்தன.

    இருவரும் கடற்கரையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வெளியாகின. இலியானா கையில் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது. தொடர்ந்து நடிக்கவும் இலியானா ஆர்வம் காட்டவில்லை. 



    எனவே விரைவில் இலியானா நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று செய்தி பரவுகிறது.
    தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை இலியானா, அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதிகம் பேர் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். #Ileana
    தமிழில் சரியான இடம் கிடைக்காததால் நடிகை இலியானா தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

    தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலருடன் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்தி வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் போல இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

    இலியானா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிஜி தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 



    தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு 7 லட்சத்திற்கும் மேலாக லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். 
    தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து பிரபலமான இலியானா, தனது காதலரைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். #Ileana #Ileanadcruz
    ஆஸ்திரேலிய புகைப்படக்காரரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் என்பவர்தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி கடந்த வாரம் பரவியது. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என்றும் செய்திகள் வந்தன.

    இதுபற்றி இலியானாவிடம் கேட்டபோது ‘எங்களுக்கு உண்மையில் திருமணமாகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் சந்தோ‌ஷப்படுவேன். விரைவில் இது நடக்க வேண்டும் என்றும் விருப்பப்படுகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

    எனது காதலர் என்னைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். காதலில் நம்பிக்கை மிக முக்கியம். மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது நான் முதலில் தேடும் மனிதர் ஆன்ட்ருதான். பொதுவாக நான் மனஅழுத்தத்தில் இருக்கும்போது யாரையுமே பார்க்கமாட்டேன். வீட்டிலேயே அடைந்து கிடப்பேன்.



    எல்லாவற்றையும் மீறி யாரேனும் என்னைத் தொடர்புகொள்ள நேரிட்டால் அவர்களை பயங்கரமாக திட்டிவிடுவேன். அதை முற்றிலும் மாற்றியது ஆன்ட்ருதான்’ என்று மனம் திறந்து இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா, தற்போது இந்தயில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்ததாக இசை ஆல்பங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். #Ileana
    திருமணத்துக்கு முன் நான்கைந்து இசை ஆல்பங்களை வெளியிடும் முடிவில் களம் இறங்கியிருக்கிறார் இலியானா. `பெலி தபா’ என்ற அவர் ஆல்பம் ஏற்கெனவே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், காதலர் நீபோனைத் திருமணம் செய்தபிறகு ரசிகர்களைத் தன் குரலால் மயக்கப் போகிறாராம்.

    சினிமா வாய்ப்புகளுக்கு முன்னர் கோவாவில் சிறிய அளவுகளில் பேண்ட்களில் பாடி வந்த அனுபவத்தை இசை ஆல்ப வெளியீட்டின் மூலம் புதுப்பிக்கிறார் இலியானா. இந்தி, ஆங்கிலப் பாடல்களில் பாப் மற்றும் மென்மையான ராக் இசையில் புது ஆல்பத்துக்கான பணிகளை ஜூலையில் தொடங்க இருக்கிறாராம். #Ileana

    ×