என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை"
- ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர்.
- கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசாருக்கு அங்குள்ள கிளாக்குளம் குளத்துக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு யார் அவர்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கூடங்குளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 29) என்பதும், அவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. அரவிந்த் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். இதனால் போலீசார் எப்படியாவது தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அரவிந்த் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில்தான் அவர் குளத்துக்கரையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே அவர் போலீசாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
- வாலிபர் தற்கொலை செய்த அறையிலேயே மற்றொரு வாலிபரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
- கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் தேவாரம் மெயின்ரோட்டில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பிளாண்ட் உள்ளது. இந்த மையத்தை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(24) என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.
தொழிலில் நஷ்டம் ஏற்படவே கடந்த மாதம் 19-ந்தேதி வாட்டர் பிளாண்ட் அறையிலேயே கார்த்திக்கின் தம்பி கிஷோர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அந்த பிளாண்ட்டில் கிஷோரின் உறவினரான சிவகங்கை மாவட்டம் காலாப்பூரை சேர்ந்த பாண்டியன் மகன் விஜய்(19) வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை கிஷோர் தற்கொலை செய்த அறையிலேயே அவரும் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி டவுன்ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 40 நாளில் ஒரே அறையில் ஒரே ஊரை சேர்ந்த 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உன் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உருக்கம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 35). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவருக்கு பிரியா( 28) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சிவானந்தத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து நெமிலி அருகே ஒருவரிடம் மாத சீட்டு கட்டி வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு பணத்தை எடுத்து இருவரும் ஆளுக்கு பாதி என பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு மாதம் தோறும் சீட்டு பணம் கட்டுவதற்கு உரிய பங்கு பணத்தை மோகன் தராமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிவானந்தம் தனது நண்பரான மோகனுக்கு மனைவிக்கு தெரியாமல் வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் அவர் சரிவர கட்டவில்லை இந்த நிலையில் சிவானந்தம் தீபாவளி பண்டிகையில் இருந்து மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சிவானந்தம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா கணவரை காணவில்லை என்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை நெமிலி அடுத்த அச நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிவானந்தம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சிவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான வீடியோ
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவானந்தம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மனைவி பிரியாவுக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் என்னை மன்னித்துவிடு .வாழ எனக்கு தகுதி இல்லை .நீ எவ்வளவு சொல்லியும் நான் உன் பேச்சை கேட்கவில்லை. உன் பேச்சைக் கேட்டு இருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.
நான் இறந்த பிறகு நான் பட்ட கடனை எப்படியாவது அடைத்து விடு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
- காதலை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
அவனியாபுரம்
அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலையம்மாள், இவர்களது மகன் அருண்பாண்டி (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
- போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:
திருவாரூர் மாவட்டம் மூவநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேந்தருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர்.
- குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்தார்
கோவை,
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 32). கூலி ெதாழிலாளி.
இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர். இந்த நிலையில் சுரேந்தருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனை அவர் கைவிட பல முறை முயற்சி செய்து வந்தார்.
ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது குடித்து வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்ததும் அவர் அறைக்கு சென்று துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாண்டிச்செல்வம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
- விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஜெயங்கொண்டாம் ஊராட்சியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 23). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் 2 வயது முதல் தனது தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. முடித்து விட்டு அவரது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆடு, மாடுகள் மேய்த்தும், விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இறந்தவரின் தந்தை ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- செல்வம்அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 38). விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் குடும்பம் நடத்த அழைத்த பின்னரும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் சறுக்கு பாறை பாலம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் இன்று பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார்.
கடலூர்:
வேப்பூர் அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது22). 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோருடன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார். நேற்று காலை அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குணசேகரன் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
கோவை,
கோவை துடியலூரை அடுத்த வெள்ளகிணர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் குரு (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேனி (30).
இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சங்கர் குருவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சங்கர் குரு மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (46), டெய்லர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் தினமும் தனது குழந்தைகளை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு தனது சகோதரரின் ஓட்டலுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.
இதேபோன்று, சம்பவத்தன்று மகேஷ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உணவுக்காக வீட்டிற்கு வந்த நிலையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகள், பள்ளி மாணவர்கள் விடுதி உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது.
கடந்த சில தினங்களாக மாணவர்கள் விடுதி செயல்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திரு வண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த வாலிபர் திருவண்ணாமலை கல் நகரை சேர்ந்த திரு நாவுக்கரசு என்பவரின் மகன் சூர்யா (வயது 17) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்ததும், நேற்று மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே மாரம்பாடியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரது மகன் அருள்செபஸ்தியார்(23). இவர்கள் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாய வேலை செய்து வருகின்றனர்.
குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட தால் மனஉளைச்சலில் இருந்த அருள்செபஸ்தியார் கிணற்றில் குதித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள்பி ரகாஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அருள்செபஸ்தியார் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.