search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராட்பேன்ட்"

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட ஆறு மடங்கு அதிக டேட்டா பழைய விலைக்கே வழங்கப்படுகிறது. #BSNL
     


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேன்ட் சலுகைகளை மாற்றி முன்பை விட கூடுதல் பலன்களை, பழைய விலைக்கே வழங்குகிறது. புது நடவடிக்கை அந்நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சில அன்லிமிட்டெட் சலுகைகளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    கூடுதல் டேட்டா மட்டுமின்றி சில சலுகைகளில் டேட்டா பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது, எனினும் டேட்டா அளவு அதிகபட்சமாக ஆறு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,495, ரூ.1,745 மற்றும் ரூ.2,295 உள்ளிட்ட சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் அதிக பிரீமியம் சலுகையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 35 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.675 சலுகையில் ஏற்கனவே தினமும் 5 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இதே சலுகையில் மாதம் 150 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.845 சலுகையில் தற்சமயம் தினமும் 10 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 300 ஜி.பி. டேட்டா கிடைக்கும். முன்னதாக இதே சலுகையில் பயனர்களுக்கு 50 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டேட்டா மட்டுமின்றி இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்படுகிறது.



    இதேபோன்று ரூ.999 மற்றும் ரூ.1199 சலுகைகளில் தற்சமயம் முறையே தினமும் 15 ஜி.பி. மற்றும் 20 ஜி.பி. டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.1,495 சலுகையில் முன்னதாக 140 ஜி.பி. டேட்டா மாதம் முழுக்க வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் தினமும் 25 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பனர்களுக்கு மொத்தம் 750 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    அதிக விலை கொண்ட பி.எஸ்.என்.எல். ரூ.2,295 பிராட்பேன்ட் சலுகையில் தற்சமயம் தினமும் 35 ஜி.பி. டேட்டா 24Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் 24Mbps வேகத்தில் மொத்தம் 200 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பி.எஸ்.என்.எல். ரூ.1745 பிராட்பேன்ட் சலுகையில் தற்சமயம் தினமும் 30 ஜி.பி டேட்டா 16Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் மொத்தம் 140 ஜி.பி. டேட்டா 16Mbps வேகத்தில் வழங்கப்பட்டு இருந்தது. தினசரி டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வழங்கும் அனைத்து அன்லிமிட்டெட் சலுகைகளிலும் தினசரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு கடந்ததும், டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். #BSNL #broadband 
    இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் இன்டர்நெட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகை அறிவித்துள்ளது. #BSNL #broadband



    இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மூன்று புதிய சலுகைகளையும் குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

    நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது.

    ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.

    இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவு நாடு முழுக்க அமோக வரவேற்பு பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JioGigafiber



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜிகாஃபைபர் சேவைக்கான வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு முக்கிய சந்தைகளில் இறுதிகட்ட இணைப்புகளுக்கான பணிகளுக்கு உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ சேவை துவங்கியதும், ஜியோ உடனான போட்டியை சமாளிக்க உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் அச்சம் கொள்வதே இந்த பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது.



    கேபிள் ஆப்பரேட்டர்களுடனான பிரச்சனையை தீர்க்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    “இறுதிகட்ட இணைப்புகளில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், மேலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தையில் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வோம்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் “நாடு முழுக்க சுமார் 900 நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.” என அவர் தெரிவித்தார்.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் வெற்றி இறுதிகட்ட கனெக்டிவிட்டி சார்ந்தது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜிகாஃபைபர் வணிக ரீதியில் துவங்க ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இணைப்பு வழங்க வேண்டியிருக்கும், அந்த வகையில் இது மொபைல் சேவைகளை டவர்கள் மூலம் வழங்குவதை விட கடினமானதாகும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. #BSNL #offers



    பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள, அந்த வகையில் புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூடுதல் டேட்டா மட்டுமின்றி டவுன்லோடு வேகத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளின் விலை ரூ.3,999 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.16,999 வரை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 1-ம் தேதி துவங்கி, பி.எஸ்.என்.எல். பயனர்கள் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட்: ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகைகளை தேர்வு செய்வோர் கூடுதல் வேகம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர டேட்டா பெற முடியும்.

    ரூ.3,999 சலுகையில் டவுன்லோடு வேகம் 60Mbps ஆகவும், மாதாந்திர டேட்டா அளவு 750 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 50Mbps டேட்டா டவுன்லோடு வேகம் மற்றும் அதிகபட்சம் 500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ரூ.5,999 சலுகையில் தற்சமயம் 70Mbps டேட்டா வேகம் மற்றும் அதிகபட்சம் 1250 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 6Mbps ஆக குறைக்கப்படுகிறது.

    மாற்றப்பட்ட ரூ.9,999 விலையில் 100Mbps வேகம் மற்றும் 2250 ஜிபி டேட்டாவும், நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படும். ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகையில் 100Mbps டவுன்லோடு வேகத்தில் அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் முன்னதாக 100Mbps வேகத்தில் 3000 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. #BSNL #offers
    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Airtel #offer



    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    அதன் பின் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேன்ட் சேவக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இலவச சேவை வழங்கப்படுகிறது.

    இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏர்டெல் செயலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு தைன்-அப் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.

    புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல் 
    தெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.

    அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் தரவுகள் பிரத்யேகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
    இந்தியாவில் ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிரீவியூ சலுகைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #JioGigafiber


    ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், சேவை இன்னும் முழுவீச்சில் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. எனினும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஜியோஃபைபர் பிரீவியூ சலுகை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்படும் போதும் இதேபோன்ற பிரீவியூ சலுகைகள் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் மூன்று மாத காலத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர்கள் ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 முன்பணம் செலுத்தி சேவைகளை பெறலாம். முதல் மூன்று மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சலுகைகளை பெற முடியும்.

    வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் அதிகளவு முன்பதிவு பெறும் நகரத்தில் சேவை முதலில் துவங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ டெலிகாம் சேவையில் ஆறு மாத காலம் இலவச பிரீவியூ சலுகை வழங்கப்பட்ட நிலையில், ஜிகாஃபைபர் சலுகையிலும் இலவச பிரீவியூ சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா மட்டுமின்றி கூடுதல் டேட்டா பெற டேட்டா டார்-அப் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்கள் அதிவேக பிராட்பேன்ட் சேவையை சீராக பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேட்டா டாப்-அப் சலுகையிலும் குறைந்தபட்சம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் டேட்டா டாப்-அப்களை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25 முறை பயன்படுத்த முடியும், இதனால் அதிகபட்சம் 1100 ஜிபி டேட்டா பெற முடியும். கடந்த வெளியான புகைப்படங்களின் படி பிரீவியூ சலுகை சார்ந்த விவரங்கள் தெரியவந்தது.
    பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பி.எஸ்.என்.எல். FTTH ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 விலை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 50 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ.1,045 பி.எஸ்.என்.எல். ஃபைப்ரோ ULD 1045 CS48 சலுகையில் மாதம் 150 ஜிபி டேட்டா 30Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இதே சலுகையில் ஏற்கனவே 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

    ரூ.1,395 ஃபைப்ரோ BBG ULD 1395 CS49 சலுகையில் மாதம் 200 ஜிபி டேட்டா 40Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.1,895 சலுகையில் மாதம் 250 ஜிபி டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.4,999 சலுகையில் 1500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. முதற்கட்டமாக 1500 ஜிபி வரையிலான டேட்டாவிற்கு 100Mbps வேகமும், அதன்பின் டேட்டா வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். புதிய ரூ.4999 சலுகையில் பி.எஸ்.என்.எல். எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் IP முகவரி வழங்கப்படுகிறது.



    பி.எஸ்.என்.எல். ரூ.999, ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 சலுகைகளும் சமீபத்தில் மார்றம் செய்யப்பட்டன. இத்துடன் 20Mbps வேகத்தில் டேட்டா வழங்கும் நான்கு பிராட்பேன்ட் சலுகைகளை அறிவித்தது. இவற்றின் கட்டணம் ரூ.99 முதல் துவங்குகிறது. இவை ஃபைபர் அல்லாத சலுகைகள் என்பதால் பயனர்கள் பாதுகாப்பு முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.  

    பி.எஸ்.என்.எல். ரூ.99 சலுகையில் ஒரு மாத காலத்துக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக குறைக்கப்படும். 

    பி.எஸ்.என்.எல். ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக குறைக்கப்படும்.

    இதேபோன்று ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 10 ஜிபி டேட்டா என மாதம் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜிபி டேட்டா என மாதம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், சேவையின் விலை மற்றும் முழு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை அறிவித்து, 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும், ஜிகாஃபைபர் சலுகைகள் மற்றும் விலை குறித்து எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.



    ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னையில், மாதம் 100 ஜிபி டேட்டாவினை, அதிகபட்சம் 8Mbps வேகத்தில் ரூ.499 என கட்டணம் நிர்ணயம் செய்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூருவில் மாதம் 50 ஜிபி டேட்டாவை 40Mbps வேகத்தில் ரூ.799 விலையில் வழங்குகிறது. இந்நிலையில், ஜியோவின் ரூ.700-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் சேவைகள் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்தது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும்.

    ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.
    ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ பிராட்பேன்ட் சேவைகளில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்பட இருக்கும் நிலையில், பிராட்பேன்ட் சந்தையில் சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்பட இருக்கிறது.

    ஐதராபாத் வட்டாரத்தில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களை தொடர்ந்து ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும். இதே போன்ற சலுகைகள் ஐதராபாத் தவிர மற்ற நகரங்களில் ஏர்டெல் பிராட்பேன்ட் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. சென்னையில் ரூ.999 விலைக்கு 300 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.



    ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.1,299 சேவையில் அதிகபட்சம் 100Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இத்தகைய வேகத்தை கொண்டு மின்னஞ்சல், ஆடியோ அல்லது வீடியோ தரவுகளை டவுன்லோடு செய்யவும், இணையத்தில் பிரவுசிங் செய்யவும் முடியும்.

    எனினும் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க 1,100 நகரங்களில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

    ஏர்டெல் சேவைகளில் அன்லிமிட்டெட் டேட்டா சீரான வேகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், இவற்றில் உண்மையில் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாதம் 3000 ஜிபி-க்கும் அதிக டேட்டா பயன்படுத்தப்படுவதை வணிக ரீதியிலானவை என ஏர்டெல் குறிப்பிடுகிறது.

    அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. இதேபோன்று ஆறு மாதத்திற்கு கட்டணம் செலுத்துவோருக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
    புதிதாய் லேப்டாப் அல்லது கணினி வாங்குவோருக்கு 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
     




    பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகையில் அந்நிறுவனம் 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இலவச இணைப்பு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த சலுகையில் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சமீபத்தில் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி திட்டம் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை 20Mbps வேகத்தில் பி.எஸ்.என்.எல். அறிவித்த பல்வேறு சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 சலுகையின் கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிதாய் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வாங்குவோருக்கு பி.எஸ்.என்.எல். சலுகை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி சலுகையில் ரூ.99 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் இன்டர்நெட் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையுடன் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 150 ஜிபி சலுகையில் ரூ.199, பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 300 ஜிபி சலுகை ரூ.299 மற்றும் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 600ஜிபி டேட்டா ரூ.399 விலையில் மூன்று சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, 10 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.
    கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழகத்தில் நெட்வொர்க் பரப்பளவை அதிகரிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் தமிழகம் முழுக்க 2018-2019 நிதியாண்டு வாக்கில் 12,000 புதிய மொபைல் சைட்கள், ஒவ்வொரு தினமும் 32 புதிய மொபைல் சைட்களை கட்டமைக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 52,000 ஆக அதிகரிக்கும்.

    ஏர்டெல் நிறுவனத்தின் பிராஜக்ட் லீப் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதே திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் புதிய ஆப்டிக் ஃபைபர்களை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்க ஆப்டிக் ஃபைபர் பரப்பளவு 17,000 கிலோமீட்டர்களாக அதிகரிக்க இருக்கிறது.

    தமிழகத்தில் 4ஜி சேவைகளை துவங்கிய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. இத்துடன் மாநிலத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் துவங்கி கிராம பகுதிகள், நெடுஞ்சாலைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் அதிவேக மொபைல் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ ஏர்டெல் கட்டமைத்திருக்கிறது.

    தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் சேவையை இதுவரை சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


    'ப்ராஜக்ட் லீக் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக சேவை வழங்க ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, எதிர்காலத் தேவைக்கு ஏற்ற இணைய கட்டமைப்புகளை உருவாக்க தொடர்ந்து முதலீடு செய்வோம்." என தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்துக்கான ஏர்டெல்-ன் தலைமை செயல் அலுவலர் திரு. மனோஜ் முரளி தெரிவித்தார். 
    பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் மூன்று நம்பர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,199 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை ஃபேமிலி பிளான் என அழைக்கப்படுகிறது. இந்த சலுகையில் பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

    புதிய பிஎஸ்என்எல் ஃபேமிலி சலுகையில் 10Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps  ஆக குறைக்கப்படும்.

    பிஎஸ்என்எல் புதிய சலுகைக்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மூன்று பிஎஸ்என்எல் எண்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு சிம் கார்டிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 



    இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படவில்லை. எனினும், பிரத்யேக ரிங்பேக் டோன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மூன்று பிஎஸ்என்எல் எண்களில் ஒன்றுக்கு இலவச ஆன்டைன் டிவி சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு சிம் கார்டுக்கு ஆன்லைன் கல்வியில் ஒரு பாடத்திற்கு ஒருமாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ஜியோ ஃபைபர் சேவைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் சார்பில் ஃபைபர் பிராட்பேன்ட் சேவை துவங்கப்பட்டது. இத்துடன் மூன்று FTTH சலுகைகளில் டேட்டா அளவை மும்மடங்கு அதிகரித்தது. ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 விலையிலான சலுகைகளில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது.
    ×