search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபூதி"

    நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள்.
    இறைவனை வழிபடுவதற்காக ஆலயங்களுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆலயத்தில் உள்ள அர்ச்சகர் விபூதி, குங்குமம் பிரசாதமாக கொடுப்பார். அப்படி தரப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தை நெற்றியும் வைக்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட விரல்களைப் பயன்படுத்தியே நெற்றியில் விபூதியை பூசிக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

    நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள். ஆகவே விபூதியை எடுக்கும்போது, ஆன்மிக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சில விதிகளைப் பின்பற்றி நன்மைகளைப் பெற முயற்சி செய்வோம்.

    நெற்றியில் விபூதி அணிவதற்கு பயன்படுத்தும் விரல்களில், எந்தெந்த விரல்கள், என்னென்ன பலன்களைத் தருகிறது என்பதை இங்கே பார்ப்போம்.

    கட்டை விரல் என்று சொல்லப்படும் பெருவிரலால், விபூதியை அணிந்தால் தீராத வியாதி வந்து சேரும்.

    ஆள்காட்டி விரலை, விபூதி அணிவதற்கு பயன்படுத்துவதும் தவறு. அந்த விரலைக் கொண்டு விபூதி பூசுவதால், பொருள் இழப்பு உண்டாகும்.

    அதே போல் நடுவிரலைக் கொண்டும் விபூதி அணிந்து கொள்ளக் கூடாது. நடுவிரலில் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும்.

    விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியான ஒன்று. மோதிர விரலினால் விபூதியை தொட்டு அணிந்து கொள்ளும் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவார்கள்.

    சிறு விரல் எனப்படும் சுண்டு விரலும் விபூதி அணிந்து கொள்ள ஏற்றதல்ல. இதன் மூலம் விபூதி அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு, உலகமே வசப்படும். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.
    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.

    இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

    அவற்றுள் சில,

    1. பிரம்மா, விஷ்ணு, சிவன்

    2. சிவன், சக்தி, ஸ்கந்தர்

    3. அறம், பொருள், இன்பம்

    4. குரு, லிங்கம், சங்கமம்

    5. படைத்தல், காத்தல், அழித்தல்.
    தேனி அருகே கோவில் விழாவில் வீசிய விபூதியால் 300 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பக்தர்கள் அனைவரும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேனி, மே. 29-

    தேனி அருகே கோவில் விழாவில் வீசிய விபூதியால் 300 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

    தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் கடந்த 5 நாட்களாக சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    கத்தி போடும் சமயங்களில் உடலில் அதிக அளவு ரத்தம் வெளியேறாமல் தடுக்க அவர்கள் மீது விபூதி வீசுவது வழக்கம். அதன்படி திருவிழாவில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் மீது விபூதி வீசப்பட்டது.

    இரவு திருவிழா முடிந்ததும் பக்தர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கண்கள் வீங்கி எரிச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் இன்று காலை முதல் தேனியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களுக்கு முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருவிழாவின் போது பக்தர்கள் மீது வீசிய விபூதியில் ரசாயனக் கலவை கலந்ததால் இது போன்று நடந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த விபூதியை ஆய்வுக்கு அனுப்பி சோதனை நடத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

    ×