search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர்கள்"

    சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பா. ரஞ்சித் இதை கூறியுள்ளார். #pranjith

    சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    “சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.

    மக்கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.

    வெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு... என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.

    ஓய்வுக்குப் பின் இடம் தேவை என்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். #DrKrishnasamy

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் புதிய தமிழம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு.

    மேலும் அந்த பகுதியில் நடைபெறும் அரசு வேலை திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணையம் 2019-ல் நடைபெறும் பொதுத் தேர்தலோடு இதனையும் நடத்தலாம்.

    தேவேந்திரகுல வேளாள மக்கள் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்களில மேகுத நில மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகள் மோசடி செய்து அவர்களை பின்தங்கிய சமூகமாக மாற்றியுள்ளது.

    இட ஒதுக்கீடு இல்லாமல் தங்களது திறமையால் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் முன்னேறி வந்துள்ளனர்.

    தேவேந்திரகுல வேளாளர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.

    திருமாவளவன் 2003-04ல் குறிப்பாக ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தபோது தனது பெயரை மாற்றி வெளிநாட்டு தொடர்பில் உள்ளார்.

    அவருக்கு வழங்கப்பட உள்ள முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியரிடம் ஆய்வறிக்கை குறித்து புகார் அளித்துள்ளோம். இதனை மீறி முனைவர் பட்டம் வழங்கினால் நீதிமன்றம் செல்வோம்.

    நடிகர்கள் ஓய்வுக்குப்பின் மற்றொரு இடம் தேவை என்பதால் அரசியலுக்கு வருகிறார்கள்.

    இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #DrKrishnasamy

    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றிய ஸ்டாலின், தலைவராக வருவது தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.



    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றதில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்ன என்றால் கர்நாடகத்திடம் இருந்து முறைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தருவது மட்டும் தான்.

    அந்த தண்ணீரை சேமிப்பதா? அல்லது கடலில் கலக்க விடுவதா? பாசனத்துக்கு விடுவதா? என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியாக. முதல்நிலை கூட்டணியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்று பழம்பெரும் நடிகையான கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார். #TNPolitics #KRVijaya
    சேலம்:

    சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் சரணம் பல்லவி என்ற படப்பிடிப்பு தொடக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது.

    இதில் கதாநாயகனாக சேலத்தை சேர்ந்த ரிஸ்வான், கதாநாயகியாக பிரியங்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தை சேலத்தை சேர்ந்த சாய் இளவரசன் இயக்குகிறார். இதில் வில்லனுடைய அக்காவாக பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா நடிக்கிறார்.

    மேலும் திருமணம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யும் வேடத்திலும், காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்.

    மொத்தம் 40 நாட்கள் சேலம், ஏற்காடு, ஊத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் 4 பாடல்கள், 4 சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன.

    இன்று ஊத்துமலை முருகன் கோவிலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட கே.ஆர்.விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால் நான் நடிக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதத்தால் படம் வெற்றி பெறும். முன்பை விட தற்போது எல்லோருடைய வாழ்க்கையும் வித்தியாசமாக செல்கிறது. எல்லாமே வேகமாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தில் சில காட்சிகள் மட்டும் டப்பிங் எடுக்கப்படும். தற்போது படம் முழுவதுமாக டப்பிங்கில் எடுக்கப்படுகிறது.

    மேலும் பல நல்ல நடிகர்கள் சினிமாவுக்கு வரவேண்டும். சினிமா என்பது கடல் மாதிரி. இதனை நம்பி நிறைய பேர் பிழைத்து வருகிறார்கள். நடிகை சாவித்திரி கதையை படமாக எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் சினிமாவுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் கலைக்கூடம். அவர்கள் ஏராளமான அறிவுரைகளை சொல்லி இருக்கின்றனர்.

    முன்பு போல் படக்கதைகள் வருவதில்லை. தற்போது வேறுவிதமான படக்கதைகள் வருகிறது. ஆனால், நான் கடைசி மூச்சு வரை தொடர்ந்து நடிப்பேன். குஷ்பு, சிம்ரன், விஜய், சூர்யா என ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் உண்டு.

    நான் எந்த நடிகருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் இல்லை. நடிகர், நடிகைகள் கிசுகிசு பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானே செத்து போனதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதையும் தாண்டி நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    அரசியல் பற்றி எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்து ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. எல்லோருக்கும் அரசியலில் வர உரிமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPolitics #KRVijaya
    ×