search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணத்தொகை"

    கஜா புயலால் பாதித்த மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan #GajaCyclone #TNGovernment
    சென்னை:

    மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

    தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட  நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு "நல்ல சோறு"  போட்டவர்கள் இன்று அரசு வழங்கும்   "புழுத்துப்போன அரிசியை" சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது   மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

    அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும்.  நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் "கிராம நிர்வாக அதிகாரிகள்" கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும்  அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது.



    வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

    கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன  செய்வார்கள்  என்பது  கேள்விக்கு  உரியதாக  இருக்கின்றது.

    இது  தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

    இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8  வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.#KamalHassan #GajaCyclone #TNGovernment
    நாகலாந்து மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிவாரண நிதியாக முதல்மந்திரி ரியோ கோரியுள்ளார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாகலாந்து மாநிலத்திற்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது.



    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும் அதிக சிக்கல் நிலவி வருகிறது.

    இதையடுத்து, முதற்கட்டமாக சாலைகளை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல்மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு இவர் நிவாரண உதவி கோரியிருந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக நாகலாந்து அளித்தது குறிப்பிடத்தக்கது. #NagalandFlood
    ×