என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 149151
நீங்கள் தேடியது "டெங்கு"
தி.மு.க. மருத்துவ அணி சார்பில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடத்திட மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #DMK #DengueFever #SwineFlu
சென்னை:
தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பூங்கோதை, செயலாளர் என்.வி.என். சோமு கனிமொழி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இறந்துள்ளனர்.
இதையடுத்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மக்களை நேரில் சந்தித்து மருத்துவ முகாம் நடத்தி நோய்களை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நில வேம்பு கசாயம் வழங்குவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடத்திட மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் என்.வி.என்.சோமு கனிமொழி, விருதுநகரில் பூங்கோதை, திருவள்ளூரில் வி.கலாநிதி, காஞ்சீபுரத்தில் ஆர்.டி.அரசு ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள்.
தி.மு.க. மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களோடு கலந்து பேசி மருத்துவ முகாம்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #DengueFever #SwineFlu
தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பூங்கோதை, செயலாளர் என்.வி.என். சோமு கனிமொழி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இறந்துள்ளனர்.
இதையடுத்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மக்களை நேரில் சந்தித்து மருத்துவ முகாம் நடத்தி நோய்களை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நில வேம்பு கசாயம் வழங்குவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடத்திட மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் என்.வி.என்.சோமு கனிமொழி, விருதுநகரில் பூங்கோதை, திருவள்ளூரில் வி.கலாநிதி, காஞ்சீபுரத்தில் ஆர்.டி.அரசு ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள்.
தி.மு.க. மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களோடு கலந்து பேசி மருத்துவ முகாம்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #DengueFever #SwineFlu
பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #ShraddhaKapoor #Shraddha
பிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர். இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் 27-ந் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக அவரால் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X