என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு"

    • வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    • நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.

    தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.

    இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும்.
    • பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன

    பல்லடம் : 

    பல்லடம் வடுகபாளையம் ஹலோபிளாக் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(வயது 62). இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகிறார். இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த சுமார் 5 வயதான பசுமாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.

    வழக்கமாக பசுமாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும். இந்த பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. அந்த இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இது குறித்து ஈஸ்வரி கூறியதாவது:- எங்கள் வீட்டில் 5 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறோம்.இதுபோல ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது இல்லை. தற்போதுதான் இது நடந்துள்ளது. இதனை எங்கள் குடும்பத்திற்கு "தெய்வத்தின்" கருணையாக பார்க்கின்றோம். பசுமாடு மற்றும் இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தாந்த நாடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். மாடுகள் அனைத்தும் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த மூடப்படாத 20 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த நிலைய அலுவலர் மாதன் மற்றும் கருப்பசாமி தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

    • கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர்
    • 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 45). விவசாயியான இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். அவர் வைத்திருந்த ஒரு பசு மாடு கன்று போடும் நிலையிலிருந்தது. சம்பவத்தன்று மாலையில் கன்று போடக் கூடிய அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் வெகு நேரமாகியும் பசுமாடு கன்றுபோட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து அவரது உறவினர் மூலம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபாளையத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்ற உதவி கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர். அவர் சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டின் வயிற்றிலிருந்து மூன்று கன்றுகளை வெளியே எடுத்துள்ளார். இதில் 3 கன்றுகளுமே காளைக்க ன்றுகளாக இருந்துள்ளது. ஆனால் 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது. ஒரு கன்றுக்குட்டி மட்டுமே கால்நடை மருத்துவரால் காப்பாற்ற முடிந்தது. இதனால் விவசாயி நவநீதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரி யத்தை ஏற்படுத்தினாலும், அதில் இரண்டு கன்றுகள் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீர் என்று சகதியில் சிக்கிக் கொண்டது.
    • சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கட்டி மீட்டனர்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே நாடான்குளம் பகுதியில் பன்ணிகுண்டு குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் கால்நடைகள் அடிக்கடி இறங்குவது வழக்கம். சம்பவத்தன்று குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீர் என்று சகதியில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்து வெளியே வரமுடியாமல் அந்த பசு, பல மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் குளத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சகதியில் சிக்கிய அந்த பசுமாட்டை தீயணைக்கும் படை வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கட்டி மீட்டனர்.

    • அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.
    • 30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.

    மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் உதவி மாவட்ட அலுவலர் பழ. தியாகராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ரவி, தீயணைப்பு வீரர் பிரபாகரன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு மீது கயிறை போட்டு கட்டினர்.

    30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர். 

    • பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    எஸ்.எஸ்.காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரிய முத்து (வயது39). இவரது பசுமாடு திருடுபோனது. அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாட்டுச் சந்தை நடைபெறும் இடங்களுக்கு சென்று தனது மாட்டை பெரியமுத்து தேடி வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கு சென்றபோது, அவருடைய மாடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது தனது மாட்டை கணவன்-மனைவி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    உடனடியாக அவர்களை எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் வேடசந்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி (38) மற்றும் அவரது மனைவி சத்யா (34) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

    • கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
    • எதிர்பாராத விதமாக 5 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு சொந்தமான பசு மாட்டை அதே பகுதியில் உள்ள அசோகன் என்பவருடைய வயலில் உள்ள தரிசு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 15 அடி ஆழமுள்ள உரை கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. இதனை பார்த்த மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிற்றால் பிணைத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பசு மாட்டினை மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர்.

    • விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டித் திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52), விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி மீது பசுமாடு ஒன்று சென்றபோது மூடி உடைந்து 12 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் எந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றி பொக்லைன் எந்திரம் மூலம் பசுமாட்டை கயிறு கட்டி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.



    • சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்கப்பட்டது.
    • பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நுத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40), விவசாயி. இவர் தனது வயலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயலின் அருகே உள்ள புதைக் குழியில் பசுமாடு இறங்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி வெளியே மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



    • வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
    • பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியில் சுனாமி குடியி ருப்பு உள்ளது. இந்த பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகளில் யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.

    கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று இந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    • சீர்காழியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடு 10 அடி பள்ளத்தில் விழுந்தது.

    மயிலாடுதுறை:

    சீர்காழி சிங்காரத்தோப்பு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்.

    இவரது பசுமாட்டை காலை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில் கீழத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக பசுமாடு விழுந்தது.

    10அடி பள்ளத்தில் விழுந்த மாட்டின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தனர்.

    பின்னர் தொட்டியில் விழுந்த பசு மாட்டினை மீட்க சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை மீட்க முயன்றனர்.

    சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்.

    பசு மாட்டை கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது.

    மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×