search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு"

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மணி. விவசாயியான இவரது கணவர் கிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 மாத கர்ப்பிணியான சினை பசுமாடு ஒன்றை அவரது விவசாய கிணற்றின் ஓரமாக உள்ள வயல் வரப்பில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். அங்கே புற்களை மேய்ந்த மாடு கிணற்றின் திட்டுகளில் செழிப்பாக உள்ள புற்களை மேய்வதற்காக கிணற்று திட்டிற்கு சென்றுள்ளது.

    அப்போது நிலை தடுமாறிய சினை பசுமாடு தவறி கிணற்றில் விழுந்தது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்தநிலையில் தண்ணீரில் விழுந்த பசுமாடு மேலே ஏறமுடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளது. இதையறிந்த பெண் விவசாயி அம்மணி அக்கம் பக்கத்தினரை அழைத்து பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பசு மாட்டை மீட்க முடியாத நிலையில் சினைமாடு தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி வந்தது. இதையடுத்து உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக கிணற்றில் குதித்தனர். பின்னர் பசுமாட்டை மீட்க கிணற்றில் போடப்பட்ட கயிறுகளை கொண்டு பசுமாட்டை பாதுகாப்பாக கட்டினர்.

    இதையடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கையிற்றை மேலே இழுத்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மேலே வந்த மாட்டிற்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டது. சிறுதுநேரம் படுத்தே இருந்த பசுமாடு எழுந்து நடக்க தொடங்கியது. சினை மாடு உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து பெண் விவசாயி அம்மணியும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர். தொடர்ந்து லேசான காயமடைந்த பசுமாட்டிற்கு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே டான்பெட் உரகிட்டங்கி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விருதுநகர் தாமரை தெருவை சேர்ந்த முத்து என்பவரது பசுமாடு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

    கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதீஸ்வரன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரை மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பசுவை உயிருடன் மீட்டவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு சினையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    எஸ்.வாழவந்தி அருகே 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர்.
    மோகனூர்:

    நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.

    பின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர்.

    சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள். 
    ×