search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்னா"

    புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 15-16 என்று நெருங்கி வந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதால் பின்தங்கி போனது. பாட்னா அணியில் கேப்டன் பர்தீப் நார்வல் ரைடு மூலம் 13 புள்ளிகள் சேர்த்தார்.

    இதன் மூலம் தொடக்க லீக்கில் தமிழ் தலைவாசிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. 13-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இன்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.  #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas 
    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டியில் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. #ProKabaddi #UMumbai #PatnaPirates
    பாட்னா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா) 40-39 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 5-வது வெற்றியாகும். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 39-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது. இன்றைய ஆட்டங்களில் டெல்லி-உ.பி.யோத்தா (இரவு 8 மணி), பாட்னா-அரியானா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
    பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காப்பக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். #BiharShelter
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அதிக காய்ச்சல் காரணமாக இரு பெண்களும் பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது தெரிய வந்தது.

    இரு பெண்கள் இறந்தது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    பீகார் மாநிலத்தில் நாட்டையே உலுக்கிய காப்பகத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு காப்பகத்தில் 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். #AasraShelterHome #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முசாபர்ப்பூர் எனும் பகுதியில் இயங்கி வந்த சிறுமியர் காப்பகத்தில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டது சிறுமிகள் என்பதும் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நேபாளி நகர் எனும் பகுதியில் இயங்கிவரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக அந்த பெண்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போதே அவர்கள் உயிரிழந்ததாகவும் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால், அந்த 2 பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே மரணம் அடைந்து இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

    முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடியதாகவும், காப்பகத்தின் அருகில் இருப்பவரின் தொந்தரவு காரணமாக அவர்கள் தப்பியோடியதாகவும் காப்பகம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. #AasraShelterHome #Bihar
    பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பாட்னாவில் நடந்த போராட்டத்தின்போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. #BiharResult #BiharStudentsProtest
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், 53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. சில மாணவர்களுக்கு  மொத்த மதிப்பெண்களைவிட கூடுதலாக மதிப்பெண் வழங்கியது, தேர்வு எழுதாத மாணவருக்கு மதிப்பெண் வழங்கியது தெரியவந்ததால் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    விடைத்தாள்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் அல்லது தேர்வு வாரியம் மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று பாட்னாவில் உள்ள இடைநிலைக் கல்வி வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, தேர்வு முடிவுகளில் முரண்பாடு இருப்பதாகவும், கல்வித்துறை அலட்சியமாக செயல்பட்டதாகவும் மாணவர்கள் கோஷமிட்டனர்.



    மாணவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் உருவானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் கான்பூர் பல்கலைக்கழக மாணவர்களும், தங்கள் தேர்வு முடிவுகளில் முரண்பாடு இருப்பதாக கூறி கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

    பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மறுபடியும் ஆய்வு செய்வதற்கு ஜூன் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #BiharResult #BiharStudentsProtest
     
    பீகார் தலைநகர் பாட்னாவில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் இன்று ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் வெடித்து சிதறிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #100LPGcylindersblast
    பாட்னா:

    பீகார் தலைநகர் பாட்னா நகரில் உள்ள புறவழிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் இன்று லாரியில் இருந்து சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்தனர். சுமார் 450 சிலிண்டர்களுடன் இருந்த அந்த லாரியில் இருந்து இறக்கப்பட்ட இரு சிலிண்டர் கைநழுவி தரையில் விழுந்தது.

    விழுந்த சிலிண்டர் சூடாக இருந்த லாரியின் சைலன்ஸர் மீது பட்டதில் வெடித்து சிதறியது. இதனால் அந்த லாரியில் தீ பிடித்தது. தீயின் வெப்பத்தால் லாரியில் இருந்த நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.



    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பத்துக்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அதற்குள் வேகமாக பரவிய தீ, அருகாமையில் உள்ள ரசாயன ஆலையையும் பதம் பார்த்தது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரி மற்றும் ரசாயன ஆலையில் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். #100LPGcylindersblast

    மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு ஜாமீன் பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
    ×