search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்க்கப்பல்"

    இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இந்தியா - ரஷியா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. #India #Russia #Warship
    புதுடெல்லி:

    இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் - ரஷியாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே ரூ.3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களும் கட்டப்படும். இதற்காக வடிவமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் சில உபகரணங்களை ரஷிய நிறுவனம் அளிக்கும்.

    இதுபற்றி கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சேகர் மிட்டல் கூறும்போது, “இந்திய கடற்படைக்காக இந்த 2 போர்க் கப்பல்களும் கட்டப்படுகின்றன. கப்பல் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கும். முதல் கப்பல் 2026-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். மற்றொரு போர்க்கப்பல் 2027-ம் ஆண்டு இணைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
    ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #SunkenRussian #Warship
    மாஸ்கோ:

    ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது.  1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது.

    அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) தங்கக்கட்டிகளும், நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.



    இந்த தங்க கட்டிகளும், நாணயங்களும் 2 லட்சம் கிலோ எடை உடையதாகும். இந்தக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளேஉங்டோ தீவு கடலில் 420 மீட்டர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

    தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள்தான் இந்த கப்பலை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த கப்பலை 2 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி படம் எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    அந்தப் படங்களில் இருந்து இந்த போர்க்கப்பல் பெரிதும் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷியாவுக்கு வழங்கப்படும் எனவும், அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷியாவுடன் இணைக்கும் ரெயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் என தெரியவந்து உள்ளது.

    10 சதவீதம், போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள உள்ளேஉங்டோ தீவின் சுற்றுலா திட்டங்களுக்காக செலவிடப்படும்; அந்தக் கப்பலுக்காக ஒரு அருங்காட்சியகமும் நிறுவப்படும் என கூறப்படுகிறது.

    ஆனால் கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிகாரிகள், இந்தக் கப்பலில் தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இருந்தால், அவற்றை மொத்தமாக தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #SunkenRussian #Warship  #tamilnews
    சீனா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது. இந்த கப்பல் நேற்று டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. #China #Aircraft
    பீஜிங்:

    சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.

    இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

    கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.  #China #Aircraft
    ×