search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாலு"

    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள லாலு பிரசாதை வரும் டிசம்பர் 20-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #IRCTCScam #Lalu
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
     
    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.



    இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வ யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. அத்துடன் நவம்பர் 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் லாலு பிரசாத் யாதவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    அதன்படி ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால், லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் லாலுவை மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
    மருத்துவ சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட ஜாமின் நீட்டிப்பு காலம் முடிவடைந்ததால் சிறை தண்டனையை தொடர பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் இன்று ராஞ்சி வந்தடைந்தார். #LaluPrasad #Lalusurrender
    ராஞ்சி:

    பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை ஆறுவார காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து ராஞ்சி ஐகோர்ட் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். 

    மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த  8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது ஜாமின் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

    இதற்கிடையில், உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால் கடந்த 6-ம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லாலுவின் ஜாமினை நீட்டிக்குமாறு ராஞ்சி ஐகோர்ட்டில் அவரது வழக்கறிஞர் பிரபாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். 

    இதை பரிசீலித்த ஐகோர்ட் நீதிபதி அபரேஷ் குமார், மருத்துவ சிகிச்சைக்காக லாலுவுக்கு முன்னர் அளிக்கப்பட்ட ஜாமினை ஆகஸ்ட்  20-ம் தேதி வரை நீட்டித்து கடந்த பத்தாம் தேதி உத்தரவிட்டார்.  

    மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி வரும் 30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மும்பை மருத்துவமபையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த 25-ம் தேதி பாட்னா திரும்பினார்.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட லாலு, விமானம் மூலம் இன்று மாலை ராஞ்சி நகரை வந்தடைந்தார். நாளை ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சரணடையும் லாலு பிர்ஸா முன்டா சிறையில் மீண்டும் அடைக்கப்படுவார். #LaluPrasad #Lalusurrender  
    நெஞ்சு வலிக்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் இன்று பாட்னா திரும்பினார். #LaluarrivesPatna
    பாட்னா:

    கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக கடந்த மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.

    மகள் மிசா பாரதி மற்றும் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் அவருடன் சென்றனர். மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில், மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு இன்று திரும்பினார். #LaluarrivesPatna  
    நிதிஷ்குமார் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்று பீகாரில் நடந்த பேரணியில் லல்லு மகன் தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார். #Tejaswi #nitishkumar #lalu

    பாட்னா:

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.

    அதன்பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற பா.ஜனதா நிதிஷ்குமாருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ளது.

    நிதிஷ்குமார் அமைச்சரவையில் மந்திரிகளாக இடம் பெற்று இருந்த லல்லு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.

    லல்லுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவரது மகன்கள் இருவரும் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள்.

    நேற்று பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 22-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாட்னாவில் நடந்த பேரணியில் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் கலந்து கொண்டனர்.

    அப்போது முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் நிதிஷ்குமாருடன் லல்லுபிரசாத் யாதவ் கூட்டணி அமைத்தார். நிதிஷ்குமாரை முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைக்க பல தியாகங்கள் செய்தார். நிதிஷ்குமார் ஏதாவது தியாகம் செய்துள்ளாரா?

    இப்போது நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. நீங்கள் ஓய்வு பெறுங்கள் அல்லது மக்கள் உங்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவார்கள். 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்னை மெகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து உள்ளார்கள்.

    இப்போது எனக்கு நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவி தருவதாக கூறினாலும் அதை நான் ஏற்கமாட்டேன். மக்கள் ஆசியுடன் நான் முதல்-மந்திரி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளது.

    நிதிஷ்குமாருக்கு அரசியல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள்தான் அரசியலில் நீடிக்க முடியும். வருகிற தேர்தலில் சமதர்மத்துக்கும், ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி.

    பீகார் சட்டசபையின் பதவி காலம் 2020-ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து முன்கூட்டியே பீகார் சட்டசபைக்கும் தேர்தல் வரும். தற்போது நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறார். அவர் அங்கு இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார் #Tejaswi  #nitishkumar #lalu

    கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு, தனது மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #laluseekingparol
    ராஞ்சி:

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜார்கண்ட்டில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு வருகிற 12-ம் தேதி பாட்னாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மே 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாள் பரோல் வேண்டி லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை ஐ.ஜி ஹர்ஷ் மங்கலா தெரிவித்துள்ளார். மேலும், பயணத்துக்கான நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று மாலையே விமானம் மூலம் லாலு பிரசாத் கிளம்ப உள்ளதாக, லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பொதுச்செயலாளருமான போலா யாதவ் தெரிவித்துள்ளார். #laluseekingparol 
    ×