search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாத்தாள்"

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் வினாத்தாளில் 2017-ம் ஆண்டு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. #AnnaUniversity

    சென்னை:

    அண்ணாபல்கலை கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரம் பரபரப்பாகி அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் 2017-ம் ஆண்டு வினாதாளில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

    இ.சி.இ. பாடப்பிரிவில் 6-ம் பருவ தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்விகள் அப்படியே இடம் பெற்று உள்ளன. புதிய வினாத்தாளில் 2 மார்க் கேள்விகள் மற்றும் எது சரியான விடை என்பது போன்ற கேள்விகள் வரிசை எண் கூட மாறாமல் கடந்த வருட வினாத்தாள் போன்றே கேட்கப்பட்டுள்ளது.

    தனியார் கல்லூரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வினாத்தாள் தயாரிக்கும் போது 4 மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், அதில் ஒன்றை தான் தேர்வு குழுவினர் தேர்வு செய்வது வழக்கம். கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட அதே கேள்வித்தாளை எப்படி இந்த வருடம் தேர்வுக்கு பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. திட்டமிட்டு தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

    வினாத்தாளில் முறைகேடு நடந்திருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், இதனை விசாரிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    அண்ணாபல்கலைக் கழகத்தில் மீண்டும் வினாத்தாள் முறைகேடு விஸ்வரூபம் எடுக்கிறது.  #AnnaUniversity

    அரசு பணி தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பாக 11 பேரையும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். #UPSSSCExam #PaperLeak
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 500 காலியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு நேற்று நடக்க இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்குரிய வினாத்தாள் நேற்று முன்தினமே சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் தேர்வை ஒத்திவைத்த மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுக் கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

    இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக, மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 11 பேரை கொண்ட குழு ஒன்று வினாத்தாளை திருடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவர்களில் 5 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மீரட் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 11 பேரையும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு வினாத்தாளை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை அவர்கள் விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  #UPSSSCExam #PaperLeak 
    ×