என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த மழை"

    • சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
    • 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது.

    ஆந்திராவில் உள்ள சித்தூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

    இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது. ஸ்ரீகாகுளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சந்திப் என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருப்பதி சம்சுக்தி நகரில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதே போல் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    • தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது.

    தொடர்ந்து இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்த நிலையில் அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் பணியை முடித்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே மழையினால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இந்த மழையால் சீர்காழி நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

    வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    இந்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
    • இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யாவிட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பவானி, வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வில்லை. இனி வரும் நாட்களில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-23, வரட்டுபள்ளம்-7.40, அம்மாபேட்டை-6.60, குண்டேரிபள்ளம்-5.20, பவானிசாகர்-4, கொடி வேரி, சென்னிமலை-2, பெருந்துறை-1. 

    • ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்திய மங்கலம் போன்ற பகுதிகளி லும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரி பள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.

    • சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.
    • திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. இந்த நிலை யில் சங்கராபுரம் பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    இதனால் சங்கராபுரம் பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதே போல் பகண்டை கூட்டு ரோடு, அரியலூர், வானபுரம், பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

    • தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
    • வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவி வருகிறது.

    இந்த வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலம், ஏற்காடு, மேட்டூர், அயோத்தியாப்–பட்டணம், காடையாம்பட்டி, எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை 2 மணி நேரம் விடாமல் ெபய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை தூறிக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் நிலவிய புழுக்கம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    இதனால் வீடுகளில் பொதுமக்கள் இரவு நிம்மதியாக தூங்கினர். இந்த திடீர் மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • திருவண்ணாமலையில் பலத்த மழை
    • போக்குவரத்து பாதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது.

    இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஓரிரு தினங்களாக மாவட்டத்தில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மதியம் சுமார் 3.30 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பைக், காரில் சென்றவர்கள் சாலையோரம் ஒதுங்கி சென்றனர். இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் நின்றது. அப்போது போளூர் செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து சாலையோரம் நின்று இருந்த வாகனங்கள் மற்றும் காய்கறி கடைகள் அனைத்தும் முழுகடித்து சென்றன.

    இதனால் பள்ளி மாணவர்களும் சாலையில் ஒரே நேரத்தில் சென்றதால் திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த பலத்த மழையினால் சுமார் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் சரிந்து விழுந்து கிடந்தது. மேலும் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் கிளிப்பட்டு அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை போலீசார் சீர் செய்தனர்.

    • சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்ததால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்து விழுந்தன.
    • மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ,காடாம்பு லியூர், பாவைகுளம்,சிறுதொண்டமாதேவி, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்தது.இதனால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்துவிழுந்தன. 100 ஏக்கருக்கு மேற்பட்ட மா, பலா, வாழை மரங்கள் சாய்ந்தது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிப்படைந்த இடங்களை மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடலூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைமனுவில்கோரியுள்ளார்.

    • சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது
    • அனல் தணிந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் மழை பெய்ததால் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    சேத்துப்பட்டு வந்தவாசி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்லும்போது அங்குள்ள கடைக்குள் மழைநீர் சென்றது. இதனால் கடை நடத்துபவர் கள் அவதிப்பட்டனர்.

    திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. அதன்படி நேற்று பகலிலும் வெயில் கொளுத்தியது. மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் அரை மணி நேரத் திற்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால் அனல் காற்று குறைந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.

    • இடிமின்னலுடன் பெய்த மழையினால் 70 மற்றும் 45 ஆண்டுகால பழமையான மரங்கள் முறிந்துசாலையில் விழுந்தது.
    • பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை யினர் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    கோடைகாலம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வ ப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. நேற்று இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

    போடியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் 70 ஆண்டுகால பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதேபோல் போடி வ.உ.சி நகரில் ரேசன் கடை அருகே இருந்த 45 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்துசாலையில் விழுந்தது.

    அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக சேதம் ஏற்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக மின்வாரியத்துறையினர் மின்இணைப்பை துண்டித்த னர். மேலும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்து ப்பாறை, கல்லாறு, கும்ப க்கரை, செழும்பாறு உள்ளிட்ட அனைத்து ஆறு களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்ம ங்கலம், குள்ளப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வராக நதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை யினர் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.43 அடியாக உள்ளது. 50 கனஅடிநீர் வருகிற நிலையில் 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.73 அடியாக உள்ளது. 18 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.6, தேக்கடி 28.2, கூடலூர் 4.2, சோத்துப்பாறை 11 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன .கூடலூர் மெயின் பஜார் வீதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் பெரும் பான்மையான இடங்களில் கழிவுநீர் கால்வாய் களை மறித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

    இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது .இதன் காரணமாக கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாக்கடை கால்வாயில் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் குளம் போல் தேங்கியது.இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் தவித்தனர். எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பஜார் வீதி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அடித்தது.
    • கோத்தகிரியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ணநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் இந்த சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். கோத்தகிரியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கோடநாடு பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ×