search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதிநீக்கம்"

    தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. #SC #ReservedConstituency #MLAsdisqualification
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் ஐ.கண்ணன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக சட்டசபையில் கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான தனித்தொகுதிகளில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த தகுதிநீக்கம் அரசியல் சட்டப்பிரிவுகள் 101-ஏ மற்றும் 109-ஏ அடிப்படையில் செய்துள்ளதாக தெரிகிறது.

    தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது தவறானது ஆகும். இது அவர்களின் உரிமைக்கு எதிரானதாக அமைந்துள்ளது. எனவே, இந்த சட்டப்பிரிவுகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SC #ReservedConstituency #MLAsdisqualification
    இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #Pakistan #SupremeCourt #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார்.

    அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.



    அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு காலாவதியாகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது கடந்த பாராளுமன்ற காலகட்டத்தில் போடப்பட்டது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். #Pakistan #SupremeCourt #ImranKhan
    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. #OPPanneerselvam #TTVDhinakaran
    புதுடெல்லி:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின் தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. (நடராஜ் (மயிலாப்பூர்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), மனோகரன் (வாசுதேவநல்லூர்) ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் அவர்களை சேர்க்கவில்லை என தினகரன் தரப்பில் கூறப்படுகிறது)

    இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தங்க தமிழ்செல்வன் உள்பட தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்துசெய்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதுதொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே 10-ந் தேதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   #OPPanneerselvam #TTVDhinakaran #Tamilnews 
    துணை முதலைச்சர் ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒரு அணியாக இணைந்த பிறகு, தினகரன் அணி என 3-ம் அணி உருவானது. அந்த அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றுமாறும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.



    இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC 
    பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #KhawajaAsif

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் என்.ஏ-110 தொகுதியில் போட்டியிட்டு வென்று தேசிய சபைக்கு சென்றார். அவரை எதிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் தார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இக்வாமா எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டின் பணி அனுமதி (work permit) ஆசிப்பிடம் இருக்கிறது. ஆனால், அவர் வேட்புமனுவில் அதனை மறைத்துள்ளார் எனவே ஆசிப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உஸ்மான் தார் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கிய இஸ்லாமாபாத் ஐகோர்ட், அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், அவர் தனது பதவியை இழந்தார். 

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஹவாஜா ஆசிப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஹவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்து முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhawajaAsif 
    ×