search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • கணவன, மனைவி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார பாலசுதர்சன் ( வயது 45) . இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (34) . குமார பாலசுதர்சன் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் நூல் மில்லில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வழக்கு போல் குமார பாலசுதர்சன் வேலைக்கு சென்று விட்டார்,இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று சாமுண்டீஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோதுவிட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்த கணவர் சாமுண்டீஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடமலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
    • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி சலங்கபாளையம், மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி பவித்ரா(22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணவர் கலையரசன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த பவித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தீக்குளித்த இளம்பெண் உடல் கருகி பலியானார்.
    • ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மதியழகி (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மதியழகி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதியழகி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்."

    • விருத்தாசலம் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை காணவில்லை.
    • இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாவடிகுப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கீர்த்தனா(வயது19). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி மாலை தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கீர்த்தனா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை, அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து கீர்த்தனாவின் தந்தை சுப்பிரமணி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.

    • இரணியல் போலீசில் புகார்
    • இரணியல் போலீசார்மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே காரங்காடு அடுத்த மொட்ட விளையை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 56). இவரது மகள் ஜெயஸ்ரீ (23). லேப் டெக்சினீயன் முடித்துவிட்டு நாகர்கோவி லில் உள்ள ஒரு தனியார் லேபில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று லேபிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ஜெயஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங் களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து ஜெயசேகர் இரணியல் போலீசில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.
    • இதையடுத்து சக்திவேல் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    கோவை

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் சக்திவேல்(40). இவரது மனைவி சரண்யா (37).இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.


    அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து சக்திவேல் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரண்யாவை தேடி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 9-ந்தேதி இறச்சகுளம் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே உள்ள ராமபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 42). பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (34). கடந்த மாதம் 9-ந்தேதி இறச்சகுளம் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து செல்வியை அவரது உறவினர் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்காத காரணத்தால் இது குறித்து தங்கமணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமானவரை தேடி வருகிறார்.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு.
    • பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி கவிதா(வயது 30) .இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தகராறு முடிந்து இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை ஈஸ்வரன் எழுந்து பார்த்தபோது வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் கவிதா தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து கவிதாவின் தந்தை பாலன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 36) கொத்தனார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் கவிதா தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக கடைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சவுக்கத்அலி(25). இவரது மனைவி ஷபானா(23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி ஜெய்துர்கை நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் கோபி போலீசில் கணவர் சவுக்கத்அலி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியான அந்த பெண் கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.இதுகுறித்து இளம்பெண் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.

    அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வந்தனர். விசாரணையில், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பதும், டீ மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×