search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (வயது 33). பெயிண்டர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை அகதியாக வந்தார்.

    அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார். அப்போது இருவருக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் பிரதீபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பிரதீபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவி பவித்ராவிடம் நீ இறந்தால் தான், நான் நிம்மதியாக வாழ முடியும் என திட்டினார்.

    இதனால் பவித்ரா மனவேதனையுடன் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ அடத்துக்கு வந்து பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து பவித்ராவின் தந்தை நடராஜன் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீபனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார்
    • ராஜாகமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே காக்கா தோப்பை சேர்ந்தவர் சுயம்புராஜன் இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலக்ஷ்மி (வயது 38). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததாகவும் உடனடியாக அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த தாகவும் கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார்

    இது குறித்து தகவல் இருந்த ராஜாகமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பெற்றோர் பேசாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவருக்கும் கடலூர் மாவட்டம் புவனகிரி கிராமம் கும்பிமூலை பகுதியை சேர்ந்த இந்து (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    பிரபாகரன் பெருந்து றையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்துவுக்கு ஏற்கனவே ஒருவரிடம் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெருந்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்தபோது பிரபாகரனிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2 பேரும் கடந்த மே மாதம் 30-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த திருமணத்திற்கு இந்துவின் பெற்றோர் விருப்பம் தெரிவிக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் இந்துவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இந்து கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது இந்து திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டபோது பெற்றோர் தன்னிடம் பேசாத காரணத்தால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் மனைவியை சிகிச்சை க்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை வண்டியூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் கார்த்திக்கிடமும் விசாரணை நடத்தி மருத்துவ பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • 22ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியுள்ளார்.
    • முத்துலட்சுமி பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     உடுமலை :

    உடுமலை அருகே ஏரிப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் தாதான். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கைகால்கள் செயலற்ற நிலையில் வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியின் மகள் முத்துலட்சுமி( வயது 22) .இவருக்கும் உரல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கடந்த 22ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி துடித்த முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து முத்துலட்சுமி பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகி உள்ளதால் ஆர்டிஓ. விசாரணை நடைபெற உள்ளது.

    • மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
    • மகேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் போலீசார், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 29). இவரது தங்கை திருமலை செல்வி(27).

    பெயர் சூட்டு விழா

    இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாரிதுரை என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன பிறகு மாரிதுரை பெயர் சூட்டு விழா வைத்துள்ளார். ஆனால் அதற்கு மகேஷ்வரனை அழைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மகேஷ்வரன் தனது மைத்துனர் வீட்டுக்கு சென்று தன்னை அழைக்காதது குறித்து கேட்டுள்ளார்.

    ரூ.5 லட்சம்

    அப்போது மாரிதுரை, அவரது தாய் மற்றும் அத்தை ஆகிய 3 பேரும் சேர்ந்த ரூ.5 லட்சம் வரதட்சணையாக தந்தால் மட்டுமே விழாவுக்கு அழைப்போம் என்று கூறி உள்ளனர்.

    இதனால் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் மாரிதுரை தனது மனைவி திருமலை செல்வியை அடித்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை முயற்சி

    இதனால் மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக மகேஷ்வரன் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியபிரபு. இவரது மனைவி கலைசெல்வி(வயது 31). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கலைச்செல்வி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரது நகைகளை ஆரோக்கியபிரபு மற்றும் அவரது பெற்றோர் அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    விசாரணை

    பிரசவம் முடிந்து கலைச்செல்வி தனது வீட்டுக்கு சென்றபோது நகைகள் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர் முறையாக பதிலளிக்காமல் அவரை அடித்து பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியபிரபு மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (வயது18). கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தார். அபிராமிக்கு அவரது பெற்றோர் சொந்தத்தில் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். படிப்பை தொடர விரும்பிய அபிராமி திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார்.

    பெற்றோர் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். இதில் விரக்கதியடைந்த அபிராமி வீட்டில் எலிமருந்தை குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • இளம்பெண் எரித்து ெகாலை செய்யப்பட்டார்.
    • அந்த பெண் ெகாலை செய்யப்பட்டி ருக்கலாம் என ேபாலீசார் கருதுகின்றனர்.

     உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை ஆத்தங்கரைபட்டி சுடுகாட்டில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் எழுமலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவரது அருகில் ரூ.40 ஆயிரம் பணம் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார். எரிந்த கிடந்த பணம் யாருக்கு சொந்தமானது? பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.
    • ருபிஸ்டைன் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியை சேர்ந்தவர் ருபிஸ்டைன். இவரது மனைவி ஸ்மைலா (வயது 36).

    கத்திக்குத்து

    ருபிஸ்டன் மீன்படி வேலை செய்து வருகிறார். அவர் நேற்று அதிகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்மைலா சத்தம் போட்டார். உடனே மர்மநபர் கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.

    17 பவுன் நகை கொள்ளை

    இதில் அவரது உடலில் 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் மர்ம நபர் அங்கிருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    கொள்ளையன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஸ்மைலா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்–ெபக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • இளம்பெண் தீயில் கருகி பலியானார்.
    • வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள காரியாபட்டி ரோட்டைச் சேர்ந்த முனியாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மணியமுது (வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. முனியாண்டி அதே பகுதியில் புதிதாக வீடுகட்டினார்.

    இந்தபணிகள் முடிந்த நிலையில் கடந்த 20-ந் தேதி கிரகப்பிரவேசம் நடந்தது. இந்த நிலையில் முனியாண்டி, மனைவியின் தந்தை சமயனிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வீட்டில் பால் காய்ச்சியபோது மணியமுதுவின் சேலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதில் உடல் கருகி காயமடைந்த உங்கள் மகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமயன் உடனே பதறியடித்துக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மணியமுதுவின் நிலையை பார்த்து கண் கலங்கனார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணியமுது பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமயன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதாம் உசேன் மீது கஞ்சா வழக்குகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • சதாம் உசேன் தண்டனை காலம் முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவியும் குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது31). இவரது மனைவி பரக்கத் நிஷா (29). இவர்களுக்கு ஜாபர் சாதிக், ஷேக் அலாவுதீன் என்ற மகன்களும், வாபியா என்ற மகளும் உள்ளனர்.

    மாயம்

    சதாம் உசேன் மீது கஞ்சா வழக்குகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில் கடந்த 9-ந்தேதி விடுதலை ஆனார். அன்று மாலை சதாம் உசேன் காயல்பட்டினத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

    தனது மனைவியும் குழந்தைகளும் எங்கே சென்று இருப்பார்களோ என்று நினைத்த சதாம் உசேன் இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அதற்கு பலரும், கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் எங்கே சென்றனர் என்பது எங்களுக்கு தெரியவில்லை, என்று கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் பல இடங்களில் தேடியும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் இது பற்றி அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்

    காயல்பட்டினம் பாஸ் நகரைச் சேர்ந்தவர் ரூபன் (வயது34), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துச்செல்வி (26). இவர்களுக்கு விக்டர் (9), அந்தோணி (7) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 17-ந்தேதி ரூபன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். மாலையில் திரும்பி வந்தபோது வீடு பூட்டிக் கிடந்தது.

    நீண்ட நேரம் ஆகியும் அவரது மனைவியும் குழந்தைகளும் வரவில்லை. இதனால் ரூபன் அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது முத்துச்செல்வி, தனது குழந்தைகள் இருவரையும் அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு தான் வீரபாண்டியன்பட்டி னத்திற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

    இதன் பின் ரூபன் தனது உறவினர்களுடன் பல இடங்களில் தேடியும் முத்து செல்வியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
    • இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

    அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.

    மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×