search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் மகாராணி (வயது 32). இவருக்கும், குமாரலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்லக்காளை என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தந்தை வீட்டு வந்து விட்டார்.

    இந்த நிலையில் மகா ராணி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும், செல்ல க்காளைக்கு திருமணம் நடந்தபோது 23 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டன.

    இந்த நிலையில் பணம் கேட்டு அடிக்கடி கணவர் தொந்தரவு செய்து வந்தார். இதன் காரணமாக தந்தையிடம் இருந்து ரூ.80 ஆயிரம் வாங்கி கொடுத்தேன். ஆனால் மீண்டும் பணம் கேட்டு துன்புறுத்துகின்றனர்.

    இதற்கு உடந்தையாக கணவரின் பெற்றோர் செல்வராஜ்-லிங்க ம்மாள், சகோதரர் சுந்தரபாண்டி, அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடி ப்படையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செல்லக்காளை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை சுடிதாரில் பட்டு தீப்பிடித்தது.
    • சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் வாய்க்கால் மேடு எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரன் (52). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மூத்த மகள் சரண்யா (32). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரண்யா, ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பெரியசேமூர் அடுத்த மாயாபுரம் ராஜீவ் நகரில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை ரவி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சரண்யா சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை அவரது சுடிதாரில் பட்டு தீப்பிடித்து கொண்டது. இதனால் வலி தாங்காமல் சரண்யா அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ரவி எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் தெரிவித்து சரண்யாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவரை கைது செய்த போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அசுமுதீன் (வயது 53) கூலி தொழிலாளி.

    அசுமுதீனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இதனால் அசுமுதீன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததால் அவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

    இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டில் அவர்கள் இருவரும் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது அதை அசுமுதீன் தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.

    இந்த நிலையில் அவர்கள் இருவர் இடையே பணத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பெண், அசுமுதீனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அசுமுதீன் அந்த பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்த ஆபாச காட்சிகளை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது பற்றி அந்த பெண்ணிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    அப்போதுதான் அந்த பெண்ணுக்கு தனது அந்தரங்கம் அம்பலமானது தெரிய வந்தது. இதனால் அவர் இதுபற்றி கழக்கூட்டம் போலீசில் அசுமுதீன் மீது புகார் செய்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அசுமுதீனை கைது செய்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண் 3 குழந்தைகளுடன் மாயம் ஆனார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமுகைதீன். இவரது மருமகள் ரேகனா பேகம். இவருக்கு எசாத் (7), இப்பான் (5), ரூபிகா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பெற்றோர் வீட்டுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு செல்வதாக கூறிச் சென்ற ரேகனாபேகம் அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை அருகே உள்ள இளமனூரைச் சேர்ந்த 16 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அந்த பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×