search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததனால் மனவேதனை
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி: 

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் சாந்தி கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்சா மிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • பள்ளிபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் பள்ளிபாளை யம் பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன்சாமி (வயது 32). திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் அபிராமிக்கும் (31) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த அபிராமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்து தலைமறைவான தீபாவை தேடி வருகின்றனர்.

    • பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்
    • திருமணத்திற்கு பிறகு அபிஷா வில்லுக்குறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அருகே மேல பெரு விளையை சேர்ந்தவர் அபிஷா (வயது 21).

    இவருக்கும் கீழப்பெரு விளையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந்தேதி திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு அபிஷா வில்லுக்குறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்தார்.இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அபிஷா கணவர் வீட்டில் இருந்து தாயார் வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் அபிஷாவின் வீட்டில் யாரும் இல்லை.அவர் மட்டும் தனியாக இருந்தார். பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது அபிஷாவை காண வில்லை. அவர் தாலிச் சங்கிலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி னார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அபிஷாவின் தாயார் சந்திரா ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அபிஷா மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அபிஷாவை மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள். அப்போது அவர் கணவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அபிஷாவை சமாதானம் செய்து அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

    • இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை சபாஷ்புரத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஹரினி(18). இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதனால் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமன் அளித்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(24). மில் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. மாரீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(23). அச்சகத்தில் வேலை பார்த்தார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து இருந்துள்ளார். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம்.
    • போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது குடும்பத்தினர் 16 பவுன் நகை, புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்தனர்.

    ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே எனது கணவர் என்னை தாக்கி அடித்து துரத்தி விட்டார். எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவ ருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம் ஆகும்.

    எனது கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

    ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

    எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே உள்ள பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் கவிதா (வயது 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கிருஷ்ணகுமார் தற்போது ஊரில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக கணவன் - மனைவிக் கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதையடுத்து கவிதா தனது தாயார் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிதா தனது 6 வயது மகளுடன் திடீரென மாயமானார்.

    கவிதாவின் பெற்றோர் மற்றும் கணவர் கிருஷ்ண குமார் ஆகியோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் கவிதா கிடைக்கவில்லை.

    இதையடுத்து கவிதா வின் தாயார் பார்வதி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரில் மாயமான மகள் மற்றும் பேத்தியை கண்டு பிடித்து தருமாறு கூறியிருந்தார்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மாயமான கவிதாவின் செல்போன் உதவியுடன் அவரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • நர்சிங் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார்.
    • துப்பட்டாவால் யமுனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் யமுனா ( வயது 19).இவர் நர்சிங் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுடிதார் துப்பட்டாவால் யமுனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
    • இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் சாந்தி(வயது 42). டைலர். இவரது தங்கை தங்கமணி(38). இவர்கள் இருவரும் குமார பாளையம் வந்து விட்டு, ஊருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

    சாந்தி படுகாயங்களுடன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியில் தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, குழந்தையுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா?

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வசந்தன் (வயது 29). இவர் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(27). இவரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு சமீத் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். சமீத்தை சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சுபஸ்ரீ விட்டுள்ளார். அங்கு சுப பெற்றோர்கள் அவனை கவனித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி காலை சுபஸ்ரீ, தாய் வீட்டிற்கு சென்று வருவதாக மகள் சஞ்சனாவுடன் பஸ்சில் ஏறி சென்றுள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கு போய் சேரவில்லை. அதேபோல் விளங்காட்டுபுதூரில் உள்ள கணவன் வீட்டிற்கும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தன், உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுபஸ்ரீ மற்றும் குழந்தையை தேடி பார்த்தனர்.

    ஆனால் சுபஸ்ரீ, குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வசந்தன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர்

    வழக்கு பதிவு செய்து, குழந்தை

    யுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா? அல்லது

    அவர்களை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்.

    • இணையதளங்களில் ஆபாசமாக வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    மதுரை,

    மதுரை வில்லாபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை வடிவேல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    ஜாமீனில் வெளியே வந்த வடிவேல் தனக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன்படி அந்த பெண்ணிடம் எனக்கு ேதவைப்படும்போது பணம் தரவேண்டும். இல்லையென்றால் உனது படத்தை ஆபாசமாக சித்திரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி வடிவேல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செய்து கொண்டார்
    • தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடி கீழத் தெருவை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 63). இவரது மகள் மேரி ஸ்டெல்லா (39). இவருக்கு அதே பகுதியில் உள்ள சேவியர் காலனியை சேர்ந்த சகாயதாமஸ் பெர்லின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    சகாயதாமஸ் பெர்லின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊரில் தற்போது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் சகாயதாமஸ் பெர்லினுக்கு வெளிநாட்டில் சரியாக தொழில் நடைபெறாததால் வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை யடைந்த மேரி ஸ்டெல்லா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமான நாள் முதல் அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்த மனோகர்.
    • மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது தாயாருடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் சவுந்தர்யா என்பதும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையான மனோகர் திருமணமான நாள் முதல் இரண்டு மாதங்களாக சவுந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார்.

    இது குறித்து நியாயம் கேட்க சென்ற மஞ்சுளாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சவுந்தர்யா தனது தாயார் மஞ்சுளாவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து 2மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. திருமணமான 4 மாதங்களிலேயே இளம்பெண் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×