search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவால்"

    எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது என்று தளபதி தனோயா தெரிவித்தார். #India #IAFChief #BSDhanoa
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை, வெளிநாடுகளின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் போன்றவற்றை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில் நமது அண்டை நாடுகள் (பாகிஸ்தான், சீனா) தங்களுடைய ராணுவத்தை நவீனப்படுத்துவதும், புதுப்புது ஆயுதங்களை ராணுவத்தில் சேர்ப்பதும் கவலையளிப்பதாக உள்ளது.

    அதேநேரம் இந்திய விமானப்படை இதுபோன்ற சவால்களை திறமையுடன் சமாளிக்கும் திறனைக் கொண்டு இருக்கிறது. நாட்டின் நலனுக்காக எத்தகைய சவாலையும் சந்திக்க 24 மணி நேரமும் நமது விமானப்படை தயாராக இருக்கிறது.

    காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது. அது வழக்கமான தாக்குதல் முறையிலோ அல்லது இதர வழிகளிலோ அமையலாம். அதற்கான ஆயுதத் திறன் நம்மிடம் உள்ளது.

    உலகிலேயே சி-17 ரக சரக்கு விமானங்களை கொண்ட 2-வது மிகப்பெரிய படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. இதன் மூலம் பேரிடர் காலங்களில் நமது நட்பு நாடுகளுக்கு மனித நேய உதவிகளை அளிக்க முடியும். மேலும் இந்திய- பசிபிக் கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் எழும் சூழல் உள்ளதால் இந்திய விமானப்படை எந்த நேரமும் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் உள்ளது.

    இந்திய விமானப்படையில் மிக்-29, ஜாகுவார், மிராஜ்-2000 ஆகிய போர் விமானங்கள் பகுதி வாரியாக தரம் மேம்படுத்தப்படும். 83 தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள், 36 ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு இந்திய விமானப்படை மேலும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திபெத்திய பகுதியில் சீன ராணுவம் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து தனோயாவிடம் கேட்டபோது, “இது முக்கியமான விஷயம். எனவே அதற்கு இணையாக நாமும் நமது எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேற்கொள்வோம்” என்று பதில் அளித்தார். 
    மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ரதோரின் ஆன்லைன் சவாலுக்கு வீடியோ மூலம் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். #SalmanKhan #FitnessChallenge
    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரதோர் கடந்த மே மாதத்தில் ட்விட்டரில் ஒரு சவால் ஒன்றை பதிவிட்டார். அதில் உடல் ஆரோக்கியமாக பராமரிப்பது வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த சவால் விடுக்கப்பட்டது. அதில் நாம் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்தியாவும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த சவாலை பிரதமர் மோடி உட்பட பலரும் ஏற்று தங்கள் உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், மத்திய மந்திரி கிரென் ரிஜிஜு இந்த சவாலை பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்ற சல்மான் கான், தனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனுடன் நாம் ஆரோக்கியமாக இருந்தால் நாடும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். #SalmanKhan #FitnessChallenge
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
    கோவை:

    சமூக வலை தளங்களில் வி.ஐ.பி.க்களின் உடல் பிட்னஸ் வீடியோக்கள் தான் தற்போது ஹாட்டாபிக்காக உள்ளது.

    மத்திய மந்திரி ராஜ்வர்தன் ரதோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதோடு, கிரிக்கெட் வீரர்கள் கோலி, தோனி ஆகியோர் தங்களது பிட்னசை காட்ட வேண்டும் என சவால் விடுத்தார். இதை ஏற்று கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதோடு, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டார். மேலும், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தனது உடல் பிட்னசை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி சவால் விடுத்தார். மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பிட்னஸ் சவாலில் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் உடல் ஆரோக்கியம் என்பது உடல் பலமாக இருக்க வேண்டும். அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். இதயம் மிருதுவாக இருக்க வேண்டும்.

    நான் முன்பு தினசரி விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் நேரம் கிடைக்காமல் விளையாட முடியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ள மலைகளுக்கு வருடத்தில் 2 முறை செல்வது உண்டு. அதுதான் எனக்கு உடல் பரிசோதனை.

    நான் மருத்துவ பரிசோதனை செய்வதில்லை. சர்வதேச யோகா தினமான இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமருதனா யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். இந்திய இளைஞர்கள் அனைவரும் அங்கமருதனா யோகா பயிற்சி பெற்று தங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    சத்குருவின் இந்த சவால் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JaggiVasudev #EdappadiPalanisamy #OPanneerSelvam #MKStalin
    பிரதமர் மோடிக்கு சவால்விடும் வகையில் 86 வயதான தேவேகவுடா, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். #devegowda #pmmodi

    பெங்களூர்:

    பிரதமர் மோடி சமீபத்தில் தான் உடற்பயிற்சி, யோகாசனம் செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்தார்.

    அதற்கு குமாரசாமி, நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். எனது பிட்னசை விட கர்நாடகாவின் பிட்னஸ்தான் முக்கியம் என பதில் அளித்து இருந்தார். ஆனால் குமாரசாமி இது தொடர்பாக போட்டோ, வீடியோ எதுவும் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சவால்விடும் வகையில் 86 வயதான தேவேகவுடா, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தேவேகவுடா பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஜிம் அமைத்து தினமும் உடற்பயிற்சி, யோகாசனம், நடைபயிற்சி செய்து வருகிறார்.

    அவருக்கு கார்த்திக் என்ற பயிற்சியாளர் உடற்பயிற்சி பயிற்றுனராக இருந்து உதவி வருகிறார்.


    இதுபற்றி தேவேகவுடா கூறுகையில், “எனக்கு வயதாகி விட்டதால் இயல்பாகவே சில பிரச்சினைகள் வந்து விட்டன. அதை உடற்பயிற்சியினால் சரி செய்து வருகிறேன். சைவ உணவையே சாப்பிடுகிறேன். மது, புகைபழக்கம் கிடையாது. நீண்ட நாள் வாழ எனக்கு ஆசை இல்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே உடற்பயிற்சி செய்கிறேன்” என்றார்.

    பயிற்சியாளர் கார்த்திக் கூறும்போது, “தேவேகவுடாவுக்கு 86 வயது. ஆனாலும், 40 வயதானவர்களுக்கு இணையாக ஆரோக்கியமாக உள்ளார்” என்றார். #devegowda #pmmodi

    கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். #FitnessChallenge #PMModi
    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார். நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும், அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார் ரத்தோர்.
     
    இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார். இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.



    இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி பஞ்சபூத தத்துவத்தை விளக்கும் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு பிட்னஸ் சவால் விடுத்துள்ளார். துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்.  #FitnessChallenge #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #ViratKohli #Kumaraswamy #Manikabatra



    கொள்கைக்காக போராடும் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். அவற்றை நாங்கள் போராடி வெல்வோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #RahulslamsModi #BJPRSS
    மும்பை:

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தான் கொன்றனர் என கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், மகாராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.   

    இந்த வழக்கின் விசாரணையில் கடந்த முறை ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, அவற்றை ராகுல் காந்தி மறுத்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    பின்னர், கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘எங்களது போராட்டம் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிரானவை. விவசாயிகள் கொதித்துப் போய் உள்ளனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பிரதமர் பேசுவதே இல்லை. அவர்கள் (பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்) கொள்கைக்காக போராடும் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அவற்றை நாங்கள் போராடி வெல்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.  #RahulslamsModi #BJPRSS
     
    கிரிக்கெட் வீரர் கோலி விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய சவால் விடுத்துள்ளார். #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #RahulGandhi

    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார். 
     
    இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

    அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார். 

    இதனிடையே, கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியிருந்தார்.  



    இந்நிலையில், கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்புள்ள பிரதமர், நீங்கள் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றதற்கு மகிழ்ச்சி. இப்போது என்னிடம் ஒரு சவால் உள்ளது: எரிபொருள் விலையை குறையுங்கள் அல்லது காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை செய்வதோடு, உங்களை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தும். உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்., என ராகுல் காந்தி கூறியுள்ளார். #HumFitTohIndiaFit #ComeOutAndPlay #PMModi #RahulGandhi
    ×