search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானி"

    பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக பல ஆண்டுகள் நடந்துவந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், மேலும் 2 நிலவுகள் பூமிக்கு இருப்பதை உறுதி செய்துள்ளனர். #Earth #AdditionalMoons
    புதாபெஸ்ட்:

    அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.

    அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.



    அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும் ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் பெயரே இந்த நிலவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக கவிதை எழுதும் கவிஞர்களுக்கு முதலில் எளிமையாக கிடைக்கும் உவமையாக நிலவு இருந்துவரும் நிலையில், இனி ஒன்றுக்கு மூன்று நிலவுகள் இருப்பதால் உவமைக்கு பஞ்சம் இல்லை. #Earth #AdditionalMoons
    நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #Dogs #Malaria
    லண்டன்:

    மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.

    இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    மனிதர்களின் காலுறையை (சாக்ஸ்) நாய்களிடம் கொடுத்து மோப்ப பிடிக்க செய்து அதன் மூலம் மலேரியா நோயை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

    நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது.

    அதில் 70 சதவீதம் பேருக்கு மலேரியா நோய் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டது.



    எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர். #Dogs #Malaria
    நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். #GodParticle #Nobel #LeonLederman
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞானிகளுடன் இணைந்து 1988-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.



    லியோன் லெடர்மேனுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.  #GodParticle #Nobel #LeonLederman
    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.14 படக்குழுவில் `சர்கார்' கூட்டணி இணைந்திருக்கிறது. #SK14 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் `சீமராஜா' படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் மூன்று பாடல்களை எழுதுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது,

    `எஸ்.கே.14 படத்தின் மூலம் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைகிறேன். அவரது மயக்கும் இசைக்கு அடுத்தடுத்து மூன்று பாடல்களை எழுதுகிறேன். வாழ்க்கையில் பெரிய இடத்தை பிடிக்க இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK14 #Sivakarthikeyan

    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே.14 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SK14 #Sivakarthikeyan
    பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த படத்திற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, அலெக்சா.எல்.எஃப் என்ற கேமராவை பயன்படுத்தி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 



    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK14 #Sivakarthikeyan

    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #SK13 #Sivakarthikeyan
    பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியருக்கிறது. `இன்று நேற்று நாளை' படம் ரிலீசாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவாகியிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் ரவிக்குமார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK13 #Sivakarthikeyan
    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #SK13 #Sivakarthikeyan
    ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. காலத்தை கடந்து செல்வதை மையப்படுத்தி அறிவியல் படமாக உருவான இந்த படம் ரிலீசாகி இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு தனது அடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, 



    “இன்று நேற்று நாளை” வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவுற்றது! கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!

    என்று தெரிவித்துள்ளார். 

    ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். #SK13 #Sivakarthikeyan

    புளுட்டோ கிரகத்தில் உள்ள மணல் குன்றுகளில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் காணப்படுவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.#Pluto #methane #NASA
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கிரகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. புளுட்டோ கிரகத்தை ஆராய நியூ கொரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பி வைத்தது.

    புளுட்டோ கிரகம் பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ளது. மிக சிறிய அளவிலான இக்கிரகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இக்கிரகத்தை நியு கொரைசான் விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

    அங்கு 2 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு மணல் குன்றுகள் உள்ளன. டோக்கியோ நகரம் அளவிலான இவை காற்றினால் உருவாகியிருக்க கூடும் என கருதப்படுகிறது. மணல் குன்றுகள் கலிபோர் னியாவின் டெத் பள்ளத்தாக்கு, சீனாவின் தக்லா மகன் பாலைவனத்தில் இருப்பது போன்று உள்ளது.



    புளுட்டோ கிரகத்தில் உள்ள மணல் குன்றுகளில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் காணப்படுகின்றன. அவை மணல் போன்று உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. #Pluto #methane #NASA
    ×