search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாருதீன்"

    ஈடன் கார்டனில் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, முன்னாள் வீர்ரகள் கவுரவிக்கப்படுவார்கள். அவர்கள் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள்.

    நேற்றைய போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்தினார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்.

    நேற்று அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்து விட்டது. அவர் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் சிலிப் பகுதியில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது:- #ENGvIND
    சிலிப் பகுதி என்பது முக்கியமான இடமாகும். அங்கு நிற்கும் வீரர்களை பயிற்சியின்போது கண்டறிய வேண்டும். நீண்ட நேரம் பயிற்சி செய்து 50 முதல் 60 கேட்ச் வரை பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து சிலிப் பகுதியில் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிற்கும் வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு வைத்திருக்க வேண்டும். சில சமயம் பந்து மிகவும் தாழ்ந்து வரும் அதுபோன்ற நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பந்து தலைக்குமேல் செல்லும் போது பாய்ந்து பிடிக்க வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சின்போது சிலிப் பகுதியில் நிற்கும் வீரர் பந்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.


    3-வது வீரராக களம் இறங்கும் புஜாரா இங்கிலாந்துக்கு முன்பாகவே வந்து கவுன்டி போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் ரன்களை குவிக்கவில்லை. வெளிநாட்டில் விளையாட புஜாரா திணறி வருகிறார். ஆனால் லோகேஷ் ராகுல் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.

    லோகேஷ் ராகுல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் அணியில் நீண்ட காலம் விளையாடுவார். அணியில் நிரந்திரமாக இடம் பெற அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. #ENGvIND #1000thTest #Azharuddin
    கிரிக்கெட் கேப்டனாக இருந்தபோது செய்ததுபோல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #imrankhan #Azharuddin
    ஐதராபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் ‘தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியின் வெற்றியின் மூலம் அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன், இம்ரான் கான் மீதான தனது எதிர்பார்ப்பு குறித்து மனம் திறந்துள்ளார். இந்த நிலைக்கு இம்ரான் கான் வளர்ந்து வந்துள்ள அரசியல் பாதை ரோஜாப்பூக்களால் ஆனதல்ல, முட்கள் நிறைந்த கரடுமுரடனான பாதையை அவர் கடந்து வந்துள்ளார் என அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், சாதகமானதாகவும் அமைந்திருந்தது. (அவரது நாட்டின் பிரதமரான பிறகும்) இதேபோன்ற முடிவுகளை அவர் எடுக்க வேண்டும்.

    ஆனால், இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் ஒரு நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதும் முற்றிலுமாக இரு வேறுபட்ட விவகாரம் என்பதால் இதில் அவர் என்ன செய்கிறார்? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றால் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அசாருதீன், ‘ஒரு கிரிக்கெட் வீரர் ஆட்சியை பிடிப்பது மிகவும் அரிதான காரியம். முதல்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டியுள்ளது, அதன் பிறகுதான் மற்ற பிரச்சனைகள் தொடர்பாக அவர் திரும்பிப் பார்க்க முடியும்.

    ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே இத்தனை பூசல்களும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல்களும் தொடர்ந்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிரமம் என்றே நான் கருதுகிறேன். முதலில் இதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பல்வேறு விவகாரங்களை நேர்படுத்த வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். #imrankhan #Azharuddin
    நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கூறினார். #MohammadAzharuddin #IndianCricketCaptain
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செகந்திராபாத் தொகுதி மக்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். இந்த தொகுதியில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர்.

    இந்த தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையிடமும், மாநில பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புவதாக நினைக்கிறேன். எனினும் இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கட்சிதான்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்ட போதும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை.

    இவ்வாறு அசாருதீன் கூறினார்.

    முன்னதாக, தெலுங்கானாவில் இருந்து பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப்பிரிவு அவருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.  #MohammadAzharuddin #IndianCricketCaptain #tamilnews 
    ×