search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.சி.ஐ.டி."

    • விசாரணையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளையும் டி.ஜி.பி. அனுமதி பெற்று விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம்

    சென்னை:

    தமிழக காவல் துறையில் கூறப்படும் புகார்கள் தொடர்பாக இனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக காவல்துறையில் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரிபவர்கள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

    இதுபோன்ற புகார்களை கீழ்மட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசார், காவலர் கள் உள்ளிட்டோர் அளிப்ப துண்டு. சில நேரங்களில் இந்த புகார் மனுக்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விடுவதும் உண்டு. இதனை கருத்தில் கொண்டு காவல்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி துறை ரீதியான புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    புகார்கள் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளையும் டி.ஜி.பி. அனுமதி பெற்று விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இனி காவல் துறையில் எழும் துறை ரீதியான புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரே விசாரணை நடத்துவார்கள். இதனால் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    5.78 கோடி ரெயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட கொள்ளையனை சிபிசிஐடி போலீசார் விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

    ராயபுரம்:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் பெட்டி மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்த்தி ஆகிய 2 பேர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் கொள்ளையில் தொடர்புடைய மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அங்கு சிறையில் இருப்பது தெரிந்தது.

    அவர்கள் 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ரெயில் கொள்ளையில் மோஹர்சிங் தலைவனாக செயல்பட்டு இருந்தார்.

    இதையடுத்து மோஹர் சிங், பில்தியா என்ற பிரஜ் மோகன் உள்பட 5 பேரையும் 14 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்களிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விசாரணையின் போது பில்தியா என்கிற பிரஜ்மோகன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடலில் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

    ×