search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாஜ்மகால்"

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். #TajMahal

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள்.

    மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது.

    இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முதல் தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

    வெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். #TajMahal 

    தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர். #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என எச்சரித்தனர்.



    “தாஜ்மகாலை பாதுகாப்பதற்கான பல்வேறு விஷயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; பசுமை திட்டத்தின் கீழ் கொண்டு வருதல், தாஜ்மகால் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், உணவுவிடுதிகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர். உத்தரபிரதேச மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கீல் ஐஸ்வர்யா பதி ஆகியோர் வாதிடும்போது, “ தாஜ்மகால் பாதுகாப்பு குறித்த தொலைநோக்கு ஆவணத்தை டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்லூரி தயாரித்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி வாதிடும்போது, “சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ஆகா கான் பவுண்டேசன், கலை மற்றும் கலாசாரத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை, நினைவுச்சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச கவுன்சில் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளிடம் இருந்து தாஜ்மகால் பாதுகாப்புக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. தாஜ்மகால் அமைந்து உள்ள ஆக்ரா நகரத்தை கலாசார நகரமாக அறிவிப்பது குறித்து ஒரு திட்டம் தீட்டி அனுப்புமாறு உத்தரபிரதேச மாநில அரசை கேட்டு இருக்கிறோம்” என குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #TajMahal #SupremeCourt 
    ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாக்கும் பொறுப்புகளை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் பரிந்துரையை உ.பி. மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 

    உ.பி. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உங்களால் தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். முதல் மந்திரி நாற்காலியை இதுபோல் தனியார் நிறுவனத்துக்கு அளித்து பாதுகாக்க செய்ய முடியுமா? என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    ரோம் நகரில் உள்ள கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரிக்கும் போது, தாஜ்மகாலை தனியார் வசம் ஒப்படைப்பதில் என்ன தவறு என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ் பேசியுள்ளார். #TajMahal #KJAlphons
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுமார் 95 நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்றாகும்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ், இந்த திட்டத்தின் மூலம் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களை பராமரிக்கவும், விரிவுபடுத்தி பாதுகாக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய சுற்றுலாத்துறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.



    மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியை தனியார் சிமெண்ட் நிறுவனம் பராமரித்து வருவதை மேற்கோள் காட்டிய மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்ஸ், இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திருநாட்டின் அடையாளமாக விளங்கும் நினைவுச் சின்னங்களை வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த திட்டத்துக்கு கண்டனங்களும் வலுக்கத் துவங்கியுள்ளது.

    சமீபத்தில் தாஜ்மகாலை பராமரிப்பதில் உத்தரப்பிரதேச அரசு முறையாக செயல்படவில்லை எனவும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான எந்தவித திட்டமும் மாநில அரசிடம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TajMahal #KJAlphons
    உலகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது. #TajMahal
    புதுடெல்லி:

    உலகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகம் விரும்புவது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக, டிரிப் அட்வைசர் எனும் தனியார் அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. அதில், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 68 நாடுகளில் உள்ள 759 முக்கியமான இடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.



    இந்த ஆய்வில் உலகளவில் முதல் 10 இடங்கள் கொண்ட பட்டியல் வெளியானது. அதன்படி, முதல் இடத்தை கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஸ்பெயினில் உள்ள பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், ஆசிய அளவில் வெளியான பட்டியலில் இரண்டாவது இடத்தை தாஜ்மகாலும், ஒன்பதாவது இடத்தை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், 10-வது இடத்தை பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TajMahal
    ×