search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாஷிகா"

    பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் காதலிக்கும் அளவிற்கு சென்ற யாஷிகா, இன்னும் அவரை நினைத்து உருகி பேசியிருக்கிறார். #Yashika #Mahat
    இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் நெருக்கமானார். காதலிக்கும் அளவுக்கு போன இந்த நெருக்கம் பிக்பாஸ் முடிந்ததும் முடிந்துபோனது.

    மகத் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்தார். இதுபற்றி இதுவரை பேசாத யாஷிகா இப்போது மனம் திறந்துள்ளார். ‘என்னதான் பக்குவமான பெண் என்றாலும்கூட ரிலே‌ஷன்சிப் என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.

    மனசுக்குள் ஏராளமான அன்பு உள்ளவள். யாருக்காவது வாக்கு கொடுத்துவிட்டால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் கவலைப்பட மாட்டேன்.



    அன்பை வைத்து என்னை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல?’ என்று உருகியுள்ளார்.
    இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலமான யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது என்று கூறியிருக்கிறார். #Yashika
    இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இணையத்தில் யாஷிகா ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தார். அவர் சின்ன வேடத்தில் நடித்த நோட்டா படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    ஒரு பேட்டியில் இதுகுறித்து யாஷிகாவிடம் கேட்டபோது, ‘பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடனேயே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் நான் அவசரப்பட்டு எந்தவொரு படத்துலயும் கமிட்டாகக் கூடாதுனு பொறுமையா கதைகள் மட்டும் கேட்டுக்கிட்டு இருக்கேன். 

    விஜய் தேவரகொண்டா நடிக்கிற ‘நோட்டா’ படத்துல நான் பிக் பாசுக்கு முன்னாடியே கமிட்டாகி விட்டேன். இதுல என்னோட கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில வந்துபோகுற மாதிரியான கதாபாத்திரம். ஆனால் நான் பிக் பாஸ்ல இருந்ததால் படப்பிடிப்புக்குப் போக முடியலை. 



    அதனால என்னோட கதாபாத்திரத்தை சின்ன வேடமா மாத்திட்டாங்க. அரசியல் மூலமா நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யணும், அது இல்லாம அதை பணம் சம்பாதிக்கிறதுக்கான ஒரு வியாபாரமா மாத்திட்டாங்க இப்போ இருக்கும் அரசியல்வாதிகள். இதையெல்லாம் எடுத்துச் சொல்ற மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்னோடது” என்று கூறினார்.
    நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் மகத்தின் காதல் முறிந்துள்ளது. #Mahat #BiggBossTamil
    பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.

    பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.



    நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
    கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் - ஆசிப் - மேகாலி நடிப்பில் உருவாகி வரும் பாண்டிமுனி படத்தின் முன்னோட்டம். #PandiMuni
    தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் பாண்டிமுனி. இந்த படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு - மது அம்பட், இசை - ஸ்ரீகாந்த் தேவா, கலை - ஸ்ரீமான் பாலாஜி, நடனம் - சிவசங்கர், சண்டைப்பயிற்சி - சூப்பர்சுப்பராயன்,  எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கஸ்தூரி ராஜா.



    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 

    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்றார். #PandiMuni

    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் `பாண்டிமுனி' படம் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பின் போது சில ஆச்சரியமான சம்பவங்கள் நிகழ்ந்தது படக்குழுவை அதிசயிக்கச் செய்துள்ளது. #PandiMuni
    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 


    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை. 

    கோயிலை சுற்றியுள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார் என்றார். #PandiMuni

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #BiggBoss
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி நாளாக நாளாக சூடு பிடிக்கிறது. நிஜ கணவன் மனைவியான பாலாஜி - நித்யா இடையேயான சண்டை சுவாரஸ்யமாக மாறி வருகிறது. சண்டையோ சமாதானமோ இருவரும் ஓவராக செல்கிறார்கள்.

    அதுபோல், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் படுத்திருந்த கட்டிலில் அவர்களுக்கு நடுவில் மகத் படுத்துக்கொண்டார். இதுவும் பலர் மத்தியில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.



    மகத்துக்கும் யாஷிகாவுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இருவரும் காதலித்து விடுவார்களோ? காதலிக்கிறார்களா? என்றும் பார்வையாளர்கள் பலரும் பேசிவருகிறார்கள். பொன்னம்பலம் வீட்டில் நடப்பவற்றை பிக்பாசிடம் போட்டுக்கொடுக்கிறார் என்று அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள். அவரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்.
    ×