search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • பேபிகார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இன்று பேபிகார்னில் பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,

    கடலை மாவு - 1 கப்,

    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,

    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,

    உப்பு - சுவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவைக்கு,

    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,

    இஞ்சி - 1 துண்டு,

    பூண்டு - 3 பல்.

    செய்முறை:

    பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளவர், கடலை மாவு, அரிசி மாவை போட்டு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு பேபிகார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    இப்போது சூப்பரான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    • சிக்கன் வைத்து பலவித உணவுகளை சமைக்கலாம்.
    • இன்று சிக்கன் வைத்து மோமோஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    உப்பு - தேவையான அளவு

    சிக்கன் கொத்துகறி - 1/4 கிலோ

    வெங்காயம் - 2

    முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்

    கேரட் (பொடியாக நறுக்கியது) - 1 கப்

    இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

    பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    சிக்கன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கன் கொத்துக்கறி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை பந்து போன்று சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதை சிறிய அளவிலான மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும்.

    அதன் பின்னர் கிளறி வைத்து உள்ள சிக்கன் கலவையை அந்த சப்பாத்தியில் வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் வைத்து வேக விட வேண்டும்.

    15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

    தற்போது சுவையான ரெஸ்ட்ரன்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெடி.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • மட்டன் கீமா வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கீமா - 150 கிராம்

    வெங்காயம் - 1 + 1

    இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    சோம்பு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    பஜ்ஜி மாவு - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    ஒரு வெங்காயத்தை பொடியாகவும். மற்றொரு வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத் போட்டு தாளிக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன் கீமா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். மட்டனில் தண்ணீர் இருக்கும். தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவையில்லை.

    கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.

    வேக வைத்த மட்டன் கீமா ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி மாவு, சிறிது உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.

    பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் வேக வைத்த மட்டன் நீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கீமா பக்கோடா ரெடி.

    • குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மேகி நூடுல்ஸ்லேயே மிக சுவையான வடை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மேகி நூடுல்ஸ் - 1 பாக்கெட்

    வேக வைத்த உருளைக்கிழங்கு (தோல் நீக்கியது) - 2

    வெங்காயம் - 1

    ப. மிளகாய் - 3

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    கேரட் - 2

    மிளயாய் தூள் - அரை தேக்கரண்டி

    மேகி மசாலா

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மேகி நூடுல்ஸை உதிர்த்து போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.

    பின்னர் மசித்து வைத்த உருளைக்கிழங்கை மேகி உடன் போட்டு கிளறவும்.

    இப்போது வெங்காயம், ப. மிளகாய், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

    இந்த கலவையை ஒரு பௌலில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், தேங்காய் துருவல், மேகி மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.

    இப்பொழுது இந்த மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை வடைபோல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறம் ஆனதும் எடுக்கவும்.

    இப்பொழுது சூடான சுவையான மேகி வடை தயார்.

    • தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று நெய் அப்பம்.
    • இதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 250 கிராம்

    தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி

    ஏலக்காய் - 4

    சமையல் சோடா - ¼ தேக்கரண்டி

    வாழைப்பழம் - 1

    உப்பு - ¼ தேக்கரண்டி

    வெல்லம் - 200 கிராம்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். வாழைப்பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும்.

    குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுக்கவும்.

    இப்போது நெய் அப்பம் தயார்.

    • வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 3,

    கடலை மாவு - 1 கப்,

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    உப்பு - சுவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு,

    ஆப்பசோடா - சிட்டிகை.

    செய்முறை:

    வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.

    மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை நன்கு பிசறி (இதழ் இதழாக பிரியும்படி) மாவில் சேர்த்து கலந்து காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான உதிர் வெங்காய பஜ்ஜி ரெடி.

    • இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் மாவு - 1 கப்

    பால் - 500 மி.லி

    பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    வெல்லம் - தேவைக்கு ஏற்ப

    ஏலக்காய்த்தூள் - சிறிது

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

    அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

    உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.

    5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.

    • இந்த ஸ்நாக்ஸ் சத்தானது மற்றும் சுவையானது.
    • கோதுமை கார பொரி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை பொரி - 100 கிராம்

    வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

    கேரட் துருவல் - 2 டீஸ்பூன்

    தக்காளி சிறியது - 1 பொடியாக நறுக்கியது

    வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சாட் மசாலா - அரை தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    செய்முறை

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோதுமை பொரியை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், வேர்க்கடலை, உப்பு சேர்த்து வறுக்கவும். இவ்வாறு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போது இதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை கார பொரி ரெடி.

    • பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும்.
    • பன்னீர் பஜ்ஜி குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!

    • இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
    • இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 300 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    புதினா - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

    * பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.

    * அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

    • கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
    • கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும்.

    தேவையான பொருட்கள்

    கருணை கிழங்கு - 250 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

    ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி

    கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.

    • காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
    • சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கைமா – கால் கிலோ,

    சின்ன வெங்காயம் – 50 கிராம்,

    போண்டா மாவு – 250 கிராம்,

    சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,

    மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் – 2,

    பூண்டு – 5 பல்,

    கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

    சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

    பொட்டுக்கடலை – 50 கிராம்,

    இஞ்சி – 2 சிறிய துண்டு,

    கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

    * அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

    * முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

    * அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    * சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

    ×