search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ

    முட்டை - 2

    சோளமாவு - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான மீன் பக்கோடா தயார்.

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - அரை கிலோ,

    வறுத்த உளுந்து - 50 கிராம்,

    கடலைப் பருப்பு - 50 கிராம்,

    உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    * இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    * மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.

    * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    • மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 4,

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 டீஸ்பூன்

    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

    நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - 150 கிராம்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று உருளைக்கிழங்கு சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    வெங்காயம் - 2

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.

    அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

    இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.

    ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

    • மழைக்காலத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.
    • இன்று சுடச்சுட மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்

    பஜ்ஜி மிளகாய் - 6

    வெங்காயம் - 2

    வரமிளகாய் - 2

    புளி - சிறிது

    பூண்டு - 4 பல்

    அரிசி மாவு - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சோடா உப்பு - 1 சிட்டிகை

    பெருங்காயத் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

    • மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
    • உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்

    வெங்காயம் - 1

    கேரட் - 2

    முட்டைகோஸ் - அரை கப்

    குடைமிளகாய் - 1

    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

    சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

    பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.

    இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.

    இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!

    • பிரெட்டில் சுவையான சூப்பரான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சில்லி பிரெட் செய்து உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் ஸ்லைஸ் - 10,

    தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி,

    சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு,

    கொத்தமல்லி இலை - அரை கட்டு,

    எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு,

    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி,

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    கீறிய பச்சை மிளகாய் - 3,

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,

    நெய் - ஒரு தேக்கரண்டி,

    எண்ணெய் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும்.

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி வதங்கிய பின்னர் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    மசாலா பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.

    • கடையில் வாங்கும் தட்டையை விட வீட்டிலேயே சுவையாக செய்யலாம்.
    • இந்த தீபாவளிக்கு கார தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப் அளவு

    உளுத்தம் பருப்பு - 1/4 கப் (வறுத்து அரைத்தது)

    பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்

    கடலை பருப்பு - 4 டீஸ்பூன்

    கொரகொரப்பாக பொடித்த பூண்டு - 10

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    பெருங்காயம் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    2 கப் அளவு பச்சரிசியை, ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். ஈரப்பதம் மாவில் இருக்கவே கூடாது. வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

    கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த அரைத்த உளுத்த மாவு, பச்சரிசி மாவை போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.

    அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, கொரகொரப்பாக பொடித்த பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

    தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.

    இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்த தட்டைகளை போட்டு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்து எடுத்தால், சுவையான மற்றும் காரமான தட்டை தயார்.

    • கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது.
    • இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 500 கிராம்

    வெல்லம் - 250 கிராம்

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - சிறிதளவு

    எண்ணெய் - பொரித்தெடுக்க

    செய்முறை :

    வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும்.

    அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.

    இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.

    • இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், சீப்பு சீடை செய்யுங்கள்.
    • இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்

    உளுத்தம் மாவு - அரை கப்

    கடலை மாவு - அரை கப்

    கெட்டியான தேங்காய் பால் - அரை கப்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    சுடுநீர் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

    பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

    பின்பு முறுக்கு அச்சை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி.

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 5

    கேரட் - 1

    கோஸ் - 50 கிராம்

    குடைமிளகாய் - 1

    சீஸ் - 1 கப் துருவியது

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ப.மிளகாய், கோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ்,குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் வெஜிடபிள் போண்டா தயார்.

    ×