என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 157065"
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்யலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள் :
மாவு தயாரிக்க:
மைதா - 2 கப்
நெய் - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஸ்டஃப் செய்ய:
டார்க் சாக்லேட் - 1 கப்
உலர்ந்த தேங்காய் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பாதாம் - 1/2 கப்
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
டார்க் சாக்லேட்டை துருவிக் கொள்ளவும்.
ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.
சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும். அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.
அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.
- கேரளாவில் மிகவும் பிரபலம் சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி.
- கேரளாவில் அனைத்து பண்டிகை, திருமணங்களுக்கும் இது அவசியம்.
தேவையான பொருட்கள் :
பெரிய வாழைக்காய் - 4
வெல்லம் / வெல்லத்தூள் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சீரகம் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயைத் தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலர விடவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.
பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்க வைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும் .
பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும்.
ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரைத் தூவலாம்.
இப்போது சர்க்கரை வரட்டி ரெடி.
- குழந்தைகளுக்கு பர்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று பிஸ்தா பர்ஃபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/2 டம்ளர்
நெய் - 1/4 டம்ளர்
நீர் - 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் பிஸ்தாவை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். அடிக்கடி சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.
- சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது உருளைக்கிழங்கு சிப்ஸ்.
- வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3 கிலோ,
எண்ணெய் - ஒரு கிலோ,
மிளகாய் பொடி - 5 தேக்கரண்டி,
பெருங்காயம் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
உருளைக்கிழங்கின் மேல் தோலை சுரண்டி அல்லது மேலாக சீவி கழுவி வைத்து கொள்ளவேண்டும்.
பின்னர் தோல் சீவிய கிழங்கை சிப்ஸ் சீவும் கட்டை மூலம் சீவி எடுத்து சுத்தமான ஒரு மென்மையான துணியில் ஈரம்போக ஒற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் இரும்பு சட்டியில் பொரித்து எடுக்கும் அளவில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் சீவிய கிழங்குகளை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
மிளகாய் தூள், மஞ்சள்பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை பொரித்து வைத்துள்ள சிப்ஸ் மீது தூவி நன்றாக கலந்து விட்டு ஆற விடவேண்டும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்ததும் பாலித்தீன் பைகளில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.
- இந்த ரெசிபி 10 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள் :
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப்,
பொடி செய்த வெல்லம்- ¾ கப்,
தண்ணீர்- ¼ கப்,
ஏலம், சுக்குப் பொடி தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு தட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.
உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் ஊற்றி கரண்டியால் கிளறி நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
அவ்வளவு தான் சூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.
- ஆலு புஜியாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு பிடித்தான அருமையான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
புதினா - ஒரு கைப்பிடி
ப.மிளகாய் - 1
கடலை மாவு - 1 கப்
மிளகாய்தூள் - சுவைக்கேற்ப,
சாட் மசாலா - சுவைக்கேற்ப,
சீரக தூள் - சுவைக்கேற்ப
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
• உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ளவும்
• மிக்சியில் புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசிய அரைத்து கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரைத்த புதினா விழுது, மற்றும் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்தூள், சாட் மசாலா, சீரக தூள் மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் .
• கலந்த உருளைக்கிழங்கு கலவையை சேவை அச்சில் போட்டு வைக்கவும்.
• கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சேவை அச்சில் உள்ள கலவையை பிழிந்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
• பொரித்த சேவையை ஒரு தட்டில் போட்டு சிறிது சிறிதாக உடைத்து, சிறிது அளவு சாட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
• இப்போது ஆலு புஜியா ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
- கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி
ப. மிளகாய் - 3
பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.
* இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.
- இதை தயாரிப்பதும் மிகவும் எளிது.
- இதை செய்ய 5 நிமிடங்களே போதுமானது.
இத்தாலிய உணவில் மிக எளிமையானதும், ரொம்ப சுவையானதுமான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் பற்றிதான் குட்டீஸ் ரெசிபியில் பார்க்க இருக்கிறோம். இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த 'ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
1. ஸ்ட்ராபெர்ரி
2. பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
3. பிரெஷ் கிரீம்
செய்முறை :
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். 'ஜாம்' மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சுலபமாக தெரிந்தாலும், இது குட்டி குழந்தைகளுக்கான 'டாஸ்க்' என்பதை மறந்துவிடாதீர்கள்.
- சிறுதானியங்களில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று தினை அரிசியில் அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி மாவு - 200 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,
சுக்குத்தூள் - 2 சிட்டிகை,
முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,
நெய் - 100 கிராம்.
செய்முறை
தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.
சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.
கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.
இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.
- கோலா உருண்டைகளில் பல வகைகள் உண்டு.
- இன்று நாம் காண இருப்பது மீன் கோலா உருண்டை.
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - 250 கிராம்
பிரெட் தூள் - தேவையான அளவு
சோள மாவு - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்த மீனை ஆறவிட்டு எள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இப்பொழுது ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார்.
- பாசிப்பருப்பில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் அடங்கியுள்ளது.
- பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பொடி செய்ய:
தனியா- 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
பாசிப் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
பொடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
கடைசியாக, பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
இப்போது சத்தான ஸ்நாக்ஸ் பாசிப் பருப்பு சுண்டல் ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
- இதை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - அரை கப்
கிரீம் பிஸ்கெட் - 4
உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு
செய்முறை
வேர்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 4 டீஸ்பூன் உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
பிடித்த உருண்டைகளை பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.
இந்த உருண்டைகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நன்றாக முக்கி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
இதை மீண்டும் 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான வேர்க்கடலை ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்