search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிக்கையாளர்கள்"

    வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் கியாஸ் மானியத் தொகை திடீரென்று நிறுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #GasSubsidy
    சென்னை:

    தமிழகத்தில் 2 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம் கிடையாது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 14.2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400 முதல் ரூ.450 வரை இருந்தது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை ரூ.896 ஆக உயர்ந்துள்ளது. அதற்கான மானியத் தொகை ரூ.405 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    ஆனால் கியாஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்போது ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். சிலிண்டரை கொண்டு வந்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு சரியாக ரூ.20 அல்லது ரூ.30 கொடுக்க வேண்டி இருக்கிறது.

    சிலிண்டரின் முழு தொகையை கொடுக்க முடியாமல் ஏழை-எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதில் இன்னொரு சிக்கலையும் வாடிக்கையாளர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு சிலரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் மானியத் தொகை திடீரென்று நிறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இந்த மானிய தொகையை மீண்டும் பெற வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

    இதுகுறித்து கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூறுகையில், “ஏழை நடுத்தர மக்கள் சுமார் ரூ.900 கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்குவதில் சிரமம் உள்ளது. அதன்பிறகு வங்கி கணக்கிற்கு வரும் மானிய தொகையை எடுப்பதிலும் சிரமம் உள்ளது.

    எனவே வங்கியில் மானியம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சிலிண்டர் விலையை குறைத்து ரூ.400-க்கு வழங்க வேண்டும்” என்றனர். #GasSubsidy
    வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பின்பற்றாதவர்களிடம் இருந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அபராதமாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
    புதுடெல்லி:

    வங்கிகள் பொதுமக்களின் பணம் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலை மாறி, தற்போது அவை பொதுமக்களின் பணத்தை பல்வேறு சட்டரீதியான காரணம் கூறி பறித்து வருகிறது. மினிமம் பேலன்ஸ் பின்பற்றுவது, ஏ.டி.எம் பராமரிப்பு என கிடைக்கும் காரணங்களில் எல்லாம் பணம் எடுக்கப்படுகிறது.

    அதன்படி, தற்போது வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2017-18ம் ஆண்டில் சுமார் 4,989.55 கோடி ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மிக அதிகமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து இருக்கிறது. இதையடுத்து, தனியார் வங்கியான எச்.டி.எப்.சி ரூ.590.84 கோடியை அபராதமாக வசூலித்து உள்ளது.

    குறைந்தபட்ச இருப்புத் தொகையை பின்பற்ற முடியாதவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கும் நிலையில், அபராதமாக பிடித்தம் செய்தது ஏழைகளின் அன்றாட சேமிப்பு பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தொழிலதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பல ஆயிரம் கோடி கடன் அளித்து, அதில் நஷ்டமடைந்து தற்போது அவற்றை ஈடு செய்ய ஏழைகளின் சேமிப்பில் வங்கிகள் கைவைத்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
    ×