என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 157617
நீங்கள் தேடியது "கறிக்கோழி"
நாமக்கல்லில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் 25ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கோழி 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் 130 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதேபோல 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரித்த கோழி 220 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கறிக்கோழி சில்லறை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, கேரளாவில் கனமழையால் கோழிப் பண்ணைகள் அழிந்ததால் கேரளாவிற்கு அதிகளவில் கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் புரட்டாசி விரதம் முடிந்ததாலும், தசரா பண்டிகைக்கு வெளி மாநிலத்திற்கு அதிக அளவில் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாலும் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் 25ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கோழி 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் 130 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதேபோல 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரித்த கோழி 220 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கறிக்கோழி சில்லறை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, கேரளாவில் கனமழையால் கோழிப் பண்ணைகள் அழிந்ததால் கேரளாவிற்கு அதிகளவில் கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் புரட்டாசி விரதம் முடிந்ததாலும், தசரா பண்டிகைக்கு வெளி மாநிலத்திற்கு அதிக அளவில் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாலும் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது.
நாமக்கல்:
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் தினமும் 20 லட்சத்துக்கும் கூடுதலாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல்லில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினமும் அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளில் வெகுவாக குறைந்தது. டேம் மற்றும் ஏரி மீன்கள் விற்பனைக்கு வந்தன. கடல் மீன்கள் இல்லாத காரணத்தினால் டேம் மற்றும் ஏரி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த மீன்களை விரும்பாதவர்கள் கறிக்கோழிகள் வாங்கினார்கள்.
மேலும் கோடை விடுமுறை என்பதால் கறிக்கோழிகள் விற்பனை அதிகமானது. இதனால் அதன் விலை உயர தொடங்கியது. கடந்த மாதம் 1 கிலோ கறிக்கோழி உயிருடன் 180-க்கும், தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனையானது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் திருவிழா தொடங்கி இருப்பதாலும், முக்கியமாக 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கி இருப்பதாலும் கறிக்கோழியின் விற்பனை குறைந்ததால் விலை குறைய தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதுபோல் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-ல் இருந்து ரூ.20 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழியின் விலை குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். #Tamilnews
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் தினமும் 20 லட்சத்துக்கும் கூடுதலாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல்லில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினமும் அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளில் வெகுவாக குறைந்தது. டேம் மற்றும் ஏரி மீன்கள் விற்பனைக்கு வந்தன. கடல் மீன்கள் இல்லாத காரணத்தினால் டேம் மற்றும் ஏரி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த மீன்களை விரும்பாதவர்கள் கறிக்கோழிகள் வாங்கினார்கள்.
மேலும் கோடை விடுமுறை என்பதால் கறிக்கோழிகள் விற்பனை அதிகமானது. இதனால் அதன் விலை உயர தொடங்கியது. கடந்த மாதம் 1 கிலோ கறிக்கோழி உயிருடன் 180-க்கும், தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனையானது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் திருவிழா தொடங்கி இருப்பதாலும், முக்கியமாக 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கி இருப்பதாலும் கறிக்கோழியின் விற்பனை குறைந்ததால் விலை குறைய தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதுபோல் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-ல் இருந்து ரூ.20 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழியின் விலை குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X