என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கைது"

    • மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்.
    • புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 26). பி.ஏ. பட்டதாரி. இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். திருமணம் ஆனவர். இவரது நடவடிக்கை பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். உமேஸ்வரன் தனியாக வசித்து வந்தார்.

    இவரது பெட்டிக்கடைக்கு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலர் சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யவும் சென்று உள்ளனர்.

    அப்போது அந்த மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உள்ளார்.

    உமேஸ்வரனின் பேச்சில் மயங்கிய 5 மாணவிகளை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    நாளடைவில் இவரது சுயரூபம் தெரிந்ததும் மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்புத்துறைக்கு 1099 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஷோபனா தலைமையிலான குழுவினர் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பழங்குடியின மாணவிகளை உமேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    பழங்குடியின மாணவிகள் 5 பேருக்கு பட்டதாரி வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ராமநாதபிரபு (வயது 28). வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி, மது போதை என்று ஊரை சுற்றி வந்துள்ளார். பண பலம் மிக்க அவரை பெற்றோரும் பல முறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

    இதற்கிடைய திருமணத்திற்கு பிறகு ராமநாதபிரபு தன்னுடைய மனைவி ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அம்மன் கோவிலை அடுத்த தெற்கு தரவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சாத்தையா மற்றும் சிலருடன் அமர்ந்து ராமநாதபிரபு மது அருந்தினார். பின்னர் தலைக்கேறிய அளவுக்கு அதிகமான போதையுடன் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அம்மன்கோவிலை சேர்ந்த பழனி மற்றும் வள்ளிமாடன்வலசையைச் சேர்ந்த சிவா, தெற்கு தரவையைச் சேர்ந்த சாத்தையா ஆகியோருடன் அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது எதிரே வாலி நோக்கத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதனை டிரைவர் கார்த்தி ஓட்டினார். அம்மன்கோவிலை அடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதியில் சென்றபோது எதிரோ வந்த லாரி, காரின் பக்கவாட்டு பகுதியில் லேசாக உரசியது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்ததுடன், காரிலும் கீறல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை முந்திச் சென்ற பிரபு லாரியை மடக்கி வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த லாரி டிரைவர் கார்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த பலர் திரண்டனர். அப்போது காரில் கீறல் விழுந்ததை உடனடியாக சரி செய்து தருவதாகவும், கண்ணாடியை மாற்றி தருவதாகவும் லாரி டிரைவர் கார்த்தி கூறியுள்ளார்.


    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத ராமநாதபிரபு லாரி டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தகராறு நடந்த பகுதியில் திரண்ட அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், லாரி டிரைவர் கார்த்திக்கு ஆதரவாக, ராமநாதபிரபு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தனது சகோதரரை தொலைபேசியில் தொடார்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரச்சொன்னதன்பேரில், அவருடன் அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

    அவர்களுடனும் போதையில் இருந்த ராமநாதபிரபு தகராறு செய்தார். மேலும் அவருடன் இருந்த அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்களை பார்த்து, தங்களுக்கு ஆதரவாக பேசாமல் வெளியூர் நபருக்கு ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக இருதரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை மேலும் வளர்க்க வேண்டாம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், காருக்கும், லாரிக்கும் வழியை விடுமாறும் கூறியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ராமநாதபிரபு தன்னுடன் காரில் வந்த நண்பர்கள் சிவா, சாத்தையா ஆகியோரை அதே இடத்தில் இறக்கிவிட்டார். ஆத்திரம் தீராமல் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணினார். சிறிது தூரம் சென்று விட்டு மீண்டு காரை திருப்பிய ராமநாதபிரபு அதிவேகமாக வந்த அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மூர்க்கத்தனமாக ஏற்றினார். மேலும் பின் நோக்கி காரை இயக்கி மீண்டும் ஒருமுறை ஏற்றினார். பின்னர் காரில் இருந்து அவர் குதித்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கே நடந்தது கனவா அல்லது நனவா என்று புரியாமல் மக்கள் நின்றனர். இந்த கோர சம்பவத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லா கான், வர்த்தக அணி மாநில செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் தலைமையில் காயம் அடைந்த 12 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு கிராமமே திரண்டு வந்தது. அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓலமிட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் சாத்தையா உட்பட 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை செல்லும் வழியில் ராமநாதபிரபுவின் நண்பர் சாத்தையா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.

    கை, கால் முறிவு, தலையில் காயம் அடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தியவர் கிராமமக்கள் கையில் சிக்கினால் அவரை அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல், பொது மக்களுக்கு இடையூறு, தீங்கு விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விபத்து, தாக்குதல், கொலை முயற்சி ஆகிய 5 பிரிவுகளில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை மூர்க்கத்தனமாக காரை கொண்டு ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மலர்செல்வி தலைமையிலான போலீசார் செங்குன்றம், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். அப்போது பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியார் தெருவைச் சேர்ந்த காளீஸ்வரன் (25) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பாலியல் புகார் அளித்த சிறுமியை பாபு அரிவாளால் வெட்டி உள்ளார்.
    • பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை அவரது சகோதரன் பாபு அரிவாளால் வெட்டி உள்ளார். சிறுமியின் முகம், கண், கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் பாபு வெட்டி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மதன்குமாரின் சகோதரன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக திவாரியை அழைத்துச் சென்றனர்.
    • கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வழியாக நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று இரவு ஜோலார்பேட்டை வந்தது. பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

    ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் ரெயில்வே போலீசார் ராஜ்குமார், செந்தில் ராஜா, சதீஷ்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ் 4 பெட்டியில் இருக்கை எண் 28-ல் பயணம் செய்த ஒடிசா மாநிலம் பலாங்கிரியை சேர்ந்த அபினேஷ் திவாரி (வயது 28) என்பவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 13 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக அபினேஷ் திவாரியை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அபினேஷ் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி மருதூர் குளங்கரை செருகோல் பகுதியை சேர்ந்தவர் முகமது முஹ்சின்(வயது32). போதைபொருள் வழக்கில் தொடர்புடைய இவரின் வீட்டில் கருநாகப்பள்ளி கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கை அறையில் 21 பூந்தொட்டிகளில் வித்தியாசமான செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அது என்ன செடி என்று ஆய்வு செய்தபோது கஞ்சா செடிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார செடிகளை போன்று படுக்கை அறையில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.

    இதையடுத்து பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக முகமது முஹ்சினை கலால் துறையினர் கைது செய்தார்கள்.

    • கைது செய்யப்பட்டுள்ள ஷிஜாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.
    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷொரனூர் கணேஷகிரி பகுதயில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு பொருட்கள் திருட்டு போகின. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பள்ளியில் லேட்டாப்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியது கோட்டயம் மாவட்டம் வைக்கம் வடக்குமூர் பகுதியை சேர்ந்த ஷிஜாஸ்(வயது40) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷொரனூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது. பாலக்காடு மாவட்ட பகுதியில் மட்டும் அவர் 16-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர் லேட்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

    திருடிய பொருட்களை காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் பதுக்கி வைத்தபடி இருந்திருக்கிறார். இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு சென்ற போலீசார் பார்வையிட்டனர். அப்போது அங்கு சாக்குமூட்டைகளில் லேட்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் இருந்தன. ஷிஜாஸ் திருடி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் போலீசார் செய்தனர்.

    அந்த தொழிற்சங்க அலுவலகத்தை சமீபகாலமாக சங்கத்தின் நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். அதனை நோட்டமிட்ட ஷிஜாஸ், அந்த அலுவலகத்தை திருட்டு பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக அந்த அலுவலகத்தின் கதவில் ஏற்கனவே போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து விட்டு, புதிய பூட்டை வாங்கி போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.

    தொழிற்சங்க அலுவலகத்தை நிர்வாகிகள் வெகு நாட்களாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தது ஷிஜாசுக்கு மிகவும் வசதியாக இருந்துள்ளது. அவர் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருவது ஐ.என்.டியூ.சி. நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷிஜாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

    • பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.
    • மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆஸ்டின் ஓக்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி திருச்சூர் பெண்ணிடம் நைஜீரிய வாலிபர் பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்தமாதம் (மார்ச்) வரை ரூ.2கோடி வரை பணம் பெற்றுள்ளார். முதலில் நைஜீரிய வாலிபரின் ஏமாற்றுவேலை திருச்சூர் பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நைஜீரிய வாலிபரின் மோசடி செயலை அறிந்துகொண்ட அவர், அதுபற்றி திருச்சூர் நகர குற்றப்பரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணிடம் ரூ.2கோடி மோசடி செய்த ஆஸ்டின் ஓக்பாவை கைது செய்தனர்.

    அவரை மும்பை போலீசாரின் உதவுயுடன் கேரள போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசாரால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில ஆன்லைன் மோசடி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது. மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீஸ் அதிகாரி என கூறியதோடு, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பெண்ணை மிரட்டி பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி என கூறியதோடு, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து வேறு வேறு எண்களில் அந்த நபர் தொடர்பு கொண்டதால், அந்தப் பெண் பீதி அடைந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், அந்தப் பெண்ணை மிரட்டி பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.

    இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி கோட்டயம் தலப்பாலம் பகுதியை சேர்ந்த ஆல்பின் ஜானி (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

    • மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • மூதாட்டி உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அந்த பகுதியை சேர்ந்த நாகராஜன் என்ற வாலிபர் மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் மேல் பாய்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனை சற்றும் எதிர்பாராத மூதாட்டி நாகராஜின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். அப்போது போதை ஆசாமி நாகராஜ் மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூதாட்டிக்கு முகம், கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாலும் மூதாட்டிக்கு உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து போதை ஆசாமி நாகராஜன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலையில் மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தாயை மீட்டு அவர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மூதாட்டிக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜாம்பஜார் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.

    போதை வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் மூதாட்டி உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    • ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்.
    • போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொண்டதால் அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி பல இடங்களுக்கு மாணவியை அப்துல் கபூர் அழைத்துச் சென்றுள்ளார்.

    ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறார். மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக அப்துல் கபூரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபடி இருந்திருக்கிறார்.

    இந்தநிலையில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    மேலும் தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறினார். அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்தனர்.

    மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.

    • கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யாண் கோவிந்த்வாடி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பஜார்பேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நடமாடியதை கவனித்தனர்.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பீட் மாவட்டத்தை சேர்ந்த சகில் சேக் (வயது25) என்பது தெரியவந்தது. இவர் வைத்திருந்த உடைமையை பிரித்து சோதனை போட்ட போது, அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவர் கஞ்சாவை விற்க கல்யாணுக்கு வந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×