search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாலர்"

    அமெரிக்காவில் 2 டாலருக்கு ஒரு அதிர்ஷடசாலி வாங்கிய ஸ்பெஷல் மெகாபால் லாட்டரி சீட்டுக்கு 160 கோடி டாலர் பரிசு கிடைத்துள்ளது. #USlottojackpot
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள மெகா மில்லியன்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் மெகா பால் லாட்டரி சீட்டுகளை இந்த மாதம் விற்பனை செய்தது. இன்றிரவு அங்கு நடந்த குலுக்கலில் 5, 28, 62, 65, 70, 5 என்ற எண்ணுக்கு இந்த ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.

    தெற்கு கரோலினாவில் விற்பனையான இந்த பரிசு சீட்டுக்கான உரிமையாளர் யார்? என்று இன்னும் தெரியவில்லை. 

    பரிசுக்குரிய நபருக்கு முதல் தவணையாக 91 கோடியே 30 லட்சம் டாலர்கள் முதல் தவணையாக அளிக்கப்படும். மீதியுள்ள தொகை 29 ஆண்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    கடந்த ஜூலை மாதத்தில் இருந்து யாரும் பரிசுக்குரிய சரியான எண்ணை குறிப்பிட்டு லாட்டரி சீட்டு வாங்காததால் சிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை தற்போது 160 கோடி டாலர்கள் அளவுக்கு குவிந்துள்ளது. அமெரிக்க லாட்டரி உலகில் இதுதான் மிகப்பெரிய பரிசு குலுக்கலாக கருதப்படுகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டில் 150 கோடியே 86 லட்சம் டாலர்கள் கொண்ட பவர்பால் ஜாக்பாட் தொகையை இதுவரை மூன்று அதிர்ஷ்டசாலிகள் சரிசமமாக பகிர்ந்து கொண்டதுதான் அமெரிக்க வரலாறில் மிகப்பெரிய பரிசாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. #$1.6blnjackpot #USlottojackpot
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.73.77 ஆக சரிந்தது. #IndianRupee #Dollar
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டது.

    கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

    மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத வகையில் ரூ.73.34 ஆக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ73.77 ஆக வீழ்ச்சி ஏற்பட்டது.

    நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையாலும், மூலதனம் வெளியேற்றத்தாலும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. #IndianRupee #Dollar
    பங்குச் சந்தை கணிப்பில் ஜாம்பவானும் பிரபல தொழிலதிபருமான வாரன் பஃபெட் 13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் எட்வர்ட் பஃபெட் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார்.

    உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்கஷயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். இவருடைய சொத்துகளின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

    பிரசித்திபெற்ற கொடையாளரான பஃபெட் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி டாலர்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் நன்கொடையாக அளித்துள்ளார்.

    இந்நிலையில், தொடர்ந்து 13-வது ஆண்டாக சுமார் 340 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள "பெர்கஷயர் ஹாதவே" நிறுவனத்தில் தனக்குள்ள 17.7 மில்லியன் பங்குகளை அவர் தற்போது நன்கொடையாக அளித்துள்ளார்.

    நேற்றைய நிலவரப்படி, இந்த பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு சுமார் 192 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்கொடையின் பெரும்பகுதி பில்கேட்ஸ் நடத்திவரும் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் தனது குடும்பத்தினர் நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. #WarrenBuffett #WarrenBuffettdonates$3.4bln
    ×