search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தா.மோ.அன்பரசன்"

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றிய, நகர அளவில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். #thamoanbarasan #dmk

    சென்னை:

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.கழக ஒன்றிய நகர , பேரூர் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் வாக்காளர் சேர்த்தல் , நீக்கல் பணிக்காக மாவட்டக் கழகத்தால் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

    தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் விசுவநாதன், அன்புச் செழியன், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் உரையாற்றினார். அவர் பேசிய தாவது:-

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியை முடுக்கி விடுவதற்காக முதல்கட்ட பணியாக வருகிற நவம்பர் மாதத்தில் ஒன்றிய நகர, பேரூர் அளவில் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தை எழுச்சியுடன் கூட்டிட வேண்டும்.

    ஒன்றியங்களில் நடைபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சி வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி வார்டு கழக இளைஞர் அணி , மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது.

    நகர பேரூர்களில் நடைபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் நகர பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை பங்கேற்கச் செய்வது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை மாற்றாரும் மிரளும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் கூட்டி தேர்தல் பணியை முனைப்புடன் தொடங்கி விட்டனர் என்ற பிரமிப்பை ஏற்படுத்திடும் வகையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திட வேண்டும்.

    இவ்வாறு அன்பரசன் கூறினார். #thamoanbarasan #dmk

    ஆதம்பாக்கம் பகுதியில் சாக்கடை தேங்குவதால் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அமைக்க தரவேண்டும் என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    ஆலந்தூர் தொகுதியில் உள்ள நிலமங்கை நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைசர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்ததாவது:- நிலமங்கை நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க முதல்- அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

    தா.மோ.அன்பரசன்:- 1996-2001-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் 24 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டது.

    தற்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் புதிய குடியிருப்புகள் அதிகரித்ததால் கழிவுநீர் அகற்றும் நிலையம் போதிய திறன் சக்தி இல்லாததால் மழைக்காலத்தில் ஆதம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது.

    இந்த நிலையை போக்க இதே திறன் கொண்ட மேலும் ஒரு கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அதே பகுதியில் அமைத்து தர வேண்டும். இதை மழை காலத்திற்குள் அமைத்து தர வேண்டும்.

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி:- நிலமங்கை நகர் கழிவுநீர் அகற்றும் நிலையத்தின் உட்பகுதியில் 150 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள காலியிடத்தில் கூடுதலாக தினமும் 10 மில்லியன் லிட்டர் உந்து திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க ரூ. 26 கோடியே 10 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி பெற்று பணிகள் துவங்கும்.

    தா.மோ.அன்பரசன்:- கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் பகுதிக்கு ரூ. 66 கோடி செலவில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படாததால் ஆலந்தூர் பகுதியில் பல இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

    ஆலந்தூரில் 82 தெருக்களில் குடிநீர் குழாய்கள் மாற்றுவதற்காக ரூ. 13.71 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை வேகமாக செயல்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

    வேலுமணி:- பணிகள் வேகமாக முடித்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×