search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் G4 எஸ்யுவி மாடல் முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டு விட்டன.
    • இது இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடல் ஆகும்.

    மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த எஸ்யுவி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. மேலும் இந்த காருக்கான முன்பதிவுகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்டுராஸ் G4 மாடல் CKD வழியே இந்தியா கொண்டுவரப்பட்டது.

    அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்த கார் சங்யோங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகவே இருந்தது. பின் இந்த எஸ்யுவி மாடல் 2WD ஹை மற்றும் 4WD என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 67 ஆயிரம் மற்றும் ரூ. 31 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஏராளமான அம்சங்களுடன் போட்டியை ஏற்படுத்தும் விலை கொண்டிருந்த போதிலும், இந்த எஸ்யுவி அதிக வாடிக்கையாளர்களை கவராத காரணத்தால் விற்பனை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், ஒன்பது ஏர்பேக், TPMS, 8 வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனஎர் இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யுவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்கியது. அல்டுராஸ் G4 நிறுத்தப்பட்டதை அடுத்து மஹிந்திரா XUV700 தற்போது அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை பெறுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது கார் விவரங்களை தொடர்ந்து அதன் ஸ்பை படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
    • புதிய ஹூண்டாய் கார் கனெக்டெட் டெயில் லேம்ப்களுடன் குறிப்பிடத்தக்க வெளிப்புற மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கிராண்ட் i10 நியோஸ் மாடலை இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கிராண்ட் i10 நியோஸ் மாடல் தற்போது விளங்குகிறது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனம் தனது i20 பிரீமியம் ஹேச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    முற்றிலும் புதுிய i20 மாடல் நவம்பர் 2020 ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது ஃபேஸ்லிஃப்ட இந்த காருக்கான முதல் மிக முக்கிய அப்டேட் ஆகும். தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற பம்ப்பர் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கிறது.

    இத்துடன் புதிய அலாய் வீல்கள், இண்டீரியரை பொருத்தவரை இந்த காரில் டிரன்க் மற்றும் ரியர் பம்ப்பர் காணப்படுகிறது. இத்துடன் எல்இடி லைட்னிங் ஸ்ட்ரிப்கள் டெயில் லைட்களுடன் இணைகிறது. இது ஹூண்டாய் வென்யு மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. 2023 ஹூண்டாய் i20 மாடலின் கேபினிலும் அதிக அம்சங்கள் வழங்கப்படும் என எகிர்பார்க்கலாம்.

    • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் டஸ்டர் மாடல் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் ஒன்று ஆகும்.

    பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் தனது டஸ்டர் மாடலை கொண்டு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் இந்தியாவில் அமோக விற்பனையை பதிவு செய்து வந்தது. எனினும், போதுமான அப்கிரேடுகள் இன்றி இதன் விற்பனை சரிய தொடங்கியது. பின் இந்த கார் இந்திய சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டது.

    இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களின் படி ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனால்ட் நிறுவனம் இந்தியா கொண்டு வரும் டஸ்டர் மாடல் 7 சீட்டர் வேரியண்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

    எனினும், இது பற்றிய மற்ற தகவல்களில் ரெனால்ட் தனது டஸ்டர் மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யாது என்றே கூறப்படுகிறது. இதுவரை புதிய டஸ்டர் மாடல் இந்தியா வருவது பற்றி ரெனால்ட் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. டஸ்டர் மாடல் மீண்டும் இந்தியா வரும் பட்சத்தில் அது 5-சீட்டர் வேரியண்டாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களின் படி ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இதன் படி CMF-B பிளாட்ஃபார்மில் உருவாகும் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இது உண்மையாகும் பட்சத்தில் அடுத்த தலைமுறை டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புது கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புதிய ஹூண்டாய் கார் K1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த மாடல் சிட்ரோயன் C3 மற்றும் டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும் இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலுடன் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய பி1 செக்மெண்ட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் ஹூண்டாய் Ai3 CUV எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நியோஸ் மற்றும் ஆரா மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே புதிய காரும் உருவாக்கப்பட இருக்கிறது.

    அந்த வகையில், இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி என்ற பெருமையை பெறும்.

    புதிய ஹூண்டாய் காரில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜ், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஹூண்டாய் புளூ லின்க், கூல்டு ஸ்டோரேஜ் கன்சோல், எலெக்ட்ரிக் வசதியுடன் ORVM போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • விலை உயர்வு நெக்சான் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில், நெக்சான் மாடலின் புதிய விலை விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்வின் படி சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான், XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) டார்க் மற்றும் XZA + (O) டார்க் என ஆறு வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

    மற்ற வேரியண்ட்களான ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எடிஷன் முன்பை போன்றே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. நிறுத்தப்பட்ட வேரியண்ட்களுக்கு மாற்றாக XZ+ (HS), XZ+ (L), XZ+ (P), XZA+ (HS), XZA+ (L) மற்றும் XZA+ (P) போன்ற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புது வேரியண்ட்களில் எந்த விதமான புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

    விலை உயர்வின் படி டாடா நெக்சான் பெட்ரோல் வேரியண்ட் விலை குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்சான் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

    டாடா நெக்சான் பெட்ரோல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 62 ஆயிரத்து 900 ஆகும். டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெஸ்டிங் இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி இருக்கிறது. புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சென்னை அருகில் உள்ள ஹூண்டாய் ஆலை பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய ஸ்பை படங்களில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த காரில் பூமராங் வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் பம்ப்பரின் ஓரத்தில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதன் முன்புற கிரில் தற்போது ஹெக்சகோனல் டிசைன் கொண்டிருக்கிறது.

    பக்கவாட்டில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் அதிகளவு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புதிய டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக ஜெர்மனியில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் இந்த ஹேச்பேக் மாடல் ஸ்கை புளூ நிறம் கொண்டிருந்தது. இந்த நிறம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது முற்றிலும் புதிதாக இருக்கும். இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் மாடல் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கிராண்ட் i10 நியோஸ் மாடல்- டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், அக்வா டியல், ஃபியரி ரெட் மற்றும் போலார் வைட் என ஐந்து வித நிறங்களிலும், டூயல் டோன் நிற ஆப்ஷனிலும் கிடைக்கிறது. தற்போதைய ஸ்பை படங்களில் காரின் இண்டீரியர் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புது காரின் இண்டீரியரும் மாற்றப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

    Photo Courtesy: Rushlane

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீட்டை ஒட்டி இந்த காருக்கான டீசர்கள் வெளியாகி வருகின்றன.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டிசம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேம்பட்ட புதிய எஸ்யுவி ஏராளமான மாற்றங்களுடன், புது ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த காரில் மெக்கானிக்கல் அம்சங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    புதிய எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் முன்புற கிரில் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புற தோற்றம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. முந்தைய ஸ்பை படங்களின் படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

    இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • மஹிந்திரா நிறுவத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலான XUV700 இந்திய சந்தையில் அடிக்கடி ரிகால் செய்யப்பட்டு வருகிறது.

    மஹிந்திரா XUV700 இந்திய சந்தையில் அதிகம் ரிகால் செய்யப்பட்ட கார்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் ஃபிளாக்‌ஷிப் மாடலான XUV700 மீண்டும் ரிகால் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை காரில் ஏற்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

    கார்களில் ஏற்படும் பிரச்சினைகளை அடிக்கடி கண்டறிந்து ரிகால் மூலம் சரி செய்வது நல்ல முயற்சி தான் என்ற போதிலும், ஃபிளாக்‌ஷிப் மாடலில் இத்தனை குறைகளை போதிய அளவுக்கு சோதனை செய்யாமல் வெளியிட்டதோ என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு எழ துவங்கி விட்டது.

    மஹிந்திரா XUV700 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தில் சஸ்பென்ஷன் சத்தம் கேட்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை சரி செய்யவே தற்போது ரிகால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மஹிந்திரா நிறுவனம் தனது டீலர்களுக்கு தொழில்நுட்ப சர்வீஸ் சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் XUV700 மாடலை ரிகால் செய்து சஸ்பென்ஷன் பாகங்களை மாற்ற வலியுறுத்தி இருக்கிறது.

    இதில் முன்புறம் லோயர் கண்ட்ரோல் ஆர்ம் மற்றும் ரியர் கண்ட்ரோல் புஷ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாற்றிக் கொடுக்க வேண்டும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இம்முறை ரிகால் செய்யப்படும் மஹிந்திரா XUV700 யூனிட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    • பெண் படுகாயம்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று அதிகாலை ஒரு கார் புறப்பட்டது.

    அந்த காரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த முகமது சாபி ஓட்டி வந்தார். காரின் பின் சீட்டில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜினா அமர்ந்திருந்தார்.

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதி யில் கார் வந்த போது எதிர்பா ராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரின் பின்இருக்கையில் அமர்ந்தி ருந்த அஜினா படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி னார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் ஸ்டாண்டர்டு மாடலை விட புது வேரியண்ட் அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது.
    • இதில் உள்ள என்ஜின் 16 ஹெச்பி வரை அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய உருஸ் மாடலின் விலை ரூ. 4 கோடியே 22 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. புதிய உருஸ் மாடலின் வெளிப்புற டிசைன், இண்டீரியர் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    2023 லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    மெக்கானிக்கல் அப்கிரேடுகளை பொருத்தவரை இந்த மாடலில் புதிய ஸ்டீல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் சஸ்பென்ஷனை 20 மில்லிமீட்டர் வரை குறைத்துள்ளன. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட ஸ்டீரிங் சிஸ்டம், ரேலி டிரைவ் மோட், அக்ரபோவிக் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடலில் புதிய பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் ஏர் டேம், 22 இன்ச் அலாய் வீல்கள், ஸ்பாயிலர், ஏர் கர்டெயின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடல் ஆஸ்டன் மார்டின் DBX 707, போர்ஷே கயென் கூப் டர்போ GT மற்றும் மசிராட்டு லெவாண்ட் ட்ரோஃபியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய தலைமுறை இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் முன்புற டிரைவ் லே-அவுட் கொண்டுள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்க இருக்கிறது. இந்த கார் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. இந்த காரின் அளவீடுகள் 4755 மில்லிமீட்டர் நீளம், 1850 மில்லிமீட்டர் அகலம், 1795 மில்லிமீட்டர் உயரம், வீல்பேஸ் 2850 மில்லிமீட்டராக உள்ளது.

    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில், முற்றிலும் புதிய முன்புற தோற்றம் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய முன்புற கிரில், க்ரோம் அண்டர்லைன், ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லைட்களை கொண்டிருக்கிறது. இதன் முன்புற கதவுகளில் ஹைப்ரிட் பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் B மற்றும் C பில்லர்கள், பாடி கிலாடிங் வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் டூ-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, புதிய பின்புற பம்ப்பர், இண்டகிரேட் செய்யப்பட்ட ரிஃப்ளெக்டர்கள், டெயில்-கேட்டில் மவுண்ட் செய்யப்பட்ட நம்பர் பிளேட் ரிசெஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்- சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல், ஷைன், அவாண்ட்கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் மியூசிக் சிஸ்டம், டூயல் டோன் பிலாக்-பிரவுன் தீம், ஏசி-க்கு டிஜிட்டல் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ADAS, டொயோட்டா i-கனெக்ட், கேப்டன் இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், ரிக்லைனிங் 2-ரோ இருக்கைகள், இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்காக 2 ஸ்கிரீன், பவர்டு டெயில்கேட், 6 ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
    • தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனத்திற்கு மிகப் பெரும் தொகை முதலீடாக கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய சந்தையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிலைமை சற்று தடுமாற்றத்திலேயே இருந்து வருகிறது. எனினும், இந்த நிலை விரைவில் மாறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெனாட் மற்றும் நிசான் நிறுவனங்களின் இந்திய பிரிவுக்கு 500 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த முதலீட்டின் மூலம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும். இது சாத்தியமாகும் பட்சத்தில் சமீபத்தில் நிறுத்தப்பட்ட டஸ்டர் மாடல் இந்தியாவில் மீண்டும் களமிறங்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களின் சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரலாம். CMF பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முற்றிலும் புதிய டஸ்டர் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    எதிர்காலத்தில் இந்த காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவுக்காக மாற்றப்படும் CMF-B பிளாட்ஃபார்ம் பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வசதியை வழங்கும். அந்த வகையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் 2024 அல்லது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். நீண்ட இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா கிராஸ்ஒவர் கூப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    இந்திய சாலைகளில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா மாடலின் சோதனைகளை ஏற்கனவே துவங்கி மேற்கொண்டு வருகிறது. புதிய 500 மில்லியன் டாலர்கள் முதலீடு பற்றி ரெனால்ட் மற்றும் நிசான் தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    ×