search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வலாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
    • தற்போது டாடா கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

    வாகனம் அதன் ஸ்டாக் கண்டிஷனில் இருக்கும் போது தீப்பிடித்து எரிவது மிகவும் துயரமான சம்பவமாகவே இருக்கும். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா ஹேரியர் கார் மாடல் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்க்பப்ட்டு இருந்த போது, தானாக தீப்பிடித்து எரிந்துவிட்டது என கார் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    குனல் போகாரா என்ற நபர் கடந்த ஜூலை மாத வாக்கில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலை வாங்கி இருக்கிறார். கார் வாங்கியதில் இருந்து எந்த விதமான மூன்றாம் தரப்பு அக்சஸரீக்களையும் தனது வாகனத்தில் இவர் பயன்படுத்தவில்லை. எனினும், கார் வாங்கிய சில மாதங்களில் அதன் பேட்டரி முழுக்க சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. இதனால் காரை அவர் அருகாமையில் உள்ள சர்வீஸ் செண்டரில் கொடுத்து, பேட்டரியை மாற்றி இருக்கிறார்.

    புதிய பேட்டரி மாற்றிய மூன்றாவது நாளில் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டரில் கார் சரிசெய்யப்பட்டது. பின் போகாரா தனது காரை சீராக பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 15 கிலோமீட்டர்கள் காரில் சென்று வந்த போகாரா நள்ளிரவு 1.30 மணி அளவில் காரை சாலையின் ஓரத்தில் பார்க் செய்தார். பார்க் செய்யப்பட்ட 15 நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது.

    அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தப்படி, காரின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த கார் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து, அவரும் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தார். தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதில் கார் முழுக்க தீப்பிடித்து எரிந்து விட்டது.

    காரின் பொனெட்டில் தான் முதலில் தீப்பிடிக்க துவங்கியது என பாதுகாப்பு ஊழியர் தெரிவித்து இருக்கிறார். தனது காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் தர வேண்டும் என குனல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Source: Cartoq

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Eeco மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.
    • 2022 மாருதி சுசுகி Eeco மாடல் ப்ரிஸ்க் புளூ எனும் புதிய நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய Eeco மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2022 மாருதி சுசுகி Eeco மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 13 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் CNG வெர்ஷன்களில் கிடைக்கிறது. புதிய Eeco மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின், டூயல் ஜெட் மற்றும் டூயல் VVT தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

    இத்துடன் 2022 மாருதி சுசுகி Eeco மாடல் புதிதாக ப்ரிஸ்க் புளூ நிறத்தில் கிடைக்கிறது. பெட்ரோல் ஆப்ஷனில் இந்த கார் 80 ஹெச்பி பவர், 104.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் CNG மோடில் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 20.2 கிலோமீட்டரும், CNG வேரியண்ட் லிட்டருக்கு 27.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை 2022 மாருதி சுசுகி Eeco மாடலில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏர் பியூரிஃபயர், ரிக்லைனிங் முன்புற இருக்கைகள், புதிய ஸ்டீரிங் வீல், மேனுவல் ஏசி-க்கு ரோடரி கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு பிரிவில் இந்த கார் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இலுமினேட் செய்யப்பட்ட ஹசார்டு ஸ்விட்ச், சைல்டு லாக் வழங்கப்பட்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    மாருதி சுசுகி Eeco 5-சீட்டர் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 5 லட்சத்து 13 ஆயிரம்

    மாருதி சுசுகி Eeco 7-சீட்டர் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம்

    மாருதி சுசுகி Eeco 5-சீட்டர் ஏசி மாடல் விலை ரூ. 5 லட்சத்து 49 ஆயிரம்

    மாருதி சுசுகி Eeco 5-சீட்டர் ஏசி CNG மாடல் விலை ரூ. 6 லட்சத்து 44 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புது கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • புது கார்களின் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் இவற்றின் விலை விவரங்கள் வெளியாகின்றன.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 ஃபேஸ்லிஃப்ட், புதிய XM மற்றும் மேம்பட்ட M340i எக்ஸ்-டிரைவ் மாடல்களை டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய XM பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டாவது பிஸ்போக் பிஎம்டபிள்யூ M மாடல் ஆகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. X7 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் M340i எக்ஸ்-டிரைவ் மாடல்களில் மேம்பட்ட பவர்டிரெயின் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

    அதிக மாற்றங்களை பெற்று இருக்கும் மேம்பட்ட X7 ஆடம்பர எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் முன்புற தோற்றம் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன் உள்ளது. இதே போன்ற செட்டப் புதிய i7 மற்றும் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

    இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. காரின் உள்புறத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய வளைந்த இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 14.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஐடிரைவ் 8 மென்பொருள் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் முன்னதாக iX மற்றும் i4 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்திய சந்தையில் Xக்ஷ மாடல் எக்ஸ்-டிரைவ் 40i மற்றும் எக்ஸ்-டிரைவ் 30d என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் முறையே 380 ஹெச்பி பவர் கொண்ட 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 352 ஹெச்பி பவர் கொண்ட இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இரு என்ஜின்களுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முற்றிலும் புதிய முகப்பு தோற்றம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவி மாடலாக விளங்குகிறது. டாடா ஹேரியர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா XUV700, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எம்ஜி ஹெக்டார் போட்டியாக அமைகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டை சமீபத்தில் தான் எம்ஜி மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த கார் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.

    இந்த நிலையில், புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹெக்டார் மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காட்சியளிக்கிறது. அதன்படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

    இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    Photo Courtesy: MotorBeam

    • செல்போன் பேசியதை கண்டித்ததால் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை வசந்தநகரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 27). இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பாக காரை நிறுத்தியிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதற்கு கோபிகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்வீசி தாக்கினார்.

    இதில் காரின் கண்ணாடி கள் உடைந்து நொறுங்கி யது. இது தொடர்பாக கோபி கிருஷ்ணன், சுப்பிரமணிய புரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை அனுப்பானடி பகலவன் நகர், பூக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் எல்லீஸ் நகர், போடி லைனில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கம்பெனியின் கேட் முன்பாக போஸ்டரை ஒட்டினார். இதற்கு கண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கல் வீசி தாக்கினார். இதில் கம்பெனியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது தொடர்பாக கண்ணன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும், ஒரே வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் எல்லீஸ் நகர், போடி லைனைச் சேர்ந்த முத்து கருப்பன் என்பவரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் மடக்கினர்
    • காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது சோதனையில் கடத்தல் தடுக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் மீட்கப்படுவதோடு கடத்தல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    நேற்று விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஆற்றூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தே கத்துக்கு இடமாக சொகுசு கார் வந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மாறப்பாடி பகுதியில் காரை மடக்கியது.

    அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து அதி காரிகள் காரை சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    தொடர்ந்து காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்த லுக்கு பயன்படுத்திய கார் வட்டாட்சியர் அலுவலக த்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? ரேஷன் அரிசியை கடத்தியது யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி மாடல் அதன் ஆஃப் ரோடிங் அம்சங்களுக்கு பெயர் பெற்ற கார் ஆகும்.
    • அதிக மாற்றங்கள் கொண்ட புதிய தார் மாடலை மஹிந்திரா சமீபத்தில் அறிமுகம் செய்தது.

    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலை வாங்கி பயன்படுத்தி வந்த நபர் ஆறு மாதங்கள் சிறை தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த ஆதில் ஃபரூக் பட் என்ற நபர் தனது தார் மாடலை சட்டவிரோதமாக மாடிஃபை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதில் ஃபரூக் பட்-க்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து ஸ்ரீநகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இதோடு தார் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருந்த மாடிஃபிகேஷன்கள் அனைத்தையும் திரும்ப பெறவும், காரின் முந்தைய நிலைக்கே அதனை மீண்டும் மாற்ற சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மாடிஃபை செய்யப்படும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் கூடுதல் இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மாநிலம் முழுக்க சட்டவிரோதமாக மாடிஃபை செய்யப்பட்டு இருக்கும் வாகனங்களை பிடிக்க காவல் துறை சார்பில் புதிதாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட உள்ளன. சட்டவிரோதமாக கார் மாடிஃபை செய்த ஆதில் ஃபரூக் பட் கைதாவதை தவிர்க்க ரூ. 2 லட்சத்திற்கு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பின் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த விதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

    இரண்டு ஆண்டுகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாமல் நன்னடத்தையை நிரூபிக்கும் பட்சத்தில் ஆதில் ஃபரூக் பட் மீது பதியப்பட்ட வழக்கு முழுமையாக ரத்து செய்யப்படும். எதிர்காலத்தில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் ஆதில் ஃபரூக் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமானது.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சில நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இன்னோவா ஜெனிக்ஸ் பெயரில் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் புதிய இன்னோவா சர்வதேச வெளியீடு ஆகும். இதே கார் இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் மாட்யுலர் TNGA-C: GA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இது தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட வித்தியாசமாக இருக்கும். மேலும் இதன் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் என முழு அம்சங்களும் அடியோடு வேறுபடுகிறது. தற்போதைய இன்னோவா க்ரிஸ்டா மாடலில் ரியர் வீல் டிரைவ், லேடர் ஆன் ஃபிரேம் உற்பத்திக்கு மாற்றாக புதிய இன்னோவா மோனோக் சேசிஸ் மற்றும் முன்புற வீல் டிரைவ் செட்டப் கொண்டிருக்கிறது.

    தோற்றத்தில் புது இன்னோவா மாடல் எஸ்யுவி போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் ஹெக்சகோனல் வடிவம் கொண்ட கிரில், க்ரோம் பார்டர்கள், மெல்லிய ஹெட்லைட்கள், பெரிய வெண்ட்கள் கொண்ட மஸ்குலர் முன்புற பம்ப்பர், மெல்லிய எல்இடி டிஆர்எல் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பக்கவாட்டுகளில் ஃபிலார்டு வீல் ஆர்ச்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், அண்டர் பாடி கிலாடிங், மஸ்குலர் கேரக்டர் லைன்கள் உள்ளன.

    இந்த கார் டூயல் டோன் ORVMகள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி இண்டிகேட்டர்கள், பிளாக்டு-அவுட் எலிமண்ட்களை கொண்டிருக்கிறது. பின்புறத்தில் மெல்லிய ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், மெல்லிய ஆர்ச்டு ரியர் விண்ட்-ஷீல்டு மற்றும் வைப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இன்னோவா க்ரிஸ்டாவை விட 20மில்லிமீட்டர் நீளமாக உள்ளது. இது 475 மில்லிமீட்டர் அகலம், உயரம் 1795 மில்லிமீட்டர், வீல்பேஸ் 100 மில்லிமீட்டர் உயரமாக்கப்பட்டு இருக்கிறது.

    உள்புறம் புதிய, அதிக நவீனமான லே-அவுட், ஆல் பிளாக் அல்லது பிளாக் மற்றும் பிரவுன் என டூயல் டோன் இண்டீரியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டேஷ்போர்டில் 10 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, மல்டி-ஃபன்ஷனல் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த காரில் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் இரண்டாம் அடுக்கில் கேப்டன் சீட்கள், பானரோமிக் சன்ரூஃப், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் வசதிகளை கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் அளவில் இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இதில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஏழு ஏர்பேக், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், ABS, EBD, ரியர் பார்க்கிங் கேமரா என ஏராளமான அம்சங்கள் உள்ளன. காரின் அனைத்து வேரியண்ட்களின் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வாய்ஸ் கமாண்ட் மூலம் திறக்கும் வசதி கொண்டுள்ளது.

    இந்தோனேசியாவில் அறிமுகமாகி இருக்கும் இன்னோவா ஜெனிக்ஸ் (ஹைகிராஸ்) மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஆப்ஷனல் 2.0 லிட்டர் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • டாடா நிறுவத்தின் புதிய CNG மாடல் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியாகோ NRG i-CNG விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது இந்தியாவின் முதல் டஃப் ரோடர் CNG என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. புதிய டாடா டியாகோ NRG i-CNG மாடல் XT மற்றும் XZ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டாடா டியாகோ NRG i-CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய டியாகோ NRG i-CNG மாடலின் வெளிப்புறம் பிளாக் பாடி கிலாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிதாக ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பிளாக் ரூஃப், ORVM-கள், ரூஃப் ரெயில்கள், ஃபாக் லைட்கள், டெயில் கேட் மீது பிளாஸ்டிக் கிலாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் கிளவுடி கிரே, ஃபயர் ரெட், போலார் வைட் மற்றும் ஃபாரெஸ்டா கிரீன் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறத்தில் சார்கோல் பிளாக் தீம், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அடஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    டாடா டியாகோ NRG i-CNG XT ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்

    டாடா டியாகோ NRG i-CNG XZ ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் கிராஷ் டெஸ்ட் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
    • தற்போது இரு கார்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன.

    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியுள்ளன. கிராஷ் டெஸ்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16 கார்களில் ஒரு காரும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெறவில்லை.

    ரேன்ஜ் ரோவர் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 84 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.1 புள்ளிகளையும், சிறியவர்கள் பயணிக்கும் போது 87 சதவீத புள்ளிகளையும் பெற்றது. இதில் 49-க்கு 43 புள்ளிகளை பெற்றது. பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதவீதம் பெற்றது. இதில் 16-க்கு 13.2 புள்ளிகள் வழங்கப்பட்டன. 2022 ரேன்ஜ் ரோவர் மாடல் ஆபத்தான சாலைகளில் 72 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 54-க்கு 39.1 புள்ளிகளை பெற்றது.

    யூரோ NCAP டெஸ்டில் கலந்து கொண்ட ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது 85 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.4 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட டெஸ்டிங்கிலும் 85 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றுள்ளது.

    காரில் உள்ள பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதவீத புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் 16-க்கு 13.2 புள்ளிகளை ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் பெற்றது. ஆபத்தான சாலைகளில் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 69 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் 54-க்கு 37.5 புள்ளிகளை பெற்றுள்ளது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் S-CNG பொருத்தப்பட்ட கார்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.
    • சமீபத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் XL6 கார்களின் S-CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஆல்டோ K10 S-CNG வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 S-CNG விலை ரூ. 5 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஆல்டோ K10 S-CNG சேர்த்தால் இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 13 S-CNG கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தும் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.

    புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 S-CNG மாடலில் 1.0 லிட்டர், K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கார் லிட்டருக்கு 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    "ஆல்டோ பிராண்டு எப்போதும், மாருதி சுசுகி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் கனவுகளுக்கு ஏற்ப எப்படி தங்களை மாற்றிக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அடையாளம். ஆல்டோ மாடல் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளுக்கு அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. மேலும் புதிய S-CNG மாடல் இதன் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும்."

    "இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக S-CNG வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறோம். புதிய ஆல்டோ K10 மாடலில் S-CNG கிட் வழங்கி இருப்பதை அடுத்து, பலர் இந்த காரை வாங்க விரும்புவர். எஹ்கலின் S-CNG பிரிவு மிகவும் விசேஷமைக டிசைன் செய்யப்பட்டு, இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது." என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன.
    • இரு கார்களும் ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த என்ஜினுடன் கிடைக்கின்றன.

    மஹிந்திகா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்களுக்கான காத்திருப்புக் காலம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், இரு கார்களை வாங்க முன்பதிவு செய்வோர் டெலிவரி எடுக்க 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என மஹிந்திரா அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இரு கார்களின் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்களை பெற குறைந்த பட்சம் 18 மாதங்களில் இருந்து அதிகபட்சமாக 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இரு கார்களை வாங்க, நவம்பர் 2022 வரை ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் முன்பதிவுகளை பெறுவதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.

    இந்த மாதத்திற்கு மட்டும் மஹிந்திரா நிறுவனம் 2 லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களுக்கு முன்பதிவு செய்து வருகிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்கள் ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்கள் ஆகும். தொடர்ந்து காத்திருப்பு காலம் அதிகரித்து வருவதை அடுத்து உற்பத்தியை வேகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது.

    எனினும், இரு கார்களின் உற்பத்திக்காக எத்தனை யூனிட்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை மஹிந்திரா இதுவரை வெளியிடவில்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்கள் மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் இரு மாடல்களின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×