search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • இந்திய சந்தையில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது.
    • இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடலின் விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    புதிய 2022 ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் குவாட்ரா டிராக் ஐ 4x4 சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட், ஆட்டோ, ஸ்னோ மற்றும் சேண்ட்/மட் என நான்கு வித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபேம்டு 7 ஸ்லாட் கிரில், டூயல் எல்இடி டிஆர்எல், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், பின்புற பம்ப்பரில் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறத்தில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், எட்டு ஏர்பேக், 360 டிகிரி சரவுண்ட் வியூ, டிரௌசி டிரைவர் டிடெக்‌ஷன், 3-பாயிண்ட் சீட் பெல்ட், அனைத்து பயணிகளுக்கும் occupant டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவுக்கு சிகேடி முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் வலதுபுற டிரைவ் யூனிட்கள் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    • டொயோட்டா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் டீசர் வெளியானது.
    • முதற்கட்டமாக இன்னோவா ஹைகிராஸ் மாடலின் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் முதற்கட்டமாக இந்தோனேசியாவில் நவம்பர் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகிறது.

    டீசரின் படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் முற்றிலும் புதிய டிசைன், கிரில், பம்ப்பர், காண்டிராஸ்ட் நிற இன்சர்ட்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், வீல் கிளாடிங் மற்றும் ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட் கொண்டிருக்கிறது. முந்தைய டீசர்களின் படி 2023 இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தோனேசியாவில் இன்னோவா செனிக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் சீட் பெல்ட்கள், டேஷ்கேம் உள்ளட்ட வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதில் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செண்டர் கன்சோலில் கியர் லீவர் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மோனோக் சேசிஸ் மற்றும் FWD லே-அவுட்-இல் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் யூனிட் உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய இன்னோவா மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை விவரங்கள் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் இந்தியா வருகிறது.

    இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் மாடல் மூலம் கியா குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்றது. 2019 வாக்கில் இந்தியாவில் களமிறங்கிய கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    அமெரிக்காவில் ஸ்போர்டேஜ், சொரெண்டோ மற்றும் டெலுரைடு மாடல்களை போன்று செல்டோஸ் அதிக வரவேற்பு பெறவில்லை. புதிய மேம்பட்ட செல்டோஸ் மூலம் இந்த நிலையை மாற்ற கியா திட்டமிட்டுள்ளது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முகப்பு பகுதி, பெரிய கிரில், இலுமினேட் செய்யப்பட்ட அக்செண்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் ஹெட்லைட்களும் மாற்றப்பட்டு அழகாக டிசைன் செய்யப்பட்டு உள்ளன.

    பின்புறம், டெயில் லைட்களும் புதிதாக வழங்கப்படுகின்றன. இவை ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட லைட் ஸ்ட்ரிப் மூலம் இண்டர்கனெக்ட் செய்யப்படுகின்றன. காரின் உள்புறத்தில் மேம்பட்ட 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் அளவில் மேம்பட்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. காரின் ஏர் வெண்ட்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    அமெரிக்காவில் இந்த மாடல் அதன் தென் கொரிய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த என்ஜின்களை பெறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 147 ஹெச்பி பவர், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினும் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 195 ஹெச்பி பவர், 265 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா மாடல் இந்திய சந்தையில் அமோக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
    • இதுதவிர புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் டொயோட்டா ஈடுபட்டு வருகிறது.

    டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட்களின் முன்பதிவை சமீபத்தில் நிறுத்தியது. இதைத் தொடர்ந்து டீசல் வாகனங்கள் விற்பனையை டொயோட்டா நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இதுபற்றி டொயோட்டா தரப்பில் எந்த தகவலோ, விளக்கமோ வழங்கப்படவில்லை. தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது இந்த தகவல் தான் உண்மையான காரணம் என தெரியவந்துள்ளது. சில விற்பனையாளர்கள் இன்னோவா டீசல் வேரியண்டிற்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இன்னோவா க்ரிஸ்டா ZX வேரியண்டில் மட்டும் தான் டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த முறை டீசல் கார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்றும் இவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் விற்பனையகங்களுக்கு வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. இன்னோவா டீசல் வேரியண்ட் வாங்க திட்டமிடுவோருக்கு இந்த தகவல் சற்று ஆறுதலாக இருக்கும்.

    அடுத்த தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின்களை மட்டுமே கொண்டிருக்கும். புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இதன் வினியோகம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • மங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்றது.
    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்றது. பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    இந்தநிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அக்கம்- பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய ஸ்விப்ட் மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 35 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஹைப்ரிட் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்தியாவில் தனது முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் கார் - கிராண்ட் விட்டாரா மாடலை தொடர்ந்து ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரு கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், மாருதி சுசுகி ஹைப்ரிட் வேரியண்ட்களையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அதிக மைலேஜ் கொண்ட ஹேச்பேக் மற்றும் செடான் மாடல்கள் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

    ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் வெளியீடு 2024 முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. புதிய ஹைப்ரிட் வெர்ஷனில் முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Z12E எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் தற்போதைய K12C என்ஜினை போன்று இருக்காது. இந்த எனிஜினுடன் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இதே தொழில்நுட்பம் தான் கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்களிலும் வழங்கப்பட்டது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஹெக்டார் மாடல் அதிகளவு மாற்றங்கள், மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் 2023 எம்ஜி ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியீடு தேதி உறுதியாகி இருக்கிறது.

    புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் அளவில் பெரியதாகவும், பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கும். இதன் முன்புறம் டைமண்ட் மெஷ் ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட், டிஆர்எல் செட்டப் வழங்கப்படுகிறது. எனினும், இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்படும் என தெரிகிறது.

    காரின் உள்புறம் புதிய டேஷ்போர்டு, ரிடிசைன் செய்யப்பட்ட ஏர்கான் வெண்ட்கள் உள்ளன. அப்பர் மற்றும் லோயர் டேஷ்போர்டுகள் இன்செட் செக்‌ஷன் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன. இருபுறங்களிலும் மென்மையான மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டு, டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகமாகும் போது ஹெக்டார் மாடல் ஏராளமான அம்சங்களுடன் புது அத்தியாயத்தை கட்டமைத்தது.

    தற்போது புதிய மாடலில் மேலும் பெரிய 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலில் 10.4 இன்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஏராளமான அம்சங்கள், புதிய செயலிகள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடலில் மேம்பட்ட ADAS சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தன் புதிய தலைமுறை அக்கார்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய அக்கார்டு மாடல் இரு பெட்ரோல் மற்றும் நான்கு ஹைப்ரிட் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் 11th Gen அக்கார்டு மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் அளவில் பெரியதாகவும், முன்பை விட அதிகளவு ஆடம்பரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா சிவிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அக்கார்டு மாடல் அதன் பாரம்பரிய தோற்றத்தை இழக்காமல் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

    புதிய ஹோண்டா அக்கார்டு மாடலில் குறிப்பிடத்தக்க அம்சமாக 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புது மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.

    ஹைப்ரிட் அக்கார்டு மாடலில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் மற்றும் இரு மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 335 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    காரின் வெளிப்புறம் மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் அப்ரைட் கிரில், பிளாக்டு அவுட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிஸ்டின்டிவ் ஹாரிஜாண்டல் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அக்கார்டு மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரியர் ஸ்பாயிலர் உள்ளது.

    உள்புறத்தில் பிரீமியம் பாகங்கள், அதிக சவுகரியமான இருக்கைகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்ட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா அக்கார்டு மாடலின் விலை மற்றும் வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட E-CNG கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய டொயோட்டா கிளான்சா E-CNG கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் E-CNG கிட் பொருத்தப்பட்ட கிளான்சா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டொயோட்டா கிளான்சா E-CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கிளான்சா மட்டுமின்றி அர்பன் குரூயிசர் ஹைரைடர் E-CNG வேரியண்டும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது.

    புதிய டொயோட்டா கிளான்சா E-CNG மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. டொயோட்டா கிளான்சா E-CNG மாடலில் உள்ள 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் 76 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    "நுகர்வோருக்கான நிறுவனம் என்ற வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர் விருப்பதை முதலில் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, வாடிக்கையாளர்களின் கனவுகள் மீது தெளிவான கண்ணோட்டத்தில் சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு வழங்குவதே எங்களின் குறிக்கோள்."

    "இதே குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டே CNG பிரிவில் களமிறங்குவதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அதன்படி டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புது அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்கி இருக்கிறோம்."

    "டொயோட்டா வாகனத்தை பயன்படுத்தும் மகிழ்ச்சி மட்டுமின்றி அவர்களுக்கு குறைந்த செலவில், முழுமையான மன நிம்மதியை டொயோட்டா வாகனங்கள் வழங்கும். இதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சி அடைய முடியும்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்து இருக்கிறார்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. விலை மாற்றம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஒட்டுமொத்தமாக உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நவம்பர் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி டாடா ஹேரியர் மாடல் விலை தற்போது ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா சபாரி மாடலின் விலை ரூ. 20 ஆயிரமும், நெக்சான் மாடல் விலை ரூ. 18 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ், டிகோர் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹேச்பேக் மாடலான டாடா டியாகோ விலை தற்போது ரூ. 8 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. டாடா பன்ச் விலை ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இவை தவிர டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்களில் 50 ஆயிரமாவது யூனிட்டாக நெக்சான் EV மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    • தாசில்தாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்:

    செந்துறை தாசில்தாராக இருப்பவர் விக்டோரியா பாக்கியம். இவர் அரியலூரில் வசித்து வருகிறார். இவர் பணி முடிந்து அரசு காரில் அரியலூருக்கு வந்தார். அந்த வாகனத்தை டிரைவர் பழனிவேல் ஓட்டி வந்தார். அரியலூரில் உள்ள வீட்டில் தாசில்தார் இறங்கிய பின்னர், டிரைவர் பழனிவேல் அந்த காரை செந்துறை தாசில்தார் அலுவலகத்திற்கு ஓட்டிச்சென்று, அங்கு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வழக்கம்போல் காலை அவர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கண்டிப்பு காரணமாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரேனும் காரின் கண்ணாடியை உடைத்தார்களா? அல்லது வேறு யாரேனும் உடைத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் செந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ராட்சத குழாயில் மோதியது.
    • பலூன் வெளிவந்ததால் டிரைவர் உயிர் தப்பினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). வாடகை கார் டிரைவர்.

    காரைக்குடியில் இருந்து இவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கோவை சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிலநீர்பட்டி பிரிவில் இரவில் வந்த போது வளைவான சாலையில் கார் வேகமாக திரும்பியது.

    அப்போது கட்டுப்பா ட்டை இழந்த கார் சாலையோரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய் மீது மோதியது.

    இதில் காரின் என்ஜின் பகுதி நொறுங்கியது. கார் வேகமாக மோதியதால் டிரைவர் சீட்டின் முன்பகுதியில் இருந்த பலூன் வெளி வந்தது. இதன் காரணமாக காரை ஓட்டிய செந்தில்முருகன் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ×