search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை ஸ்பெஷல் எடிஷன் கார்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X6 ஜாரெ M எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X6 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 1 கோடியே 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பிஎம்டபிள்யூ X6 ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    ஜாரெ M எடிஷன் சீரிசில் ஒன்பதாவது மாடலாக புதிய X6 அறிமுகமாகி இருக்கிறது. X6 ஜாரெ M எடிஷன் மாடல் பிளாக் சபையர், M கார்பன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடலில் கிளாஸ் பிளாக் நிற முன்புற கிரில், 20-இனஅச் பிளாக் M அலாய் வீல்கள், ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பொனெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ லோகோ M டிரீட்மெண்ட் பெற்றுள்ளது.

    காரின் உள்புறம் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டெம்பரேச்சர் கண்ட்ரோல் வசதியுடன் கப் ஹோல்டர்கள், பவர்டு ஸ்போர்ட்ஸ் சீட்கள், சென்சாஃபின் இருக்கை மேற்கவர்கள், டகோரா ரெட் ஸ்டிச்சிங் போன்ற அம்சங்கள் உள்ளன. M ஸ்போர்ட் வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த காரில் M சார்ந்த அம்சங்களான M லெதர் ஸ்டீரிங் வீல், M ஸ்போர்ட் பிரேக்குகள், M ஸ்போர்ட் எக்சாஸ்ட் சிஸ்டம், அடாப்டிவ் M சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    என்ஜினை பொருத்தவரை எவ்வித மாற்றமும் இன்றி 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 335 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    • ஹோண்டா நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    • புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் "WR-V" பெயரில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய எஸ்யுவி மாடல் 2021 நவம்பர் மாத வாக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த RS எஸ்யுவி கான்செப்ட் மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் ஆகும்.

    புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் ஒரே டீசரை தான் ஹோண்டா இதுவரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரின் படி புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. அதில் புதிய கார் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

    காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் பெரிய க்ரோம் ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான பாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இண்டீரியர் மற்றும் என்ஜின் விவரங்கள் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த எஸ்யுவி மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும்.

    ஹோண்டா எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே என்ஜின் முன்னதாக ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஜீப் ஃபுல்-சைஸ் எஸ்யுவி மாடல் இந்திய ஆலையிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் 2022 கிராண்ட் செரோக்கி மாடலை நவம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவில் ஜீப் அசெம்பில் செய்யும் நான்காவது மாடல் ஆகும். முன்னதாக ஜீப் காம்பஸ், மெரிடியன் மற்றும் ராங்ளர் போன்ற மாடல்களை ஜீப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலை ஜீப் நிறுவனத்தின் வலதுபுற டிரைவ் யூனிட்களுக்கான உற்பத்தி மையமாக மாறுகிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் செயல்திறன் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    இது மட்டுமின்றி புதியகாரில் குவாட்ரா-டிராக் 4x4 சிஸ்டம்- ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் என நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 7 ஸ்லாட் கிரில், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறத்தில் ADAS அம்சங்கள், 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் டோன் இண்டீரியர் தீம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    • ஹோண்டா நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளியீட்டு விவரங்களை ஹோண்டா அறிவித்து இருக்கிறது.

    ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்.

    2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அமேஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியா உள்பட உலக நாடுகளில் டீசல் என்ஜினுக்கான மோகம் குறைவதை அடுத்து இந்த காரின் டீசல் என்ஜின் வேரியண்ட் இறுதிக்கட்ட உற்பத்தியை எட்டுவது கடினம் தான்.

    டீசல் வேரியண்டிற்கு மாற்றாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம். இது சமீபத்திய சிட்டி செடான் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது. தற்போது செடான் பிரிவில் சிட்டி மாடல் மட்டுமே ஹைப்ரிட் வடிவில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

    இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே போன்ற செட்டப் புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கிட் கொண்ட கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடலின் CNG வேரியண்டை மாருதி சுசுகி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யுவி-யின் CNG வெர்ஷனின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் பற்றிய தகவல்கள் அந்நிறுவன வலைதளத்தில் இருந்தே லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட முதல் CNG எஸ்யுவி என்ற பெருமையை மாருதி சுசுகி பிரெஸ்ஸா பெறும். இத்துடன் நாட்டின் முதல் ஆட்டோமேடிக் CNG பயணிகள் கார் என்ற பெருமையையும் பெறும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் CNG வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதை அடுத்து ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் வாகன விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய பிரெஸ்ஸா மாடலிலும் 1.5 லிட்டர் NA என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    • கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
    • குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியது.
    • ஸ்லேவியா கார் ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செடான் ரக மாடல் ஆகும்.

    வாகன நிறுத்தம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கோடா ஸ்லேவியா மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடந்த ஜூன் மாத வாக்கில் இந்த சம்பவம் அரங்கேறியது. ஸ்கோடா கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

    வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் கார் உரிமையாளரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பத்தன்று காரின் உரிமையாளர் தனது ஸ்லேவியா மாடலை இரவு 10 மணிக்கு வாகன நிறுத்தத்தில் நஇறுத்தி இருக்கிறார். விடியற்காலை 3 மணி அளவில் கார் தானாக தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. இது குறித்து வெளியான வீடியோவில் கார் வாகன நிறுத்தத்தின் தரைதளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

    கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதனை நிறுத்த பல முறை முயற்சித்தும் தீ கட்டுக்கள் வரவில்லை. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த போதிலும் காரில் பற்றிய தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கார் வாங்கியதில் இருந்து வெறும் 4 ஆயிரம் கிலோமீட்டர்களே ஓடிய நிலையில், ஸ்லேவியா கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பற்றிய வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் தரப்பில் உரிமையாளரிடம் அவற்றை நீக்க வலியுறுத்தப்பட்டது.

    பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காரின் உரிமையாளர் கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்தார். அதன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா சார்பில் குழு ஒன்று எரிந்த காரில் சோதனை நடத்தியது. எனினும், ஸ்கோடா தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின் காரின் உரிமையாளர் கார் காப்பீடு செய்யப்பட்ட நிறுத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.

    நான்கு மாத போராட்டத்திற்கு பின் காரின் உரிமையாளருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய கார் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய விசாரணையில் கார் உற்பத்தியின் போது தவறுகள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனினும், ஸ்கோடா இந்தியா சார்பில் தவறுக்கு பொறுப்பேற்கப்படவில்லை என்றும் தொடர்ந்து வாக்குவாதம் செய்யப்பட்டதாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    • டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • மேம்பட்ட புது எம்பிவி மாடல் முற்றிலும் புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் அசத்தலான வெளிப்புற ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் படி புது மாடலில் மேம்பட்ட புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் அசத்தல் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    டீசரின் படி புதிய காரின் முன்புறம் அளவில் பெரிய கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்இடி யூனிட்களாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் எலிஇடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகின்ன. இதன் பொனெட் உறுதியாக கிரீஸ் லைன்கள், முன்புற பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட பாக் லேம்ப் கேசிங் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இன்னோவா ஹைகிராஸ் மாடலுடன் மோனோக் ஆர்கிடெக்ச்சர் மற்றும் முன்புற வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம். இத்துடன் 360 டிகிரி கேமரா, பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் புதிய இன்னோவா காரின் டெஸ்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என தெரிகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆல்-எலெக்ட்ரிக் EQB காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், டிசம்பர் மாத துவக்கத்தில் 7 சீட்டர் GLB மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    முன்புற டிரைவ் வீல் வசதி கொண்ட ஏ செடான் மற்றும் GLA மாடல்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்படும் நிலையில், புதிய GLB மாடல் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் GLB மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதால் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடலின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLB விலை ரூ. 65 லட்சத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது GLA மற்றும் ஏ செடான் மாடல்களை விட அதிகம் ஆகும். இவற்றின் விலை முறையே ரூ. 45 லட்சம் மற்றும் ரூ. 42 லட்சம் என துவங்குகிறது. 7 சீட்டர் மாடல் என்பதால் புதிய GLB இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் நிறுவன மாடல்களில் GLS தவிர 7 சீட்டர் ஆப்ஷன் கொண்ட கார் என்ற பெருமையை GLB பெற இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய பிஎஸ்6 புகை விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ், சில ஆடம்பர வாகனங்களில் டீசல் என்ஜின்கள் நிறுத்தப்பட்டது. அதிக முதலீடு மற்றும் டீசல் திறன் வாகனங்களுக்கான மோகம் குறைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதே போன்று அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய புகை விதிகள் அமலுக்க வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ரியல் டிரைவிங் எமிஷன் விதிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிறிய டீசல் என்ஜின் கொண்ட வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கிறது.

    இவ்வாறு புதிய புகை விதியில் பாதிக்கப்படும் முதல் கார் மாடலாக ஹூண்டாய் ஐ20 டீசல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் என இரு ஹேச்பேக் கார்கள் மட்டும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் டைக்கின்றன. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா மாடல்களின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது.

    இவற்றில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 75 பிஎஸ் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. ஹூண்டாய் ஐ20 மாடலில் தற்போது இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மாடல் கார் முன்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இதுவரை எத்தனை யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டன என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது டைகுன் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை வாங்க இதுவரை சுமார் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி இதுவரை 28 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    கடந்த மாதம் தான் போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் ஆனிவர்சரி எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. டைகுன் ஆனிவர்சரி எடிஷன் விலை ரூ. 15 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்ஸ்வேகன் டைகுன் ஆனிவர்சரி எடிஷன் மாடல் வைல்டு செர்ரி ரெட், கர்குமா எல்லோ மற்றும் ரைசிங் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கான குளோபல் NCAP புள்ளி விவரங்கள் வெளியாகின. இதில் இரு மாடல்களும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெற்று அசத்தின.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய ஹூண்டய் செடான் மாடல் சொனாடா மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் செடான்- கிராண்டியர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதே கார் தென் கொரியாவை தவிர மற்ற நாடுகளில் அசெரா என அழைக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை செடான் மாடல் முந்தைய தலைமுறை கார்களை விட அதிகளவு மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த காரின் வெளிப்பும் மற்றும் இண்டீரியர் விவரங்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய கிராண்டியர் மாடலின் முன்புறம் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டேரியா எம்பிவி போன்றே காட்சியளிக்கிறது. இதில் ஃபுல் விட்த் எல்இடி டிஆர்எல் லைட் பார், ஃபுல் லென்த் கிரில்-இடையில் ஹெட்லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் அழகான தோற்றம், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், மிக சிறிய கட் மற்றும் கிரீஸ்கள் காணப்படுகின்றன.

    வெளிப்புறத்தை போன்றே இண்டீரியரிலும் கிராண்டியர் மாடல் டூயல் ஸ்கிரீன் செட்டப், செண்டர் கன்சோலில் கிளைமேட் செட்டிங்களை மாற்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது. இது ஒரிஜினல் மாடலில் உள்ளதை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. முந்தைய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருந்தது.

    அந்த வகையில் இந்த மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காரின் சர்வகதேச வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ×