search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று அதிகாலை பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது
    • கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     

    இன்று அதிகாலை பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி 2பள்ளிகளின் மேல் நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய நாள் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

     

    அதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2 அன்று மற்றொரு பள்ளி மீது நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த பள்ளிகளில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்திருப்பதாக கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7 முதல் நடந்துவரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
    • ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

    இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

     

    • உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை.

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.


    உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார்.

    காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

    • உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
    • அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று [ஜூலை 20] இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.

     

    இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 

    அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிஷைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் - ஹமாஸ்  போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன.  இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கான் யூனிஸ், ரஃபாவில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
    • மத்திய காசாவில் 10 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

    நுசெய்ரத் மற்றும் ஜவைடா ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

    கடந்த வாரம் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தலைவர் முகமது தெய்ஃப்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தியில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பின்னரும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பரிந்துரையை வழங்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காசா மீதான கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள 120 பிணைக்கைதிகளை விடுவிக்கவும் சர்வதேச மத்தஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தாக்குதல் மக்கள் வசித்து வந்த நான்கு வீடுகள் மீது நடத்தப்பட்டதாக அவசர பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய காசாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு விரிவாக இந்த தாக்குதல் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    தெற்கு காசாவில் திங்கட்கிழமை (நேற்று) இரவு இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

    • அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தெய்ஃப் முகமது.
    • சுரங்கத்தில் மறைந்து இருந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. எல்லையை ஒட்டியுள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் காசாவின் தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது.

    ரஃபா நகருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கான் யூனிஸ் நகர் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. அங்கு ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டியதாக கூறியது. பின்னர் அங்கு பாதுகாப்பான ஒரு பகுதியை உருவாக்கியதாக இஸ்ரேல் கூறியது. ரஃபா பகுதியில் இருந்து மக்கள் அந்த பகுதிக்க செல்லுமாறு எச்சரித்தது.

    இந்த நிலையில் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ஃப் எனக் கருதப்படுகிறது. இவர் கான் யூனிஸ் அருகே உள்ள அல்-மவாசி பகுதியில் சுரங்கத்தில் மறைந்து இருந்ததாக தெரிகிறது.

    இதை அறிந்து கொண்ட இஸ்ரேல் அந்த பகுதியில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீது ஆர்வம் காட்டவில்லை என்பது காண்பிக்கிறது என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்ட நிலையில், 289 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்தார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

    முகமது தெய்ஃப் இஸ்ரேலின் தேடப்படும் பட்டியலில் முக்கிய நபராக இருந்தார். இஸ்ரேலின் பல தாக்குதலில் உயிர்தப்பினார். தற்போதைய இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா? என்பது தெளிவாகவில்லை.

    • கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும்.
    • 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன'

    பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று [ஜூலை 9] காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது  இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல்- அவ்டா பள்ளி மீது குறிவைத்து இஸ்ரேல் ராணவம் இந்த வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யூனிஸ் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறனறனர். டாக்குதலில்போது சுமார் 2000 பேர் பள்ளியில் இருந்துள்ளனர் 

    கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும். இந்த தாக்குதலை மோசமான படுகொலை என்று தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன' என்று தாக்குதலில் உயிர்பிழைத்த முகமது சுக்கார் என்பர் தெரிவித்துள்ளார்.

    அல்- அவ்டா பள்ளிக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த்ததாகவும் அதனாலேயே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மத்திய காசாவின் நஸ்ரேத்தில் அமெரிக்கர்களால் நடத்தப்பட்ட அல்- ஜாவ்னி பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    • இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்

    ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் இஸ்ரேல் - காசா போரை முன்னிறுத்தி முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் அருகாமையில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹெஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு ஈரானின் அரசு ஊடகமான IRNA மூலம் உறுதி தெரிவித்துள்ளார்.

     

    மேலும் ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ள அவர், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களை நிறுத்த ஹெஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக மசூத் தெரிவித்துள்ளார்.

     

    1984 இல் லேபனான் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டின்மீது இஸ்ரேல் படையெடுத்து கைப்பற்ற முயன்றது. இஸ்ரேல் படையெடுப்பை எதிர்க்க உருவான இயக்கமே ஹிஸ்புல்லா ஆகும். ஹிஸ்புல்லா என்ற சொல்லுக்கு கடவுளின் ஆட்சி என்று பொருள். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹாசன் நஸ்ரல்லா தலைமையில் லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா நடந்திய ஏவுகணைத் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் போர் தொடுத்துவரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.
    • போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.

    இதில் அங்கு அகதிகளாக தங்கியிருந்த 16 பேர் இறந்து விட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
    • போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

    இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் துவங்கியதில் இருந்து காசாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    பாலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் ஒவ்வொரு பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணிக்கிறோம். நாங்கள் 1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்தோம்," என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

    • பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

     

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

     

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

     

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்களின்மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது.
    • சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ளது

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஓய்ந்தபாடலில்லை. இந்த போரில் இதுவரை 37,718 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காசா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் மற்றொரு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தற்போது குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருகிறது. மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள் என வகைதொகை இன்றி கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் ரஃபா நகரில் உள்ள கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தற்காலிக கூடாரங்களின் மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான  கூடாரங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     

     

    இஸ்ரேலின் பீரங்கிகள் அப்பகுதியில் முன்னேறிவந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களிடம் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. இதற்கிடையில் போர் தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை அதிக சேதத்தை ஏற்படுத்தும் சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

     

    ×