search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலஸ்தீன்"

    காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gaza # IsraelNavyfired
    காசா :

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது.

    பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் நோக்கம் ஆகும்.ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என கூறுகிறது.

    இந்நிலையில், காசா பகுதியில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்ற பாலஸ்தீனர்கள் 24 பேர் இஸ்ரேல் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாலஸ்தீன் உயர் தேசிய குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் காசா கடற்பகுதியில் படகுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், குண்டு துளைத்து 24 பாலஸ்தீனர்கள் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Gaza # IsraelNavyfired
    ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததற்காக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன பெண் அஹெத் தமிமி தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    ஜெருசலேம்:

    பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்த்தும், அடக்குமுறைகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டின் அருகில் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தனது உறவினரை தாக்குவதை கண்ட 15 வயது அஹெத் தமிமி என்ற பாலஸ்தீன சிறுமி ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீரர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைய, தமிமியும் ராணுவ வீரரை உதைத்து, கன்னத்தில் அறைந்தும் பதிலடி கொடுத்துள்ளார்.



    இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீன் மக்கள் மத்தியில் தமிமி முக்கியத்துவம் பெற்றார்.

    இதையடுத்து, ராணுவ வீரரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிமிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ராணுவ வீரரை தாக்கியதாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன சிறுமி தமிமி, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    இஸ்ரேலின் மேற்குக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவரை சுட்டு கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
    டெல் அவிவ் :

    ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் தொடங்கப்பட்டது. இதற்கு, பாலஸ்தீன மக்கள் இரண்டு நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள இஸ்ரேல் படைகளின் மீது அடிக்கடி கல்வீசி தாக்குதல் நடத்தி தங்களது கடுமையான எதிர்ப்பை காட்டிவருகின்றனர். 

    இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடைப்பட்ட சர்ச்சை பகுதியான மேற்குக்கரை பகுதியில் இருக்கும் இஸ்ரேல் படைகளின் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற நபரை இஸ்ரேல் படைகள் இன்று சுட்டுக்கொன்றது.

    “இஸ்ரேல் படைகளை நோக்கி பயங்கரவாதி ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்து மோத முயன்றார். ஆனால், அவரின் மீது படைகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இதில் இஸ்ரேல் படையினர் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’’ என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த கருத்தும் அங்கிருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×