என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கால்பந்து"
வாழப்பாடி:
வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் என்.ஜி.ஆர்., 149 கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லர்ஸ் சார்பில் ஐவர் அணி கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
தொடக்க விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். போட்டியில், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன.
இதில் சேலம் அவரஞ்சிஅம்மா அணி முதல் பரிசும், 149 அணி 2-ம் பரிசும், வாழப்பாடி கருடன் 3-ம் பரிசும், வித்யா மெமோரியல் அணி 4-ம் பரிசும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள், ரொக்கப்பரிசு மற்றும் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபிநாத், ஆர்.குணாளன், கால்பந்து குழு நிர்வாகிகள் ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
இதன் ஒரு அங்கமாக இந்திய அணி சீனாவுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட விரும்பியது. இந்த ஆட்டம் சீனாவில் உள்ள சுஜோவ் நகரில் நடைபெற்றது.
21 ஆண்டுகளாக இந்தியா - சீனா அணிகள் நேருக்கு நேர் மோதியது கிடையாது. தற்போது இன்று மோதியது. இதில் இந்தியா வெற்றி பெறுமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது.
பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். கங்காரு சிறிது விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.
இதுகுறித்த சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. அதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கங்காரு கால்பந்து விளையாடி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. #Kangaroo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்