search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டர்நெட்"

    இன்டர்நெட் இயங்க அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை பாதிக்கப்படுகிறது. #internetshutdown



    இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

    அடுத்த 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டி.என்.எஸ்.-ஐ (டொமைன் நேம் சிஸ்டம்) பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐ.சி.ஏ.என்.என். மேற்கொள்ள உள்ளது. 

    ஐ.சி.ஏ.என்.என். என்பது இணைய சேவையை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு அமைப்பு ஆகும். உலகம் முழுக்க சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று ஐ.சி.ஏ.என்.என். தெரிவித்துள்ளது.   
      
    தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சி.ஆர்.ஏ. வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பான, ஸ்திரமான டி.என்.எஸ்.-ஐ உறுதி செய்ய உலகளாவிய ஷட்-டவுன் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    “மாற்றத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தயாராகவில்லை என்றால் பயனாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான சிஸ்டம் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்,” என்று சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது.
     
    இணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு 48 மணி நேரங்களுக்கு இன்டர்நெட் பயனாளர்கள் இடையூறை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சேவை ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் பி.எஸ்.என்.எல். ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகைகள் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுவதாக கூறப்படுகிறது.

    இரண்டு சலுகைகளும் பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. ரூ.777 விலையில் 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.1,277 சலுகையில் பயனர்களுக்கு 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இரண்டு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2Mbps ஆக குறைக்கப்படும். புதிய பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவோர் இரண்டு சலுகைகளையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ரூ.777 சலுகையை ஒரு வருடத்திற்கு ரூ.8,547 விலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,317 விலையில் வழங்கப்படுகிறது. இதே சலுகையை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த விரும்புவோர் ரூ.23,310 செலுத்தலாம். ரூ.1,277 சலுகையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த ரூ.13,047, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.26,817 மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.38,310 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ.241 சலுகையை மாற்றியமைத்தது. அதன் பின் இந்த சலுகையில் 75 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. #BSNL #offers



    பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள, அந்த வகையில் புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூடுதல் டேட்டா மட்டுமின்றி டவுன்லோடு வேகத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளின் விலை ரூ.3,999 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.16,999 வரை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 1-ம் தேதி துவங்கி, பி.எஸ்.என்.எல். பயனர்கள் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட்: ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகைகளை தேர்வு செய்வோர் கூடுதல் வேகம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர டேட்டா பெற முடியும்.

    ரூ.3,999 சலுகையில் டவுன்லோடு வேகம் 60Mbps ஆகவும், மாதாந்திர டேட்டா அளவு 750 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 50Mbps டேட்டா டவுன்லோடு வேகம் மற்றும் அதிகபட்சம் 500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ரூ.5,999 சலுகையில் தற்சமயம் 70Mbps டேட்டா வேகம் மற்றும் அதிகபட்சம் 1250 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 6Mbps ஆக குறைக்கப்படுகிறது.

    மாற்றப்பட்ட ரூ.9,999 விலையில் 100Mbps வேகம் மற்றும் 2250 ஜிபி டேட்டாவும், நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படும். ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகையில் 100Mbps டவுன்லோடு வேகத்தில் அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் முன்னதாக 100Mbps வேகத்தில் 3000 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. #BSNL #offers
    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Airtel #offer



    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    அதன் பின் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேன்ட் சேவக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இலவச சேவை வழங்கப்படுகிறது.

    இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏர்டெல் செயலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு தைன்-அப் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.

    புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல் 
    தெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.

    அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் தரவுகள் பிரத்யேகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர் சேவைகள் துவங்கப்பட்டது. இதற்கென பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. #BSNL #telecom



    ஆட்பே மொபைல் பேமென்ட் இந்தியா மற்றும் ப்ளின்ட்ரான் இந்தியா என இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவன விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் தங்களது சிஸ்டம்களை பி.எஸ்.என்.எல். மொபைல் உள்கட்டமைப்புகளில் இணைத்து பயனர்களுக்கு சேவையை வழங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்பே நிறுவனம் ஏரோவாய்ஸ் என்ற பிரான்டு பெயரில் இயங்குகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளை டிஜிட்டல் முறையில் இணைக்க முடியும். அந்த வகையில் ஏரோவாய்ஸ் சிம் (வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை மட்டும்) மற்றும் ஐ.எஸ்.பி. (இன்டர்நெட் சேவை) சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ப்ளின்ட்ரான் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த சேவைகளை eSIM4Things என்ற பிரான்டு மூலம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் E&Y நிறுவனத்துடன் இணைந்து ரோபோடிக் பிராசஸ் ஆட்டோமேஷனை அறிவித்துள்ளது.

    இதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணிகளை குறைந்த கட்டணத்தில் மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க வழி செய்யலாம் என கூறப்படுகிறது.

    மே 2016-இல் மத்திய டெலிகாம் துறை வெளியிட்ட விதிமுறைகளின் கீழ் விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்கியிருக்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான். அந்த வகையில் புதிய விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்குவதில் பி.எஸ்.என்.எல். மகிழ்ச்சியடைகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #BSNL #telecom
    மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
    மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    குறிப்பாக தன் கணவன்  மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது.

    பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.



    மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும்.

    காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

    நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், சேவையின் விலை மற்றும் முழு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை அறிவித்து, 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும், ஜிகாஃபைபர் சலுகைகள் மற்றும் விலை குறித்து எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.



    ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னையில், மாதம் 100 ஜிபி டேட்டாவினை, அதிகபட்சம் 8Mbps வேகத்தில் ரூ.499 என கட்டணம் நிர்ணயம் செய்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூருவில் மாதம் 50 ஜிபி டேட்டாவை 40Mbps வேகத்தில் ரூ.799 விலையில் வழங்குகிறது. இந்நிலையில், ஜியோவின் ரூ.700-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் சேவைகள் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்தது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும்.

    ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

    குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிப்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

    குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.



    கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

    இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க "பாஸ்வேர்ட்" உதவும்.

    வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் "சைபர் கஃபே"களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.

    குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.
    உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay




    தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.

    இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

    ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.

    மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

     - உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.

    - உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.

    - உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.

    - வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

    - 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.

    - ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.
     

    கோப்பு படம்

    - சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.

    - உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    - ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    - ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.

    - ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.

    - 2018-ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 
    கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழகத்தில் நெட்வொர்க் பரப்பளவை அதிகரிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் தமிழகம் முழுக்க 2018-2019 நிதியாண்டு வாக்கில் 12,000 புதிய மொபைல் சைட்கள், ஒவ்வொரு தினமும் 32 புதிய மொபைல் சைட்களை கட்டமைக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 52,000 ஆக அதிகரிக்கும்.

    ஏர்டெல் நிறுவனத்தின் பிராஜக்ட் லீப் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதே திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் புதிய ஆப்டிக் ஃபைபர்களை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்க ஆப்டிக் ஃபைபர் பரப்பளவு 17,000 கிலோமீட்டர்களாக அதிகரிக்க இருக்கிறது.

    தமிழகத்தில் 4ஜி சேவைகளை துவங்கிய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. இத்துடன் மாநிலத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் துவங்கி கிராம பகுதிகள், நெடுஞ்சாலைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் அதிவேக மொபைல் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ ஏர்டெல் கட்டமைத்திருக்கிறது.

    தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் சேவையை இதுவரை சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


    'ப்ராஜக்ட் லீக் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக சேவை வழங்க ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, எதிர்காலத் தேவைக்கு ஏற்ற இணைய கட்டமைப்புகளை உருவாக்க தொடர்ந்து முதலீடு செய்வோம்." என தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்துக்கான ஏர்டெல்-ன் தலைமை செயல் அலுவலர் திரு. மனோஜ் முரளி தெரிவித்தார். 
    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.99 முதல் துவங்குகிறது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய பிராட்பேன்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி டேட்டாவில் துவங்கி, 20Mbps வேகத்தில் கிடைக்கும் சலுகைகள் விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு, முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் நோக்கில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.99 விலையில் துவங்கும் புதிய சலுகைகள் அதிகபட்சம் ரூ.399 வரை கிடைக்கிறது. இவற்றில் மாதம் 45 ஜிபி-இல் துவங்கி அதிகபட்சம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஜியோ ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் 100Mbps வேகத்தில் மாதம் ரூ.1000-குள் கட்டணம் கொண்டிருக்கும் என்றும், ஜியோ டிவி சேவைகள் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    BBG ULD காம்போ என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய சலுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவைகளில் நாடு முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    பி்எஸ்என்எல் BBG காம்போ ULD துவக்க சலுகைகள் 45 ஜிபி டேட்டா என தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவு அனைத்து சலுகைகளுக்கும் பொருந்தும். பிஎஸ்என்எல் BBG காம்போ ULD 150 ஜிபி சலுகை ரூ.199 விலையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 


    கோப்பு படம்

    இறுதியில் BBG காம்போ ULD 300 ஜிபி மற்றும் 600 ஜிபி டேட்டா முறையே ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் தினமும் முறையே 10 ஜிபி மற்றும் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 20Mbps வேகத்திலும் டேட்டா வழங்கப்படுகிறது, டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா வேகம் ஒவ்வொரு நாளும் அதிகாலை 12.00 மணிக்கு ரீஸ்டோர் செய்யப்படும்.  

    புதிய பிஎஸ்என்எல் சலுகைகளுடன் இலவச மின்னஞ்சல், 1 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. விளம்பர சலுகை என்பதால் 90 நாட்களுக்கு மட்டுமே இது பொருந்தும், ஆறு மாதத்திற்கு பயன்படுத்தியதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என அழைக்கப்படும் புதிய சலுகையில் பிராட்பேன்ட் இணைப்புக்கு மொபைல் டேட்டா வழங்குகிறது. 

    பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு இந்த சலுகையில் 10Mbps வேகத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்ட சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் மற்றும் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக வாய்ஸ் கால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் பயனர்களுக்கு கூடுதலாக வாய்ஸ் கால் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவன ஃபைபர் பிராட்பேன்ட் அல்லது பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

    சில சலுகைகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்கு மட்டும் அழைப்புகள் வழங்கப்படும் நிலையில், சில சலுகைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையானது ஜியோ ஃபைபர் திட்டத்துக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சலுகையின் மதிப்பு மற்றும் ரீசார்ஜ் சலுகைகளை வைத்து பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் சேவைகள் மாறுபடும். ரூ.249 முதல் ரூ.645 விலையிலான சலுகைகளை தேர்வு செய்வோருக்கு பிஎஸ்என்எல் எண்களுக்கு அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் இந்த சலுகைகள் இரவு நேரத்தில் இலவச அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்குகின்றன. ரூ.645 மற்றும் இதற்கும் அதிக தொகை மதிப்புள்ள சலுகைகளை தேர்வு செய்வோர் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகையின் டேட்டா அளவு இருமடங்கு அதிகரிக்கப்பட்டது. சமீபத்தில் மூன்று ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளை பிஎஸ்என்எல் மாற்றியமைத்தது. ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 சலுகைகளில் கூடுதலாக அதிகபட்சம் 200 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்பட்டது. இத்துடன் ஞாயிற்று கிழமைகளில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் நீட்டிக்கப்பட்டன.

    விரைவில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஃபிக்சட்-லைன் பிராட்பேன்ட் சேவைகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டியை எதிர்கொள்ள முன்கூட்டியே தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. முதற்கட்டமாக ஜியோ ஃபைபர் சலுகைகளில் 1100 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் 100 ஜிபி இலவச டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என அழைக்கப்படும் புதிய சலுகையில் பிராட்பேன்ட் இணைப்புக்கு மொபைல் டேட்டா வழங்குகிறது. பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு இந்த சலுகையில் 10Mbps வேகத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்ட சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ×